Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast
Results 49 to 60 of 105

Thread: தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..!

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

    தலைமை : திரு தாமரை அவர்கள்.

    கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

    உபதலைப்புகள் :


    1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

    2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

    3. தமக்கை................................. கலைவேந்தனின் தெரிவு

    4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு

    5. தமயன்

    6. தனயன்

    7. இல்லாள் ------------------------ஆதனின் தெரிவு.

    8.இணையவன்......................... கீதமின் தெரிவு

    9. தோழி ........................... புதுவை பிரபாவின் தெரிவு

    10.மைத்துனன் ..........................சிவா.ஜி யின் தெரிவு

    11. மகள்.....................................ராஜி சங்கர் தெரிவு

    12. மருமகள்..............................கீழைநாடான் தெரிவு

    13. பாட்டி ..................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

    14. தாத்தா ................................ நாக சுந்தரத்தின் தெரிவு

    15. காதலன்............................... ரீனாவின் தெரிவு

    16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு


    கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

    தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

    காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

    இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

    குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

    கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

    கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

    கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

    அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    நன்றி.
    Last edited by கலைவேந்தன்; 31-07-2012 at 01:38 PM.

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இன்னும் ஏழு தலைப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றினை நான் தெரிவுசெய்தாலும் ஆறுதலைப்புகள் எஞ்சியுள்ளன. கவிஞர்கள் விரைவில் தலைப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.ஆகஸ்ட் மாத முதல் வாரத்திலிருந்து கவியரங்கக்கவிதைகள் பதியக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.

    ஆகஸ்ட் முதல் நாளில் தலைவர் தாமரை முன்மொழிந்து கவியரங்கத்தைத் தொடங்கிவைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்துங்கள் கவிஞர்களே..

  3. #51
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    தோழி என்ற உறவை தேர்வு செய்துகொள்கிறேன்.

    புதுவைப்பிரபா

  4. #52
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் கலை. நான் மன்றம் வராதிருந்த நாட்களில் அறிவிப்பு வந்ததால்...இல்லாளை எடுக்க விரும்பியவனுக்கு கிடைக்கவில்லை...ஆர்ப்பாட்டம் செய்து ஆதன் அவருடையதாக்கிக் கொண்டார். வாழ்க வளமுடன்.

    ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தை வாசித்தபின் இல்லாள் கிடைக்காததும் நல்லதுதான் என நினைத்துக் கொண்டேன்.

    ஊடாடி உதவும் உறவுகள் என்பதில் அந்த ஊடும்...ஆடும்தான் பயமுறுத்துகிறது. சென்னைத் தமிழில் ஊடு கட்டி அடிப்பதை நினைத்து கொஞ்சம் அச்சப்படவே செய்தேன். அதுவும் இல்லாள் இதில் சிறந்தவர்(ஊடு கட்டி அடிப்பதில்....வடிவேலு-சரளா நினைவுக்கு வருகிறார்கள்)

    நான் மைத்துனனை தேர்வு செய்கிறேன்( மன்றக் கவிஞர்கள் மத்தியில் பூவோடு நாராய் நானும் கொஞ்சம் மணக்க முயற்சிக்கிறேன்)

    எனது தேர்வு= மைத்துனன்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. Likes ஆதி liked this post
  6. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அடடா... கடைசி நிமிடத்துல புகைவண்டியை தவறவிட்ட கதையா போச்சே... பிடிச்ச உறவையெல்லாம் நம் மன்ற உறவுகள் பிடிச்சிகிட்டு போயிட்டாங்களே..?!

    ஆமாங்க... நான் ஏதோ கவிதைபோட்டின்னு நினைச்சி இந்ததிரிக்குள்ள கால்வைக்காம இருந்துட்டேன்... இப்ப உள்ள வந்து பார்த்தாதான் தெரியுது.. இது கலையண்ணாவின் கலைவடிவம்ன்னு...!!

    கவியரங்கத்தில் புதுவைபிரபா வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்... ஏன்னு கேட்குறீங்களா.... நான் அந்த உறவை தேர்ந்தெடுத்துதான் ஒவ்வொரு பக்கமாக கடந்து வந்தேன்... கடைசி பக்கத்தில் பார்த்தால் அதை பிரபா எடுத்துகிட்டு போயிட்டாங்க... அதனாலதான் கடுப்புல அவங்கள வாழ்த்துறேனாக்கும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. Likes ஆதி liked this post
  8. #54
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    01 Feb 2012
    Posts
    56
    Post Thanks / Like
    iCash Credits
    11,267
    Downloads
    0
    Uploads
    0
    காதலன் என்ற தலைப்பில் வரிகளை எழுத விரும்பி ..அந்த தலைப்பை தேர்வு செய்கிறேன்...

  9. #55
    புதியவர்
    Join Date
    29 Jul 2012
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    9,711
    Downloads
    0
    Uploads
    0

    தமிழ்மன்றக் கவியரங்கம்.

    14. தாத்தா என்ற தலைப்பில் வரிகளை எழுத விரும்பி ..அந்த தலைப்பை தேர்வு செய்கிறேன்...நன்றி

  10. #56
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    கவியரங்கத்தில் புதுவைபிரபா வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்... ஏன்னு கேட்குறீங்களா.... நான் அந்த உறவை தேர்ந்தெடுத்துதான் ஒவ்வொரு பக்கமாக கடந்து வந்தேன்... கடைசி பக்கத்தில் பார்த்தால் அதை பிரபா எடுத்துகிட்டு போயிட்டாங்க... அதனாலதான் கடுப்புல அவங்கள வாழ்த்துறேனாக்கும்..!!
    அச்சச்சச்சோ....
    நான் இந்த திரிக்குள்ள வந்ததே லேட்டு. எனக்கு பின்னாடி வந்துட்டு ....இப்படி கடுப்பாவலாமா? எப்படியோ முதல் வாழ்த்துக்கு சுகந்தப்ரீதன் அவர்களுக்கு நன்றி!!!

  11. #57
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நாளை வந்து நாயகன் எந்த
    ஆளை அழைப்பார் அருங்கவி பதிக்க ?

    தலைப்பு வரிசைக்கு தக்கன* போன்றா ?
    தலைப்பு விரும்பியோர்க்கு தகுந்தாற் போன்றா ?

    வாராமல் இருந்தாலும் வடிவறியா அவ்வணங்கை
    தீராத ஆசையாலே சிறுகவிஞன் அழைத்து
    சீராக கவிதையிலே செறிவோடு சேர்த்து
    தேராக சோடித்து திருக்கோலம் புனைந்துவிட....

    மெல்லான பார்வையாலே மெதுவெதுவாய் எனைசாய்த்து
    தள்ளாடும் போதையிலே சகலத்தையும் கரைத்துவிடும்
    இல்லாளுக்கு முதலாளாய் இடமிட்ட என்னைத்தான்
    சொல்லாளும் வேந்தன் துவங்குக!கவி எனச்சொன்னால்!!

    கல்யாணம் ஆகாத கன்னிமகன் என்னசெய்வேன்
    கல்லாத வாழ்வைபற்றி எப்படித்தான் கவிசெய்வேன்
    கல்யாணம் ஆகிவிட்ட கணவன்மாரே கொஞ்சமெனக்கு
    கல்யாணம் வாழ்வைபற்றி கற்றுத்தாரும் என்று
    செல்லாத யோசனையை செய்திடவா முடியும்!!
    மல்லாந்து படுத்துகொஞ்ச/சும் மதுமேனி பாவையவளை
    உள்ளார்ந்து யோசித்தொரு உயர்வான சிந்தனையால்
    தெள்ளார்ந்த வார்ர்த்தையோடு திரவியத்தை பாடவேண்டும்

    நோமலரை பாடிடயெனை அழைப்பதாய் இருந்தால்
    கோமகனே! கோமலரே! கூறிவிடும் முன்பே!!!!

    நோமலர் = ஆங்கில 'நோ' என கொள்க
    அன்புடன் ஆதி



  12. #58
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இல்லாள் எனத் தெரிந்தும்
    இல்லாளைத் தெரிந்தவரே...

    கல்லா மாணவனைப் போல
    பொல்லாக்கவலை கொண்டதேன்?

    வீட்டுப்பாடம் செய்யாமல் இத்தனை நாள்
    விட்டம் வெறித்துப் பார்த்திருந்தீரோ?

    நன்னாள் ஒன்றில் நனிமகிழ்வாள்
    நல்லாள் என்றே அகம் நனைக!

    இல்லாளுக்கேற்ற இல்லானாய்
    சொல்லாள வருக! சுவைமிகு கவி தருக!

  13. Likes ஆதி liked this post
  14. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தனயனும் தமையனும் மட்டுமே எஞ்சியுள்ளனர்... அவரைத்தேர்ந்தெடுப்பாருளரோ..? புது உறவினை வேண்டுவோரும் உளரோ..? எவ்விதமாயினும் நாளை முதல் தாமரை அவர்களின் முன்னுரைவரிகளோடு கவியரங்கத்தைத் தொடங்கி வைக்கலாமே..

    தலைவராக தாமரை அவர்களுக்கு முகமன் கூறி முதலில் வரவேற்று கவிதை ஒன்றினை நான் படைக்கிறேன். வேறெவரும் வரவேற்பதெனினும் வரவேற்புகளே..

  15. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    நாளை வந்து நாயகன் எந்த
    ஆளை அழைப்பார் அருங்கவி பதிக்க ?

    தலைப்பு வரிசைக்கு தக்கன* போன்றா ?
    தலைப்பு விரும்பியோர்க்கு தகுந்தாற் போன்றா ?

    வாராமல் இருந்தாலும் வடிவறியா அவ்வணங்கை
    தீராத ஆசையாலே சிறுகவிஞன் அழைத்து
    சீராக கவிதையிலே செறிவோடு சேர்த்து
    தேராக சோடித்து திருக்கோலம் புனைந்துவிட....

    மெல்லான பார்வையாலே மெதுவெதுவாய் எனைசாய்த்து
    தள்ளாடும் போதையிலே சகலத்தையும் கரைத்துவிடும்
    இல்லாளுக்கு முதலாளாய் இடமிட்ட என்னைத்தான்
    சொல்லாளும் வேந்தன் துவங்குக!கவி எனச்சொன்னால்!!

    கல்யாணம் ஆகாத கன்னிமகன் என்னசெய்வேன்
    கல்லாத வாழ்வைபற்றி எப்படித்தான் கவிசெய்வேன்
    கல்யாணம் ஆகிவிட்ட கணவன்மாரே கொஞ்சமெனக்கு
    கல்யாணம் வாழ்வைபற்றி கற்றுத்தாரும் என்று
    செல்லாத யோசனையை செய்திடவா முடியும்!!
    மல்லாந்து படுத்துகொஞ்ச/சும் மதுமேனி பாவையவளை
    உள்ளார்ந்து யோசித்தொரு உயர்வான சிந்தனையால்
    தெள்ளார்ந்த வார்ர்த்தையோடு திரவியத்தை பாடவேண்டும்

    நோமலரை பாடிடயெனை அழைப்பதாய் இருந்தால்
    கோமகனே! கோமலரே! கூறிவிடும் முன்பே!!!!

    நோமலர் = ஆங்கில 'நோ' என கொள்க
    இல்லாளைத் தேர்ந்தெடுக்க இல்லாத ஆட்டமிட்டு
    பொல்லாத பிள்ளைபோல் பிடிவாதம் தனைச்செய்து
    வல்லமை கொண்ட வாக்குவாதம் செய்துபல
    செல்லப் பிள்ளையாய் தேர்ந்தெடுத்த செல்லமே..

    கவிதைக்கொட்டிட குறையேதும் உளதோ உன்
    செவிவழிக்கதைகள் பலகேட்டு வியந்தனன் யான்
    புவியதில் இவ்வயதில் புதுமையாய்ப் பிறந்தவன் நீ
    தவித்திடும் தமிழுக்கு நலமான வரமதும் நீ..

    நிற்க..

    எவ்வரிசையும் இங்கே ஏற்புடையதாம்..
    செவ்வன சிந்தித்து கவியாக்கும் கவிஞர்தம்
    மெவ்விய வரிகளை மெல்லவே பதிந்திடலாம்.
    கவ்விடும் கருத்துகள் களம்காண ஆவலுடன்..

    இம்மன்றப் பெருமக்கள் இலக்கினை நோக்கிநின்றோம்
    தம்தமிழ்க் கவிகளதைத் தயங்காது அளித்திடுங்கள்
    எம்மிரு கரங்கள் விரித்தபடி சேர்த்தணைப்போம்..
    செம்மொழிப் பயிலரங்கே இது பந்தயக்களமன்று..!

    ஐயம் தெளிந்ததா ஞானப்பால் உண்டவனே..?

  16. Likes ஆதி liked this post
Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •