நிஜம் புதையும் நிலா இரவுகளில்,
கனவுகளின் படியில் அமர்ந்து பயணிக்கிறேன்..
இருள் விலகும் நேரங்களில்,
திட்டுத்திட்டாய் படிந்திருக்கும் நினைவுகளோ
கோர்வையானதொரு கதைகளை தருவதில்லை..
ஊர் உறங்கும் ஓசையில்,
ஆர்ப்பரிக்கும் களவுக் கூட்டம்
இரவின் கிளைகளில் நிரந்தரப் பறவைகளாய் மாறி விடுகின்றன..
மெல்ல அடங்கும் முனங்கல் ஒலிகளில்,
உறக்கும் தொலைக்கும் கதிரவன் கண்கள் ,
இரவுகள் விதைத்த உயிர்களின் எண்ணிக்கைத் தேடி
அறைகளின் ஜன்னல் எட்டிப் பார்க்கின்றது....
வீதி அலங்கரித்த மஞ்சள் நிற இரவுகளில்,
காதலின் கடைசிக் கணங்களை
கண் சிமிட்டிப் பார்க்கும் நட்சத்திரங்களும்,
இரு உயிர்கள் பிணையும் இரவுகளில்,
மேகக் கரங்களால் தன் முகம் மறைக்கும் நிலவுகளும்,
ஒவ்வோர் இரவின் பிரதிகளை,
தன்னோடு கொண்டு போகவே செல்கின்றன..
Bookmarks