மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.
தலைமை : திரு தாமரை அவர்கள்.
கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.
உபதலைப்புகள் :
1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.
2. தந்தை....................................கலையரசியின் தெரிவு
3. தமக்கை.
4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு
5. தமயன்
6. தனயன்
7. இல்லாள் -------------------------ஆதனின் தெரிவு.
8.இணையவன்......................... கீதமின் தெரிவு
9. தோழி
10.மைத்துனன்
11. மகள்.................................ராஜி சங்கர் தெரிவு
12. மருமகள்
13. பாட்டி ....................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு
14. தாத்தா
15. காதலன்
16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு
கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.
தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.
காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.
இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.
குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.
கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.
கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.
கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்றி.
Last edited by கலைவேந்தன்; 29-07-2012 at 03:16 AM.
கவியரங்கம் களை கட்டட்டும்.
Last edited by Hega; 28-07-2012 at 09:16 AM.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
என்ன ?? ரசிக்க மட்டும் தயாரா ??
தலைப்பை தெரிவு செய்யவில்லையா ?? ஹேமா பாலாஜி ??
கவியரங்க தலைப்பிலேயே நான் எடுத்ததுதான் சரி
ஹி.. ஹி..
எப்படினு சொல்றேன் பாருங்க
கவியரங்க தலைப்பு ஊடாடி உதவும் உறவு
நம்ம ஊரு சென்னை, சென்னை தமிழில் "ஊடு" என்றால் வீடு என்று பொருள்
ஆடி = ஆடல்,ஆட்டுதல், கண்ணாடி, ஆட்சி, மாதம்
ஆட்சியின் வேர் ஆள்
வீட்டை ஆண்டு உதவும் உறவு
வீடு ஆடி = வீட்டின் நிலை கண்ணாடி
வீட்டின் நிலைக்கண்ணாடிக்கு தான் நம் முழுமை தெரியும், நல்ல கெட்ட என்று எல்லாவற்றையும் அது பார்த்தும், யாருக்கும் வெளி சொல்லாமல் நம்மை காக்கிறது
மனையாளும் அப்படித்தான் இல்லையா ?
ஆடி = கண்ணாடி
வீட்டின் கண்ணாடியாய் இருப்பவள், வீட்டை பிரதிபளிப்பவளே அவள் தானே
வீட்டின் கண் ஆடி, வீடே தன் உலகம், அதனில் உள்ள நல்ல கெட்ட என்பது ஏற்க ஆடுபவள்
வீடு என்பதை உடம்பாக கொண்டால்
ஆடி என்பது மனசாட்சி, இல்லாள் தானே நம் மனசாட்சியாகவும் நாமாகவுமே இருக்கிறாள்
இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
Last edited by ஆதி; 28-07-2012 at 08:17 AM.
அன்புடன் ஆதி
நண்பன், தோழி, காதலன், காதலி இவைகளெல்லாம் குடும்ப உறவுகள் ஆகுமா?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
உறவுகள் என்ற வகையில் மனித உறவுகளாகத்தான் அனைத்து உறவுகளையும் கொண்டோம் ஐயா.. எனவே நண்பர்கள் காதலர்களும் உறவுகளே..
கவிஞர் பெருமக்கள் எஞ்சியிருக்கும் தலைப்புகளைத் தெரிவு செய்து கவிதைகளை எழுதத்தயாராகுங்கள்..
ஹேமா பாலாஜி அவர்களே.. நீங்களும் ஒரு தலைப்பினை எடுத்துக்கொள்ல வேண்டுகோள் விடுக்கிறேன்.
இன்னும் மன்றக்கவிஞர்கள் கண்களில் இத்திரி படவில்லையோ என்னவோ..?
எவரும் தெரிவு செய்யவில்லை எனில் தமக்கையையோ தங்கையையோ தாத்தாவையோ யான் எடுக்கலாம் என எண்ணுகிறேன்.
"தங்கை" என்ற உறவை "ரெளத்திரன்" தேர்வு செய்கிறேன் கலைவேந்தன் அவர்களே!
----------ரெளத்திரன்
பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்
அவ்வண்ணமே ஆகட்டும் ரௌத்திரன்..
நண்பர்களே எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை. பொருத்தமான வார்த்தைகளை அழகாய் கோர்த்து..!!! கவிதை பெரிய கலை!
ஆனாலும் மயிலை பார்த்து வான்கோழி ஆடுவது போல் நம் கவிஞர் பெருமக்களை பார்த்து எனக்கும் பங்கு பெற ஆவல். (கவிஞர் பெருமக்ககள் பொருத்தருள்க)
"மருமகள்" என்ற உறவை நான் தேர்வு செய்கிறேன் கலைவேந்தன் அவர்களே.
கீழை நாடான்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks