தாய் என்னும் தலைப்பை நான் எடுத்துக்கொள்ளட்டுமா கலை அண்ணா ?
தாய் என்னும் தலைப்பை நான் எடுத்துக்கொள்ளட்டுமா கலை அண்ணா ?
LIVE WHEN YOU ARE ALIVE !
ஊடாடி உதவும் உறவுகளில் நாளெல்லாம்
தேடோ தேடென்று தேடியே சலித்தேன்
பாட்டிஎனும் உறவு இல்லையே என்பதனைக்
காட்டவே இக்கவியை நானெழுது கின்றேன்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.
தலைமை : திரு தாமரை அவர்கள்.
கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.
உபதலைப்புகள் :
1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.
2. தந்தை....................................கலையரசியின் தெரிவு
3. தமக்கை.
4. தமயன்
5. தனயன்
6. இல்லாள் ------------------------- ஆதனின் தெரிவு.
7.இணையவன்
8. நண்பன்
9. தோழி
10.மைத்துனன்
11. மகள்
12. மருமகள்
13. பாட்டி ....................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு
14. தாத்தா
கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.
தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.
காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.
இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.
குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.
கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.
கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.
கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்றி.
இப்பட்டியலில் இல்லாத உறவுகளை நீங்கள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்துக் கொண்டால் இணைத்துவிடுவேன் நண்பர்களே..
நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
இணையவன் என் தேர்வு.
" ஊடாடி வந்த உறவுகள் " கவியரங்கம் குறித்த
தலைப்புகளின் ஊடாலே, உலக காதலர்கள் தம்
ஊனாக ,உயிராக ,உயிரோடு உயிராக
உறவாடும் காதலின், உயிராய் விளங்கும்
"காதலி"யினை தலைப்பாய் இணைத்திடும் பட்சம்
பெரும் கவிகளோடு கைகோர்த்திட வழியின்றியும்
கைபிடித்தபடி, இந்த கத்துக்குட்டி கவிஞனும்
களம் காண்பேன் என் கிறுக்கல்களோடு .....
காத்திருப்பு பட்டியலில் என் " காதலி "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks