Results 1 to 11 of 11

Thread: அவளும் அவள்சார்ந்த இடமும்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0

    அவளும் அவள்சார்ந்த இடமும்

    கோவில்களில்மட்டும் நுகர்ந்து பழகியிருந்த
    புனிதவாசனை பரவிக்கிடந்தது அவள் அறையில்;
    என்னவென்று சென்று பார்த்தேன்
    என் தேவதை உடைமாற்றியிருந்தாள்;

    எழுதாமல் ஊடல் செய்துகொண்டிருந்த பேனாவிற்கு
    இதழ்சிகிச்சை செய்து எழுத வைக்கிறாள்;
    இதைத்தான் எதிர்பார்த்தேனென்று அவள்
    கைவிரல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது;

    ஜன்னல் கம்பிகளுக்குள் தகராறு
    அங்கேபாரேன் அழகியபூச்செடி என்றவளை
    நேற்றிரவு சேகரித்த மழைத்துளிகளால்
    கன்னம் நனைத்திடத் துடிக்கிறது;

    அழகனைத்தையும் அடைந்துவிட்ட மமதையில்
    ஆட்டம் காட்டுகிறது உன் அறைப்படுக்கை
    நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
    என்று ஏங்கச் செய்து விடுகிறது!!

    எவ்ளோநேரம் வா போகலாமென்கிறாய்
    என் சிதறிய இதயத்தை சேகரித்துக் கொண்டு
    ஒன்றுமறியா உன் உயிர் நண்பனாய் வெளியே வர
    இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டுமடி எனக்கு..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    14,468
    Downloads
    0
    Uploads
    0
    ஹை. ரொம்ப நல்லா இருக்குப்பா கவிதை. வாழ்த்துக்கள் ராஜி.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    60
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    21,582
    Downloads
    10
    Uploads
    0
    இது ஒரு சங்கடமான நிலை.

    எப்படியோ அறிமூகமாகி உயிர் நண்பனாய்ப் பரிமளித்து தன் தோழியின் அழகும் குணமும் அதிகமாகக் கவர்ந்துவிட தன் நட்பினைக் காத்துக்கொள்ளத் தவிக்கும் நிலை மிக துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    உயிர்த்தோழி காதலியாய் மாறுவது ஒன்றும் வியப்பில்லைதான். அதனை அவள் அழகின் ஒவ்வொரு படிமானத்தையும் முதல் வரியில் இருந்து கோர்த்துக்கொண்டே வரும்போதே தெளிவடையச் செய்கிறது.


    அழகான கவிதைக்கு பாராட்டுகள் ராஜி அவர்களே..!

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    176,696
    Downloads
    39
    Uploads
    0
    அழகுணர்வு பரிமளிக்கும் சுகமான வரிகள். நட்பு காதலாய் மாறும் இரசாயன விளைவு ஒருபக்க நினைவுகளாய் அழகாய் தெரிவிக்கப்படுகிறது.

    பாராட்டுக்கள்ம்மா தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    52
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,266
    Downloads
    21
    Uploads
    1
    பத்திகளில், நுழைந்து வார்த்தைகளில் பரவியதோடு, எழுத்துக்களிலும் இடைச்செருகிய காதல், இன்னும் ஏன் அவள் மனம் செருகவில்லை என்பது வியப்புதான்.

    உடை, பேனா, ஜன்னல் கம்பி, படுக்கை என்று அவள் ஸ்பரிசம் படும் ஒவ்வொன்றையும் பார்த்து ஏங்கும் ஏக்கம் ரசனை. எத்தனை நாள்தான் எட்டநின்று நண்பனாய் நடிப்பது?

    என்றேனும் காதல் ஏற்றுக் கைப்பிடிக்குள் சிறைப்படுத்தமாட்டாளா என்று ஏங்கிச் சிதறும் இதயத்தின் வேதனையை அழகாய்ப் பிரதிபலிக்கும் வரிகள்.

    புனிதவாசனை! சொல்லும்போதே அதை நினைவுக்கும் நுகர்வுக்கும் கொண்டுவந்துவிடுகிறது மனம். அழகிய ரசனையான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by HEMA BALAJI View Post
    ஹை. ரொம்ப நல்லா இருக்குப்பா கவிதை. வாழ்த்துக்கள் ராஜி.
    நன்றி ஹேமா மச்சி... ( சும்மா செல்லமா)
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    இது ஒரு சங்கடமான நிலை.

    எப்படியோ அறிமூகமாகி உயிர் நண்பனாய்ப் பரிமளித்து தன் தோழியின் அழகும் குணமும் அதிகமாகக் கவர்ந்துவிட தன் நட்பினைக் காத்துக்கொள்ளத் தவிக்கும் நிலை மிக துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    உயிர்த்தோழி காதலியாய் மாறுவது ஒன்றும் வியப்பில்லைதான். அதனை அவள் அழகின் ஒவ்வொரு படிமானத்தையும் முதல் வரியில் இருந்து கோர்த்துக்கொண்டே வரும்போதே தெளிவடையச் செய்கிறது.


    அழகான கவிதைக்கு பாராட்டுகள் ராஜி அவர்களே..!
    நன்றிங்க கலை அண்ணா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அழகுணர்வு பரிமளிக்கும் சுகமான வரிகள். நட்பு காதலாய் மாறும் இரசாயன விளைவு ஒருபக்க நினைவுகளாய் அழகாய் தெரிவிக்கப்படுகிறது.

    பாராட்டுக்கள்ம்மா தங்கையே.
    நன்றிங்க சிவா அண்ணா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    பத்திகளில், நுழைந்து வார்த்தைகளில் பரவியதோடு, எழுத்துக்களிலும் இடைச்செருகிய காதல், இன்னும் ஏன் அவள் மனம் செருகவில்லை என்பது வியப்புதான்.

    உடை, பேனா, ஜன்னல் கம்பி, படுக்கை என்று அவள் ஸ்பரிசம் படும் ஒவ்வொன்றையும் பார்த்து ஏங்கும் ஏக்கம் ரசனை. எத்தனை நாள்தான் எட்டநின்று நண்பனாய் நடிப்பது?

    என்றேனும் காதல் ஏற்றுக் கைப்பிடிக்குள் சிறைப்படுத்தமாட்டாளா என்று ஏங்கிச் சிதறும் இதயத்தின் வேதனையை அழகாய்ப் பிரதிபலிக்கும் வரிகள்.

    புனிதவாசனை! சொல்லும்போதே அதை நினைவுக்கும் நுகர்வுக்கும் கொண்டுவந்துவிடுகிறது மனம். அழகிய ரசனையான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.
    உணர்ந்த ரசித்ததற்கு மிக்க நன்றி கீதம் அக்கா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    60
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    47,328
    Downloads
    7
    Uploads
    0
    நல்லாருக்கு ராஜி...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    நல்லாருக்கு ராஜி...
    நன்றி அண்ணா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •