Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 39 of 39

Thread: சட்டத்தின் படி- சுவாரஷ்யமான தொடர்கதை

                  
   
   
  1. #37
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    சட்டத்தின் படி(15) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

    சென்ற வாரம்

    ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.
    முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
    ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....
    என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?



    காலில் முள் குத்தியதா? காலில் கல் பட்டதா என்பதனைக் கூட அறிய முடியாத நிலையில் உள்ள ஓட்டம.


    நெஞ்சினிலே பதற்றமும் பதைபதைப்பும் நிறைந்துயிருந்தும் கடவுளை வினாடிக்கு வினாடி முருகன் முத்தாய்யம்மன் வரை என் குழந்தைகளுக்கு எதுவும் நேரக்கூடாது என் குழந்தைகளை காப்பாற்று என வேண்டியபடி பள்ளிpக்கூடத்தை நெருங்கினாள்.


    அம்மா அம்மா என்ற குரல் கேட்டு எங்கடி தியாகு ? என்று மகள் தயமந்தியைப்பார்த்து கேட்டாள் ராசாத்தி.


    கூட வந்த முத்து தமயந்தியைக் கட்டித் தழுவி சாமி கண்ணு உனக்கொன்னும் ஆகலயே?


    அண்ணா வான்னா, அவதான் நல்லாயிருக்கா இல்லே..தியாகுக்கு என்ன ஆச்சோ கடவுளே அவனுக்கு ஒன்னும் ஆகக் கூடாது என்று சற்று சப்தமாக சொல்லியபடி கூட்டத்தை நெருங்கினாள்.


    அத்தை அத்தை என்று கூப்பிட்டபடி தியாககு ஓடி வந்து ராசாத்தியை கட்டடி பிடித்து கொண்டாள்.


    தியாகுவை உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிட்டபடி என் ராசா உனக்கு ஒண்ணுமாகாது நான் கும்பிட்ட கடவுள் நமக்குத் துணையிருக்கு என்று சந்தோசத்தில் தன்னையும் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.


    பின்னாலே மூச்சு வாங்கி கொண்டு வந்த பாட்டி சற்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி டேய் முத்து பார்த்தாயாடா தான் பெத்த புள்ளையைக் கூட மறந்துட்டு உன் பையன் மேலே எவ்வளவு பாசமாயிருக்கா..


    முத்து தமயந்தியை தோளில் தூக்கி வைத்து தலையை வருடிக் கொண்டிருப்பதைப்பதை பார்த்த ராசாத்தி பாட்டி அண்ணனுக்கு தமயந்தியின்னா உயிரு. என்று பேச்சை மாற்றினாள் ராசாத்தி.


    உடனே பாட்டி “சரி சரி எந்த கொள்ளிக் கண்ணாவது உங்க மேலே பட்டுற போகுது.”


    பாட்டியின் கோபம் உடனே பள்ளியின் பஸ் ஓட்டிய டிரைவர் மீது பாய்ந்தது. கோபம் தீம்பிளம்பாய் வெடித்தது.


    யோவ் உங்கொழந்தை இப்படி செத்திருந்தா துடிச்சு போவாயா இல்லை உம் பொண்டாட்டிக்கு அலுவாயும் மல்லிகைப் pooவையும் வாங்கிக் கொடுத்து கொஞ்சி விளையாடுவியா? ஒன்;னா ரெண்டா அடுக்கடுக்கா எத்தனைப் பிஞ்சுகள்? ஓட்ட வண்டி காத்து கணக்கா வேகம் ஒரே வண்டியில 300 குழந்தைகளை 9 மணிக்குள் சேத்தியாகனும் என்ன கொடுமை முதல்ல இப்படிப்பட்ட பள்ளிக் கூடத்தை மூடணும்.


    அப்புறம் இவன் மாதிரி டிரைவருடைய பரம்பரைக்கே லைசன்ஸ் தரக்கூடாது. காலமெல்லாம் களி திங்க வைக்கணும்.இதெல்லாம் இந்த அரசாங்கம் எப்போ செய்யப் போகுதோ?


    பாட்டியின் ஆவேசமான பேச்சு கூட்டம் மொத்தமும் பாராட்டியது.


    அத்தை…


    என்னப்பா தியாகு?


    எனக்கு இந்த இங்கிலீஸ் பள்ளிக்கூடம் வேண்டாம்…


    ஏன்?


    அம்மா நாங்க அரசாங்கப் பள்ளிக் கூடத்திலே படிக்கிறோம் என்றாள் மகள் தமயந்தி.


    ஆமா அத்தை நீங்களோ அப்பாவோ காலையிலும் மாலையிலும் கூட்டி கோக வந்துடுவீங்க. எங்களுக்கும் பயமில்லை உங்களக்கும் பயமில்லை இல்லயா?
    என்னம்மா ராசாத்தி குழந்தைகள் சொல்றது எனக்கு சரியின்னு படுது உனக்கு?
    இல்லையிண்ணா…இங்கிpலிஸ் பள்ளிக்கூடத்திலே படிச்சு நாளைக்கு பெரிய படிப்புக் கெல்லாம் வசதியாயிருக்கும்


    அய்யோ அத்தை அங்கேயும் இங்கிலிஸ் எல்லாம் சொல்லி தராங்க. மத்தியானம் சாப்பாடு கூட தராங்க. புத்தகம் துணிமணி எல்லாம் சும்மா தராங்க.




    ஆமாம்மா. நாங்க ரெண்டு பேரும் வாத்தியார் நடத்துறதே கேட்டு நல்லபடியா படிச்சுக்கிறோம். கவலைப் படாதேயம்மா என்றாள் தமயந்தி.


    கார் ராசாத்தி தமயந்தி எவ்வளவு தெளிவா சொல்லறா இது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்.


    ஆமாண்ணே தியாகுவும் இதைத்தான் சொல்றான். குழந்தைகள் விருப்பப்படி யே செய்திடலாம். ஏ தியாகு அங்க எத்தனை வகுப்பு வரையிருக்கு? 12 வரை யிருக்கும்மா?


    ஆமா அத்தை 12 வகுப்பு வரை யிருக்கு. சரி ராசாத்தி டி சி யை வாங்கி ரெண்டு பேரையும் சேர்த்திடலாம் என்றான் முத்து.


    அப்போ 6 வருசம் இந்த கவர்ன்மென்ட் பள்ளியில படிக்கலாம்ல்ல? சந்தேகமே வேண்டாம் என்று முடிப்பதற்குள்


    பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி


    அதென்ன சிக்கல்?


    அடுத்த வாரம் பார்ப்போம்.

  2. #38
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    சட்டத்தின் படி(16) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
    சென்ற வாரம்

    பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி


    அதென்ன சிக்கல்?

    என்னடா சிக்கல் என ஆத்திரத்துடன் கேட்டார் முத்து.

    அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ன இத்தனை நாளும் இங்கிலிஸ் படிச்சதுக்கே அனி தமிழிலே தான் எல்லாம் பேசனும் இங்கிலிஸ் பேச வாய்ப்பில்லையே அதுதான் சிக்கல்

    அடச்சீ அங்கேயும் இங்கிலீஸ் சொல்லி தராங்க. டேய் நீ பொறந்த உடனே அம்மா அன்னுதான் அழுத. மம்மி மம்மி அம்மி அம்மி ன்னடா அழுத?

    என்னயிருந்தாம் இங்கிலீஸ் பள்ளிக்கூடம் மாதிரி வருமா?

    ஆமாண்டா வராது வரவே வராது எல் கே ஜி க்கே 20 ஆயிரம் உக்காந்தா காசு எந்திருச்சா காசு ஓட்டவண்டிக்கு காசு.

    டேய் இந்தியாவுல வேண்டாம் தமிழ்நாட்டுல எடுத்துக்கோ தமிழ்லே படிச்சு எத்தனை கலெக்டர், போலீஸ் அதிகாரி, விஞ்ஞானியாக எல்லாம் இருக்காங்க. அவங்களுக் கல்லாம் என்ன இங்கிலீஸ் தெரியாதா, அடேய் இவனே திருக்குறளை இன்னைக்கு உலக மொத்த மொழியிலும் எழுதிதாண்டா. ஜப்பான் காரானுக்கும் சைனாக்காரனுக்கும் இங்கிலீஸ் தெரியாது ஆனா அது வல்லரசு நாடுடா வெறும் பகட்டு கவுரவம் பார்த்து பாலாய் போனது போதும் எங்கொழந்தைகள் தமிழ்ல படிகத்கட்டும் எடுத்த காலி பண்ணு என்ன ராசாத்தி நான் சொல்றது?

    ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க..ஆமா இவ்வளவு விசயம் உங்களுக்கு எப்படித் தெரியுமண்ணே?

    அப்ப அப்போ தமிழ் மன்றமும் தமிழ் ஆர்வம் உள்ளவங்க கூட்டத்தில் பேசறத கேட்பேன். என்னயிருந்தாலும் ஒடம்பிலே ஓடுறது தமிழ் ரத்தம் தானே?
    முத்துவும் ராசாத்தியுமு; பரிப+ரண திருப்தியாக தன் குழந்தைகளை அரசாங்;க பள்ளியில் சேர்த்தனர்.

    தனியார் பள்ளிக்கு இணையாக தம் பள்ளியை ஆமம்படுத்தும் முயறிசியில் தலைமையாசிரியர் முதல் கழட நிலை ஊழியர் வரை கடுமையாக உழைத்ததின் பலன் படிப்பு விளையாட்டு கனனி அறிவியல் என்ற முறையில் தமிழ் நாட்டல் அரசு பள்ளி முதன்மை இடம் பெற்றது. அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முத்துவின் மகன் தியாகு விளையாட்டுத் துறையில் மாவட்ட அளவில் முதலானவனாக வந்தான். படிப்பிலும் சோடை போகவில்;லை.

    ராசாத்தியின் மகள் தமயந்தி தமிழில் மிகவும் ஆர்வமுள்ளவளாக கட்டுரை கவிதை ஓவியம் என பல துறைகளில் பிரகாசித்தாள். ஆங்கிலமும் கணிதம் கடின என்ற வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்..

    ஆக தியாகு தமயந்தியின் மேல் ஆசிரியர்கள் தனி கவணம் செலுத்தினார்கள்.
    இவ்விருவரின் வளர்ச்சியின் ;ராசாத்திக்கு பெரும் பங்குண்டு.சும்மா படி படி என நச்சரிகக்காமல் விளையாட்டு என விளையாட்டையும் அனுமதிதத்தாள்.

    குழந்தை பருவம் முதலே கண்டிப்பு கலந்த பாசத்துடன் வறுமை என்றால் என்ன என்று உணரும் படியும் சில சமயம் புரியும் படியும் செய்வாள்.

    ஆடம்பரமான பொருளை அறவே ஒதுக்கி தள்ளினாள். மீறி கேட்டாள் வியர்வை வந்தவுடன் அத்தனையுமு; அழிந்துப்போகும். உள்ள அழபு கோதுமு; சுத்தாமாக யிருந்ததாலே தனியழகுதான் என்பாள் குழந்தை பிஞ்சு மனதிலர் பதிந்த உண்மை காலத்தால் மாற்ற முடியவில்லை.

    பல ஆண்டுகாலம் தனிமையில்; இருந்த முத்து கால சூழ்நிலையில் கூடா நட்பு மது மாது என்று தன்னை மறந்து செய்யக் கூடாத சமூக தவறுகளை செய்தான் இதன் மூலம் கிழடக்கக் கூடிய அதிக வருமானம் தவறுகளை மேலும் செய்யத் தூண்டியது.

    ஆனாலும் அவன் மனதில மற்றவர் துன்பபடுவதை கார்த்தால் உதவக் கூடிய நல்ல மனதுமிருந்ததது பசி யென்று கையேந்துபவர்களிடனம் தன் பசியை இடக்கிக் கொண்டு மற்;றவர் பசியை போக்கியது முண்டு.

    பானுமதியை சந்தித்து குடும்பம் நடத்திய நாள் முதல் பானுமதி இறக்கும் வரை மாதுவை விட்டொழித்தானே தவிர மதுவை விட முடியவில்லை. பானுமதி இறந்த பின்கும் ஒரு சில மாதங்கள் தன் பழைய தொழிலையே செய்து கொண்டிருந்தான்

    ஆனால் ராசாத்தியை தன் உடன் பிறந்த தங்கையாக வந்ததின் மாற்றம் பழைய தொழிலை விட்டொழித்து கிழடக்கின்ற கூலி Nவுலை செய்ய ஆரம்பித்தான். கொற்ப வருமானம் காரணமாக குடியை அறவே ஒழித்து தன்னை தானே மாற்றிக் கொண்டான். அதிக வருமானம் உள்ள போதும் குறைந்த வருமானம் உள்ள கோதுமு; இதுவரை ராசாத்தி முத்துவிடனம் என்ன வேலை என்று ஒரு வார்த்டதை கேட்டது கூட இல்லை.

    அடிக்கடி அவன் கடவுளிடம் வேண்டுவது என்னை பழைய நிலைமைக்கே பழைய தொழிலுக்கு திருப்பி விட கூடாது என கண்ணீருடன் veவண்டிக் கொள்வான்.

    வேலுவின் மகனுக்கு பாஸ்போர்ட் எல்லாம் தடங்களின்றி கிடைத்தது. திவாகரனிடமிருந்து விசா கிடைத்ததுஃ வேலுவிற்கு மகனை பிரிவதில் ஒரு புறம் மன கஸ்டம் இருந்தாலும் இங்கேயிருந்தால் அவன் கெட்டு கோப நிறைய வழியண்டு என எண்ணியது மட்டுமில்லை

    முதலாளி திவாகரன் சொல்லுக்கு கட்டுபடுவதுதான் தர்மமும் கூட என்று எண்ணினான் வேலு.

    அரவிந்த் என்னுடைய பெயரை காப்பாற்ற வேண்டாம் நம்ம முதலாளி திவாகர் பெயரை காப்பாற்று நல்லா படி. அடிக்கடி எனக்கு போன் பேசு

    என்றபடி எனக்கு இங்கே நெறைய வேலையிருக்கு ஏர்போர்ட்க்கு கூட வரமுடியாது போ Nபுhய் கார்ல ஏறு என்று மகனை வழியனுப்பி வைத்தான் வேலு.

    அரவிந்த் காரில் சென்னை வந்து செர்ந்தவுடன் டிலைவர் அண்ணே நாளை காலைல தான் பிளைட் ராத்திரிக்கு நல்ல ஓட்டல்ல தங்கிடறேன். நீங்க..?
    நான் கார்லயே தங்கிடறேன் தம்பி.

    சே…வேண்டாம்ன்னே…பக்கத்திலே வேறு லாட்ஜ்ல தங்கிழுங்க என்று கூறியபடி டிரைவர் மறுக்க மறுக்க 2 ஆயிரம் ரூபாயை டிரைவர் பாக்கெட்டில் சொறுகினான் அரவிந்த்.

    முத்து சொன்னாக் கேளு லம்பா சுளையா பத்தாயிரம் உன் கமிசன் மட்டும் இல்லைன்னே நான் அந்த தொழிலை விட்டு தொம்ப வருசமாச்சு

    அட கமிசன் பத்தரையின்னா இன்னும் 5 ஆயிரம் சேர்த்து வாங்கித்ததர்ரேன்.
    கொஞ்க வருமானத்தான்…கூலி வேலைத்தான்..ஆனா நிம்மதியா வாழ்க்கை ஓடிட்டு இருக்குது. அதைக் கெடுத்துடாதே…

    முத்து பெரிய இடம் மனசை மட்டும் மாத்து இந்த அமட்டராசுல உனக்கு தெரியாத முகமே..இல்லை. உன் பேச்சு திறமையினால் படியாததைக் கூட படிய வைச்சுரவ..இன்னும் என்ன யோசனை இந்தா அட்வான்ஸ். என்று சில 500 ரூபாய் நோட்டுகளை முத்துக் கையில் திணித்தார்.

    முத்து கடும் கோபத்துடன் கண் சிவக்க ரூபாய் நோட்டுகளை முகத்தில் வீசியெறிந்து போய்யா போ..என்று கோபப்பட்டு கத்தினான் முத்து.

    சப்தம் கேட்டு அடுக்களையிலிருந்த ராசாத்தி வேகமாக ஓடி வந்தாள்.

    ராசாத்தியை பார்த்தவன் ஓஓ இதுதான் சங்கதியா, இதுவவும் பானுமதி மாதிரியா? பரவாயில்லை என்று வந்தவன் சொன்ன மறு நிமிடம் இவன் கன்னத்தில் கண் பொறி தட்;ட பளார் என்று அறைந்தான்.

    கன்னத்ததை நீவியபடி பணத்ததை பொறுக்கிக் கொண்டு வருவய்ய முத்து வருவ..அப்போ..பாத்துக்கறேன் என்றபடி சென்றான் அந்த ஆள்.

    பதறி போன ராசாத்தி அண்ணா யாருண்ணா அது? ஏன் அந்தாளு அப்படி சொல்லிட்டு போறான்? …

    அடுத்த வாரம் பார்ப்போம்.

  3. #39
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    சட்டத்தின்படி (17)

    சொல்றேம்மா சொல்றேன் இல்லை கேட்காதே எதையும் கேட்காதே!

    அண்ணா நீங்க இன்னும் என்னை கூட பொறந்தவளா நெனைக்கல. அதுதான் ஏதோ வந்தா நம்ம கொழந்தையைப் பார்க்க ஒரு ஆள் கிடைச்சிடுச்சின்னு நெனைக்கிறீங்களே தவிர இன்னும் சொந்த தங்கச்சியா ஏத்துக்கல. அதுதான் உண்மை.

    ராசாத்தி இந்த அசிங்கத்தை உங்கிட்;ட எப்படியம்மா சொல்லறது?
    அண்ணா ப+சணிக்காயை மூடிமூடி வைத்தாலும் பொய்யை ஒழிச்சி ஒழிச்சி மறைத்தாலும் அது என்னைக்குமே ஆபத்துதான்.
    இல்லைம்மா அது வந்து வந்து….
    வந்து போயி எல்லாமே உலகத்திலே நடக்கிறதுதான் நான் உங்ககிட்ட கேட்கறது யாரு அந்த ஆளு?
    உங்களுக்கும் அந்த ஆளுக்கும் என்ன உறவு..பகை இதை கூட விறந்த தங்கச்சியா நெனச்சியிருந்தா மட்டும் சொல்லுங்க இல்லை வேற மாதிரி அநனச்சியருந்தா வேண்டாம்ணே!

    தயக்கத்துடன் முத்து துயர சொற்களை மென்று முழுங்கிய படி சொல்லம்மா சொல்றேன். சிறிய பெரிய பெருமூச்சுக்கு பின்…
    அப்பன் ஆத்தா யாருன்னே எனக்குத் தெரியாது ஆனாலும் பெத்தவ மாதிரி ஒருத்தி என்னை வளர்த்து ஆளாக்கினா. அவ எப்படியிருந்தாலும் கடவுளுக்கு சமம் தான் இவசுட இருக்கும் வரை எந்த கஸ்டமும் தெரியலை. படிக்கவும் வைச்சா ஆன ராத்திரி முழுக்க அவ பக்கத்திலே மாத்தி மாத்தி ஆம்பளை குறல் அப்புறம் நிறைய பேர் வருவானுங்க போவானுங்க…
    இதென்னமோ எனக்கு வரவு செலவு மாதிரி தோணுச்சு. அசிங்கமாவும் தெரிஞ்சிச்சு. எதிர்த்துக் கேட்;பேன்.
    அவ உடல வித்துதான் இந்த அனாதையை காப்பாத்துறாள் அப்படீன்னு தெரிஞ்சுச்சு.அப்புறம் என்ன குல தொழில் அவ செத்ததுக்குப் பின்னாடி அவ மூலம் நாசூக்கா எசகு பிசகாக தெரிஞ்ச்ச தொழில் மீடியேட்டர் புரோக்கர் இப்;படி பெயருள்ள தொழில் அசிங்கத்தை ஆனாலும் செஞ்சேன்.

    அரசியல் வாதியிலிருந்து ஆபிஸர்கள் வரைக்கும் 2000, 5000 வihக்கும் கிடைக்கும். சட்டம் ஒழுங்கு அது இதுன்னும் இருந்தாலும் சமூகத்திலே மரியாதைன்னு ஒண்ணு இருக்கிறது எனக்குத் தெரியல.

    கண்ணில் மிருட்சியோடு கேட்டுக் கொண்டிருந்தால் ராசாத்தி.


    சட்டத்தின்படி (18)

    லாட்ஜிலிருந்து அரைகுறை ஆடைகளுடன் ஆண்களையும் பெண்களையும் அள்ளி வந்தது போலிஸ். அதனைக் கண்ட பாண்டி திரும்பி ஓட முயன்றவனை வேலுவின் டிரைவர் அமுக்கி பிடித்து ஓரமாக அழைத்துச் சென்று,
    சொல்லு உண்மையை..உன்னை போலிஸ்ல் காட்டிக் கொடுக்க மாட்டேன். இல்லைன்னா….
    உண்மையை சொல்லறேங்க…இந்த லாட்ஜ்pல் தங்கியிருந்த விடலைப் பையன் பொண்ணு வேணும்னு கேட்டான் பெரிய இடத்து பையன் மாதிரி தெரிஞ்சுது. சுலையா ஒரு தொகை கிடைக்கும்னு அலைஞ்சேன்.; அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா நானும் அந்த பையனும் போலிஸ்ல மாட்டியிருப்;போம்.

    பாண்;டி; சொல்லி மு;டிப்பதற்குள் டிரைவர் லாட்ஸை நோக்கி ஓடினான்.

    வரவேற்பரையில் மனேசரிடம் வேலு மகன் அரவிந்;த ஏதோ காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை கவனித்த டிரைவர்…

    ஐயா இவர் பெரிய இடத்து பிள்ளை பிரச்சனை பண்ணாதீங்க…
    நான் பிரச்சனையெல்லாம் பண்ணல. இந்த தம்பிதான் பண்ணுது. தம்பியுடைய ஊர் பேர் அப்பா பெயர் கேட்டா இன்ஸ்பெக்டரே ஆடி போயிட்டார். தம்பிக்கு புத்தயுமு; சொல்லிட்டு போனார். இனிமே இங்கே மட்டுமில்ல..இந்த மாதிரி லாட்ஜ்ல தங்க வேண்டாம் கொன்னேன் இது தப்பா இதுக்கு…
    ஐயா நடந்தது நடந்துருச்சு. விடுங்க தம்பி ரூமை காலி பண்ணிட்டு ஏர்போர்ட் கெஸ்ட் அவுஸ்ல தங்கிட்டு ஓய்வெடுத்துட்டு காலை 5 மணிக்கு பிளைட்ல கிளம்புங்க…என்றபடி அறையை காலி செய்யச் சென்றார் டிரைவர்.

    காரில் டிரைவர் மெதுவாக அரவிந்திடம்…
    தம்பி சொன்னா தப்பா எடுக்காதீங்க…
    உங்கப்பாவை சென்னையிலிருந்து லாரியில் கூட்டி வந்ததே நான் தான். நான் அவரை வேலைக்கு சேத்துவிடல. சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி கஸ்டப்பட்டு இன்னைக்கு பெரிய முதலாளிக்கு அடுத்தபடியா வளர்ந்திருக்காரு. அவர் பெயரை கெடுத்துராதப்பா…

    இப்போதைக்கு தெரிஞ்சுக்க., புரிஞ்சுக்க வேண்டியது படிப்பு மட்டும்தான். இந்த சில்மிசம் இருந்தா வாழ்க்கையே சீரழிஞ்சிடும். இன்னும் நீ கண்ணுக் குட்டிதான். காளையில்லை.

    அண்ணா…வந்து…

    பயப்படாதே..உங்கப்பாகிட்ட சொல்லி உன் படிப்பை நான் கெடுக்க மாட்டேன். புதுநாடு,புது மொழி,பழக்க வழக்கம் எல்லாமே அமெரிக்காவில் உனக்கு புதுசாததான் இருக்கும்.
    எல்லா கெட்ட கர்மத்தை மறந்து புதியவனாக வர முயற்சி செய்.உனக்க எல்லா வகையிலும் பெரிய முதலாளி உதவி செய்வார்.

    மௌனம் கலையாமல் டிரைவர் சொன்னதைக் கேட்டபடி யிருந்தான் அரவிந்த்.
    தம்பி படிக்கணும்னு ஆசையிருக்கிரவனுக்கு வசதியில்லை. வசதியுள்ள வர்களுக்கு வழி தவறி கடைசியிலே சொல்லவே கஸ்டமாயிருக்கு. உங்களுக்கு எல்லாவித வசதியுமிருக்கு நல்லா படிங்க.

    வேலு தன் அறையில் பைல்களை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். பிய+ன் ஓடி வந்து வேலுவிடம் ஏதோ சொல்ல்…

    அப்படியா வரச்சொல்லுங்க…

    வாங்க உட்காருங்க. ஐயா பரவாயில்லை என்றார் டிரைவர்.

    நான் சென்னையிலிருந்து வந்து ரெண்டு நாளாச்சு சம்சாரத்துக்கு உடம்பு முடியல. ஆஸபத்திரியில தங்க வேண்டியதா போச்சு. அதனால…

    அதனால என்ன இப்ப?. அம்மாவுக்கு எப்படியிருக்கு? லீவு வேணும்னா எடுத்துக்கோங்க. என்றபடி
    இண்டர் காமில் கேசியரிடம் ஏதோ சொல்ல…
    மீண்டும் டிரைவர் தயங்கியபடி அய்யா தம்பி அரவிந்த…
    நல்லபடியா அமெரிக்கா போய் சேர்ந்துட்டானாம்..நைட்தான் திவாகர முதலாளி போன்ல்ல சொன்னார்
    கேசியர் கவரை வேலுவிடம் கொடுக்க அவரை போக சொல்லிவிட்டு
    இந்தாங்க இதில பத்தாயிரம் ரூபாய் இருக்கு. மனைவியை நல்லபடியா பாத்துக்கோங்க..ஆ ..ஒரு விசயம் இந்த பணம்உங்க சம்பளத்திலிருந்து பிடிக்க மாட்டோம் நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு சின்ன உதவிதான் மேலும் பணம் வேணும்னா தயங்காமல் கேளுங்க
    கண்ணில் நீர் தழும்;ப நன்றியுடன் வேலுவை பார்த்படி நின்றார் டிரைவர்.
    சட்டத்தின் படி (19)

    வேலுவின் கவலையெல்லாம் தன் மகன் அரவிந்தனுடைய செய்கையிலும் செயலிலும் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் தன்னை இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வந்த முதலாளி திவாகரன் முன்னால் தலைகுனிவு ஏற்பட்டால் அய்யோ நினைக்கவே பயமாகயிருந்தது. உடம்பு வேர்த்தது. தண்ணீரை குடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

    உடனே ஏதோ நினைத்தவராக தன் மகனை தொடர்புக் கொண்டார்.

    "அரவிந்த் நான் தானப்பா…"

    "சொல்லுங்கப்பா"

    "இப்போ நீ சாப்பிடறது உடுக்கிறது படிக்கிறது எல்லாம் என்னுடைய பணமில்லை. அவரு உனக்கு சொந்த பந்தமில்லை."

    "புரியுது சொல்லுங்க."

    "அவர் நமக்கு கடவுள் மாதிரி… அவருடைய பெயருக்கு களங்கம் வந்திரக்கூடாது."

    அரவிந்தனுக்கு தான் செய்த தவறு டிரைவர் மூலம் அப்பாவுக்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகம் அப்பிக் கொண்டது.

    "அப்பா உங்க மனசிலே யாரோ என்னைப் பற்றி தவறா….."

    "தவறா? மற்றவர்கள் சொல்லுமளவிற்கு செய்திருந்தால் திருத்திக் கொள். மற்றவர் தவறை கண்டு பிடித்து திருத்தும் நிலையில் நானும் நீயும் இருக்க வேண்டுமே தவிர தவறை மூடி மறைக்கும் நிலை நீடித்தால் புற்று நோய்க்கு வெண்சாமறம் வீசியதாகத்தான் முடியும். புடிப்பில் கூர்மையான கவனிப்பு மட்டும் இப்போதைக்கு உனக்குத் தேவை. இருக்கின்ற, படிக்கிற இடத்தின் பழக்க வழக்கங்கள் வேறு மாதிரி. பார்த்து நடந்துக்கோ. தேவையற்ற செலவு உன்னை பெரும் சுமைக்கு ஆளாக்கும்…பார்த்து நடந்துக்கோ."

    வேலு-அரவிந்த் பேச்சு துண்டிக்கப்படுகிறது.





    எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை தானே கட்டுப்படுத்தாத நிலைமைக்கு ஆளாகிறான் அரவிந்தத்;. மேலை நாட்டு கூட நட்பு மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு தன்னை தானே வருந்தி விரும்பி நேசித்ததன் விளைவு.
    அப்போது உள்ளே வந்தார் திவாகரன்.

    "டேய் அரவிந்த் உன் மனசுல என்ன நெனச்சிகிட்டு இருக்க,? நம்ம ஊரல இருந்த கெட்டு போயிருவேன்னு நெனச்சு என் கண்காணிப்புலே இருந்த ஒருங்கா வருவேன்னு நெனச்சேன். ஆனா நீ நைட் கிளப் இது இதுன்னு அசிங்கபடுத்தறயே? உன்னை நல்லா படிக்க வைச்சு இங்கேயிருக்கிற நம்ம கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கலாம் ன்கிறது தான் என் திட்டம் இதுலே மண்ணை போட்டறாதேடா."

    "உங்கப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கை நான் காப்பாத்தணும் இன்னும் கொஞ்ச வருசத்திலே உன் படிப்பு முடிஞ்சுரும். அதுவரை இந்த பழக்கத்தை யெல்hம் மூட்டை கட்டி வை. எம் பையனும் தாண்டா தாயில்லா பையன். ஆனா இவன் ச்சே அவனோட உன்னை கம்பேர் பண்ண விரும்பல. உங்க அப்பா வோடு உன்னை பண்ணிப் பார். இல்லை படிக்க விரும்பவில்லைன்னா இந்தியா போக ஏற்பாடு பண்ணறேன். பதில் உடனே வேண்டாம் காலையில சொன்னா போதும் " என்று நிதானமாக சொன்னார் ; திவாகர்;

    தொடரும்

    சட்டத்தின் படி (20)

    முத்துவின் மகன் பள்ளி இறுதி தேர்வில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டோடு கருணை உள்ளத்துடன் கல்லூரியில் கட்டணம் எதுவுமின்றி சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
    ராசத்திக்கும் முத்துவிற்கும் சொல்லி மாளாத மகிழ்ச்சி.
    “தியாகு உன்னை வளர்க்கறப்போ ஒவ்வொரு நாளும் நான் சந்தோசமா இருந்ததைவிட கவலைப் பட்டதுதான் அதிகம்.”
    முத்து தியாகு தமயந்தி எல்லோரும் ராசாத்தியை ஆச்சிரியமாக பார்த்தார்கள்.
    என்ன எல்லோரும் அப்படிப் பார்க்கிறிங்க,?
    எங்கே என் வளர்ப்பிலே தப்பு வந்திடுமோ என்ற பயம். செடி கொடி மரத்தை வளர்க்கின்ற போது கூட ஒழுங்கா தண்ணி ஊத்தனும், எரு போடணும். இல்லைன்னா அது பட்டுப் போய்விடும். உன்னை சில நேரம் கண்டிச்சுயிருக்கேன். பின்னாடி நான் அழுதுமிருக்கேன். இப்போவும் அழுகிறேன். சுந்தோசத்தில.”
    “அத்தை என் தாய் உயிருடன் இருந்திருந்தால் கூட என்னை இப்படி வளர்த்திருப்பாங்களோ என்னவோ..சந்தேகம் தான”;. ஏன்றான் தியாகு.
    “ராசாத்தி… பானு இறந்தது எனக்கு பெரும் துக்கம் தான.; இந்த துக்கம் வருசக் கணக்கா இலர்லை மாசக் கணக்கா மட்டுமே இருந்தது. என் மருமகள் தமயந்தியை பள்ளியில பாராட்டின அப்ப நான் எப்படி சந்தோசமா இருந்தேன் தெரியுமா,?” ஏன்று முத்து ராசாத்தி மகள் தமயந்தியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாhன்.
    “அத்தை நம்ம தமயந்தி ப்ளஸ் டுவில் கட்டாயம் மாநிலத்தில் முதலாவதாக வருவா. கட்டாயம் அவளுக்கும் என்னை போலவே கல்லூரியில் கட்டணமில்லாமல் இடம் கிடைக்கும்.”
    “என்னமோப்பா எல்லாம் கடவுள் செயல். உங்க அம்மா பானுவின் ஆசீர்வாதம். நீங்க படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிருச்சு அண்ணனை வீட்டோடு வைச்சு பார்த்தா போதும்”
    “ஏ அத்தை பிரிச்சு பேசறீங்க. உங்களையும் காப்பாத்த வேண்டியது என் பொறுப்புத்தானே.?”
    “அப்போ நான் அனாதையா”? என்று சிறிது வருத்தத்துடன் கூறினாள் தமயந்தி.
    “அட என் செல்லமே இந்த மாமா உயிருடன் இருக்கும் வரை நீ அனாதையில்லம்மமா” நீ என் தங்கைச்சி பிள்ளை. முட்டுமில்லஃ என் மகளும் நீதான்னம்மா.” ஏன்றான் முத்து.
    “எனக்கு நெனைவு தெரிந்ததிலிருந்து மாமான்னு உறவு யிருந்தாலும், பெத்த தகப்பன் மாதிரி தானே பாத்துக்கிறீங்க. அதனால என்னவோ என் அப்பாவைப் பற்றியோ , தொலைஞ்ச அண்ணனை பற்றியோ இதுவரை நான் கேட்டதில்லை” என்றாள் தமயந்தி.
    கொஞ்சம் பொறுங்க. இன்னும் நாலு வருசம்…அப்புறம் உங்களை நாங்கப் பாத்துக்குறோம்.

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •