Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: ஆத்திரக்காரனுக்கு....குறுங்கதை

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0

    ஆத்திரக்காரனுக்கு....குறுங்கதை

    திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு ,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் சடகோபன். வேகத்தை ரசித்தபடியே முன்சீட்டில் தொழிலதிபர் பார்த்தீபன் பயணித்துக்கொண்டிருந்தார்.

    கார் தீவனூரை நெருங்கியபோது, திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார். சடகோபன் சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கää பார்த்தீபன் பதறியடித்துக்கொண்டு " யோவ் ! யோவ் ! மோதிடப்போறீயா. . . " என கூக்குரலிட்டார். எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் சடகோபன்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார், பார்த்தீபன். அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    -புதுவைப்பிரபா -

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காரின் வேகத்தை மட்டுப்படுத்த, கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது ஒரு விபத்து.

    ஆத்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்த நொடியே அரங்கேறியது ஒரு கொலைச்செயல்.

    வேகக் கட்டுப்பாடு, சாலைப்பயணத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்துக்கும் தேவை.

    குறுங்கதையில் பெரிய விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் புதுவை பிரபா.

  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ஏறத்தாழ நவ்ஜோத் சிங் சித்து இதே மாதிரி ஒரு சின்ன சாலை விபத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு மரணத்துக்கு காரணமாகி 3 வருட சிறை தண்டனை பெற்றார்(1988 ல் நடந்த சம்பவத்திற்கு தீர்ப்பு 2006 ல் வழங்கப் பட்டது.) அவர் தமது எம்.பி பதவியை அதனால் இராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

    உடனே அவர் உச்ச நீதி மன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்ல 2007 ஜனவரியில் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவர் 2007 தேர்தலிலும் போட்டியிட்டு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

    இந்தக் கதை இப்படி உண்மைச் சம்பவமாகவே இருந்தாலும் கோர்ட்டு கேஸூன்னு அலையப் போறது சடகோபனா பார்த்தீபனா என்ற கவலையும் வருகிறது, யதார்த்த உலகத்தில்...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தாமரை சொன்னதைப்போல அலையப்போவது சடகோபன் என்றாலும் காரின் உரிமையாளராய் பார்த்தீபனுக்கும் தலைவலி. ஆனால்....இந்த ஆத்திரத்தால் விளைந்தது கொலைப்பழி. மோட்டார் விகடனில் ஒரு விஷயம் சொல்லியிருந்தார்கள். சாலையில் வாகனம் ஓட்டும்போது இப்படி குறுக்கிடுபவர்கள், சாலைவிதிகளை மதிக்காமல் ஓட்டுபவர்கள் என எல்லோர் மீதும் கோபம் கொண்டால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் மீது கோபப்படாதீர்கள்...நிதானமாய் செயல்படுங்கள் என்று.

    அதை பார்த்தீபன் கடைபிடித்திருந்தால்....இந்த வீணான மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். நல்ல செய்தி சொல்லும் கதைக்கு வாழ்த்துக்கள் பிரபா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    குறுங்கதையில் பெரிய விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் புதுவை பிரபா.
    நல்ல செய்தி சொல்லும் கதைக்கு வாழ்த்துக்கள் பிரபா.
    குறுங்கதையாயினும் அதை பெரிய மனதோடு பாராட்டியிருக்கிற கீதம், தாமரை ,சிவாஜி அவர்களுக்கு நன்றி .

    உண்மையில்....எனக்கேற்பட்ட அனுபவத்தை மையமாககொண்டு எழுதப்பட்டதுதான் இக்கதை.... (ஆனால்...அரைவிடுதலுக்கு முன் வரை உண்மை...அதற்குப்பிறகு கற்பனை...)

  7. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    கோபத்தை அடக்குவது நல்லது.
    சில வரிகளில் கதையை சொன்னாலும் சொல்ல வந்த கருத்து அவசியமானது. நன்று.

    கீழை நாடான்

  8. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by Keelai Naadaan View Post
    கோபத்தை அடக்குவது நல்லது.
    சில வரிகளில் கதையை சொன்னாலும் சொல்ல வந்த கருத்து அவசியமானது. நன்று.
    நன்றி சார்...

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    குறுங்கதையாயினும் படிப்பினை கூறுங்கதை..

  10. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    ஆத்திரத்தில் அறிவை இழந்து விடாதீர்கள் என்ற படிப்பினையைத் தரும் கதை. பாராட்டுக்கள் பிரபா!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  11. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு..கோபம் ஒரு கொலை செய்யவும் தயங்காது..
    சின்ன கதை பெரிய விசியம்..
    என் வாழ்த்துக்கள்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கருத்தில் கொள்ள வேண்டிய கருவுடன் கூடிய குறுங்கதை.

    பார்த்தீபனின் செயல்களில் அவனுடைய ஆத்திரக் குணவியல்பு மட்டும் அல்ல, அதிகாரக் குணவியல்பும் வெளிப்படுகிறது.

    நறுக் கதைக்கு பாராட்டு பிரபா.

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வேகம் விவேகமல்ல, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, போன்ற நீதிகளை குறுங்கதையில் எடுத்துச் சொன்ன புதுவைபிரபாவுக்குப் பாராட்டுக்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •