Results 1 to 7 of 7

Thread: இரவு

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Feb 2007
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    15,831
    Downloads
    29
    Uploads
    0

    இரவு

    நிஜம் புதையும் நிலா இரவுகளில்,
    கனவுகளின் படியில் அமர்ந்து பயணிக்கிறேன்..

    இருள் விலகும் நேரங்களில்,
    திட்டுத்திட்டாய் படிந்திருக்கும் நினைவுகளோ
    கோர்வையானதொரு கதைகளை தருவதில்லை..

    ஊர் உறங்கும் ஓசையில்,
    ஆர்ப்பரிக்கும் களவுக் கூட்டம்
    இரவின் கிளைகளில் நிரந்தரப் பறவைகளாய் மாறி விடுகின்றன..

    மெல்ல அடங்கும் முனங்கல் ஒலிகளில்,
    உறக்கும் தொலைக்கும் கதிரவன் கண்கள் ,
    இரவுகள் விதைத்த உயிர்களின் எண்ணிக்கைத் தேடி
    அறைகளின் ஜன்னல் எட்டிப் பார்க்கின்றது....

    வீதி அலங்கரித்த மஞ்சள் நிற இரவுகளில்,
    காதலின் கடைசிக் கணங்களை
    கண் சிமிட்டிப் பார்க்கும் நட்சத்திரங்களும்,

    இரு உயிர்கள் பிணையும் இரவுகளில்,
    மேகக் கரங்களால் தன் முகம் மறைக்கும் நிலவுகளும்,
    ஒவ்வோர் இரவின் பிரதிகளை,
    தன்னோடு கொண்டு போகவே செல்கின்றன..

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இரவின் முகம் காட்டும் அழகான கவிதை. வாழ்த்துக்கள் ப்ரேம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நித்தமும் பார்த்தாலும்

    சலிப்பதில்லையாம் நிலவுக்கு

    இரவுக் காட்சிகள்!

    அழகான கவிதை. பாராட்டுகள் பிரேம்.

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Feb 2007
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    15,831
    Downloads
    29
    Uploads
    0
    நன்றி சிவா.ஜி..

    நன்றி கீதம்..

    காலம் தாழ்த்தி பதில் இட்டமைக்கு மன்னிக்கவும்..

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அற்புதம்..

    தினம் வரும் கதிரவன்
    விளைச்சலைப் பார்க்க வருகிறானா...??

    நான் விளைவிக்கவென்றல்லவா நினைத்தேன்..!! ;-)

    பாராட்டுகள்..

    தொடரட்டும் உங்கள் பகல்-இரவுகளும்.. அவை தரும் கவிதைகளும்..


    சிறு பிழையென நினைக்கிறேன்..

    மெல்ல அடங்கும் முனங்கல் ஒலிகளில்,
    உறக்கும் தொலைக்கும் கதிரவன் கண்கள் ,
    'உறக்கம் தொலைக்கும்' என்பது சரியாய் இருக்குமென நம்புகிறேன்.. மாற்றுங்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 May 2012
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    12,462
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை வரிகள் அருமை...
    இரவு நிலவை கொண்டு காதல் தவிர்த்து
    காமத்தை சொன்ன விதம் புதுமை!
    பாராட்டுக்கள் பிரேம்!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    இரு உயிர்கள் பிணையும் இரவுகளில்,
    மேகக் கரங்களால் தன் முகம் மறைக்கும் நிலவுகளும்,
    ஒவ்வோர் இரவின் பிரதிகளை,
    தன்னோடு கொண்டு போகவே செல்கின்றன..
    அருமை ப்ரேம்
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •