மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.
தலைமை : திரு தாமரை அவர்கள்.
கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.
உபதலைப்புகள் :
1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.
2. தந்தை....................................கலையரசியின் தெரிவு
3. தமக்கை................................. கலைவேந்தனின் தெரிவு
4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு
5. தமயன்
6. தனயன்
7. இல்லாள் ------------------------ஆதனின் தெரிவு.
8.இணையவன்......................... கீதமின் தெரிவு
9. தோழி ........................... புதுவை பிரபாவின் தெரிவு
10.மைத்துனன் ..........................சிவா.ஜி யின் தெரிவு
11. மகள்.....................................ராஜி சங்கர் தெரிவு
12. மருமகள்..............................கீழைநாடான் தெரிவு
13. பாட்டி ..................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு
14. தாத்தா ................................ நாக சுந்தரத்தின் தெரிவு
15. காதலன்............................... ரீனாவின் தெரிவு
16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு
கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.
தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.
காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.
இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.
குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.
கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.
கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.
கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்றி.
Bookmarks