Results 1 to 3 of 3

Thread: இதயத்திற்கு ஒரு வேண்டுகோள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    80,866
    Downloads
    16
    Uploads
    0

    இதயத்திற்கு ஒரு வேண்டுகோள்.

    ஓசையுடன் துடிக்கின்ற இதயமே ! உன்னுடைய
    ஓசையைக் கொஞ்சம் குறைத்துக்கொள் உன்னுள்ளே
    கருத்துக்கினிய என்காதலி கண்மூடித் தூங்குகிறாள்.

    ஓ இதயமே ! என்காதலி
    நித்திரை கலையாமல் நிம்மதியாய் உறங்கிடவே
    நீலாம்பரி என்னும் தாலாட்டு இராகத்தில்
    நித்தமும் துடித்தே கண்வளரச் செய்திடுவாய்!

    ஓயாமல் துடிக்கின்ற இதயமே!
    அடுத்த மாதம் உனக்கு அறுவை சிகிச்சையாமே!
    விடுக்கின்றேன் உனக்கு ஓர் எச்சரிக்கை !
    காதலியின் மீது கத்தியேதும் பட்டுவிடாமல்
    கவனமாய் பார்த்திடுவாய்! காதலியைக் காத்திடுவாய் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    236,355
    Downloads
    69
    Uploads
    1
    என்னய்யா நீங்க... வேண்டுகோள்ன்னு சொல்லிட்டு இப்படி இதயத்தை மிரட்டுறீங்க..

    ம்ம்ம்... இதயம் படத்துல முரளிக்கூட இந்த அளவுக்கு “ஃபீல்” பண்ணியிருக்கமாட்டாரு போல..

    நீங்க கலக்குங்க ஜெகதீசன் ஐயா..!!
    Last edited by சுகந்தப்ரீதன்; 13-07-2012 at 08:41 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    51
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,126
    Downloads
    21
    Uploads
    1
    மிகை அழுத்தம் (சத்தமின்றித் துடிக்கவேண்டுமாமே), மிகை பாரம் (காதலியையும் தாங்க வேண்டும்), மிகைப்பளு (நீலாம்பரி வேறு பாடவேண்டுமாம்)

    இவற்றால் மிகை சோர்வு ஏற்பட்டு இயக்கம் தாறுமாறாக, தற்காக்க அறுவைக்கு ஆளாகிறேன்.

    ஆனாலும் உமக்கு என்னிலும் அவளிடம் எத்தனைக் கரிசனம்!

    உமது வேண்டுகோளே தூண்டுகோலாக, துடிப்புடன் மீள்வேன், உமதுயிர்க் காதலி மீதாணையாய்!

    கவிதை அழகு. வித்தியாசமானக் கவிக்கருவுக்குப் பாராட்டுகள் ஐயா.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •