Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 39

Thread: சட்டத்தின் படி- சுவாரஷ்யமான தொடர்கதை

                  
   
   
  1. #13
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by otakoothan View Post
    அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம், கீதம் அவர்களே
    இந்த தொடர்கதை நான் எழுதுவது தான். சுந்தரகனகு என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
    தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. முன்பே இருமுறை தனிமடலில் கேட்டிருந்தும் தாங்கள் பதில் அளிக்காமையாலும், சுந்தர கனகு என்பவருடைய கதையென்பதால் சில கதைகளை படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்துகிறேன் என்று தங்களிடம் தெரிவித்தபோது மறுப்பேதும் சொல்லாததாலும் பொதுவில் கேட்கும் நிலை ஏற்பட்டது. மன்றத்தில் எந்த பயனர் பெயரை உபயோகிக்கிறீர்களோ அதே பெயரில் பதிவுகளைப் பதிவிடுவதால் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

  2. #14
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. முன்பே இருமுறை தனிமடலில் கேட்டிருந்தும் தாங்கள் பதில் அளிக்காமையாலும், சுந்தர கனகு என்பவருடைய கதையென்பதால் சில கதைகளை படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்துகிறேன் என்று தங்களிடம் தெரிவித்தபோது மறுப்பேதும் சொல்லாததாலும் பொதுவில் கேட்கும் நிலை ஏற்பட்டது. மன்றத்தில் எந்த பயனர் பெயரை உபயோகிக்கிறீர்களோ அதே பெயரில் பதிவுகளைப் பதிவிடுவதால் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். தங்கள் புரிதலுக்கு நன்றி.
    என் மீது தான் தவறு...ஒத்துகொள்கிறேன். முன்பே நீங்கள் கேட்டதற்கு பதில் அளித்திருக்க வேண்டும் நான். பதிலளிகாதது என் தவறு தான். அதற்கு என்னை பொருத்தருள வேண்டுகிறேன்.

  3. Likes கீதம் liked this post
  4. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    சில அத்தியாயங்களிலேயே பரபரப்பு உச்சத்தை அடைந்துவிட்டதே.. பாராட்டுகள். தொடருங்கள்..!

  5. #16
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    சட்டத்தின் படி (5) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
    சென்ற வாரம்
    ஒரு ரூபாய் காயின் பாக்சில் தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.
    மறுமுனையில்
    “Hello”
    யார் சொன்னது அந்த Hello……



    மேட்டுக்குடி ஆண்களில் சில பேர் காம வெறி பிடித்து ஏழை பெண்களை நாசமாக்குவதை தடுக்கவே முடியாதா?

    கார் கண்ணாடிகளை உயர்த்தி, பெண்களை கடத்தி வன்புணர்வு கொள்ளும் மிருகங்களை என்னதான் செய்வது?

    “அய்யா நான்; மாசமா இருக்கிறேன் என்னை…………விட்டுடுங்க…. கதறினாள் துடித்தாள் .

    கொடுமையிலும் கொடுமையிலும் இக்கொடுமையினை நடத்திவிட்டான் அந்த காமுகன். என்பதை விட தெருநாய்.

    காரிலிருந்து ராசாத்தியை இறக்கிவிட்டு சில 500 ரூபாய் நோட்டுகளை ஜாக்கெட்டுக்குள் திணித்து விட்டு சென்றான். பண்ணின பாவத்துக்கு பரிகாரமாக.

    தன் நிலையுணர்ந்த ராசாத்தி திடிரென்று பித்து பிடித்தவளாக மகனைத் தேடி ஓடினாள்.

    அடுத்தடுத்து வந்த சிலைகளைத் தாண்டி ஓடினாள்.

    பெருமூச்சு வாங்க நின்றாள் பக்கத்தில் சிலம்புடன் கண்ணகி சிலை. மதுரையை எரித்தவள்.

    கண்கலங்க அழுவதற்குக் கூட திராணியில்லாமல் வாயில் உதடுகள் மட்டும் ஏதோ கண்ணகியைப் பார்த்து முணுமுணுத்தது.

    கண்ணகியிடம் இந்த அவலத்தை சொல்லி சென்னையை எரிக்கவா முடியும்?

    எங்கு மகனை விட்டுச் சென்றாளோ அந்த இடத்தில் வருவோரிடமும், போவோரிடமும் எல்லாம் மகனை பற்றி விசாரித்தாள்.

    ராசாத்தியின் கோலத்தைப்பார்த்து சிலரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.

    “யம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கார்லே அடிப்பட்டது உம் மவனா? அவன தூக்கிட்டு போயிட்டாங்களே? என்ன மனுசி நீ? கொழந்தை புள்ளையை அநாதையா விட்டுட்டு நீ எங்கே போனே?”

    ஐயோ காருல அடி பட்டுடானா? உலகமே இருண்டது போல தலையில் இடிவிழுந்தது போல் மயங்கி விழுந்தாள்.

    செய்தி சொன்னவன் திடுக்கிட்டு செய்வதறியாமல் நின்றாள்.

    “யோவ்…என்னைய்யா பொம்பளை மயங்கி கிடக்கிறா…! நீ மசமசன்னு நின்னுட்டு இருக்கிறே.? தண்ணீரை முகத்தில் தெளித்து குடிக்கவும் கொடுத்தனர்.

    மயக்கம் தெளிந்த ராசாத்தி தன்னை சுற்றி நின்றிருந்த சிறு கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், என்ன ஏது என்றுகூட கேட்காமல் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் கடலை நோக்கி சென்றாள்.

    கட்டிய கணவன, பெற்ற மகன், கட்டிக்காத்த கற்பு, இத்தனையும் போய்விட்ட பின்பு இனியும் வாழ வேண்டுமா?.

    ஆர்ப்பரிக்கிற அலையின் மீது கால் பட்டதும், அலையின் வேகம் ஒவ்வொரு அடியாக உயர்ந்தது.


    ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

    அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…


    ‘தங்கச்சி….. தங்கச்சி’

    குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.

    அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.

    ராசாத்திக்கு என்ன ஆனது?

    அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

  6. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாவம் ராசாத்தி. என்ன நினைத்து இந்தப் பேரை வைத்தார்களோ அவளது பெற்றோர். சுவாரஸியமாய் போகிறது.....தொடருங்கள் ஒட்டக்கூத்தன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    விருவிருவென நகரும் கதையோட்டத்தில் சமயம் கிடைக்குமிடத்து சமரசமின்றி சமூக அவலங்களை சாடும் தங்களின் வெகுஇயல்பான எழுத்துநடை எமக்குள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது அன்பரே..!! தொடர்ந்து கலக்குங்கோ..

    சட்டத்தின்படி கதைக்கு நீங்க கொடுத்த வாக்குபடி வரும் திங்கள்களில் தவறாது வெளிவருமா அடுத்தடுத்த பாகங்கள் ஒட்டக்கூத்தரே..!!


    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #19
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    கண்டிப்பாக திங்கள் கிழமைகளிலேயே நீங்கள் கதையை வாசிக்கலாம்….உங்கள் எதிர்பார்ப்பை நான் வீணாக்க மாட்டேன்.

  9. #20
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    சட்டத்தின் படி ....(6)
    சென்ற வாரம்
    ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
    அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…
    ‘தங்கச்சி….. தங்கச்சி’
    குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.
    அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.



    வேலுவின் ஹலோ என்ற கேள்விக்கு மறுமுனையிலிருந்து

    "ஹலோ யாரு?"

    "என்ன சார் என்னை தெரியல?" என்றான் வேலு,.

    "யோவ் இது என்ன வீடியோ வா உன் மூஞ்சியெல்லாம் தெரிவதற்கு? பேரை சொல்லுய்யா?"

    "சார் நான் தான் உங்கள் லாரியில திருப்புர்ல இருந்து வந்தேனே?" என்று நிறுத்தினான் வேலு.

    "ஒ? புரியிது. ஆமா வந்த காரியம் என்ன ஆச்சு?"

    "மனைவி மகன் கிடைத்தார்களா? சரி நீ எங்க இருக்குற? நான் மெட்ராஸ் போர்ட் ல இருக்கிறேன்." என்றார் டிரைவர்.

    "சார் நானும் மெட்ராஸ் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து தான் சார் பேசறேன்".

    "அப்படியா நான் இன்னும் ௪௫ நிமிசத்துல திருப்பூர் கிளம்பிடுவேன். நீ வரதுன்னா வா"

    "சார் நானும் என் மகனும் திருப்பூர் தான் வரோம்". என்றான் வேலு.

    "அப்படியா அப்போ உன் மனைவி? சரி சரி உடனே கிளம்பி வா அன்னைக்கி உன்னை இறக்கி விட்டேன் இல்லே ...அந்த இடத்துக்கு வா போகும் போது எல்லாம் பேசி கிட்டே போகலாம்".என்றார் டிரைவர்.

    நகர பேருந்தை பிடித்து இருவரும் மெட்ராஸ் போர்ட்க்கு சென்றடைந்தார்கள்

    "வாய்யா வேலு இது உன் பையனா? சரி லாரியில் ஏறு.. என்றபடி கிளினரை எதிர் பார்த்தபடி அதோ கிளி வந்துட்டான்...(கிளினரோட சுருக்கம் )

    "என்னடா கிளி ...கிளி கூண்டோட வர? இந்த ரெண்டு கிளியையும் எங்க வாங்குன?"

    "அண்ணே என்னை மன்னிச்சுடுங்க" என்றான் அந்த கிளினர்.

    "ஏண்டா...என்னடா பண்ணுன?"

    "அண்ணே இரண்டு வருசத்துக்கு முன்னால.."

    ".என்னடா பிளாஷ் பேக்கா?"

    "அது இல்லைண்ணே..."

    "இரண்டு வருசத்துக்கு முன்னால என் அத்தை இறந்து போன பின் என் மாமா அவருடைய பொன்னை கூட்டிட்டு மெட்ராஸ் வந்துட்டாரு. இந்த ஹோர்பார் ல தான் அவர பார்த்தேன். காலமெல்லாம் அவ தான் என் உசிருன்னு நான் நெனச்ச என் நினைப்பு வீண் போகல. மாமாவும் கரிசனையுடன் இங்கயே வேலை வாங்கி தரதா சொல்லிட்டாரு.இனிமேல் நான் கிளினர் வேலைக்கு வர மாட்டேன். இந்த கிளி அவளுக்கு..." என்று ......கிளினர் தொடருவதற்குள்...

    "அது யாருடா."..என்று கேட்டார்...டிரைவர்.

    "அது தான்னே ...என் அத்தை பொண்ணு ரேவதி. பார்க்க கிளி மாதிரி இருப்பான்னே... அவளுக்கு கிளின்னா ரொம்ப பிடிக்கும்...அதுதாண்ணே வாங்கிட்டு போறேன்". (கருப்பு முகம் சிவப்பானது ... வேறென்ன வெக்கம் தான்)

    எது எப்படியோ...நல்ல இருந்தா சரி...

    "சரி இந்த உன் பேட்டா...உன் சம்பளத்தை திருப்பூர் ஆபீஸ் ல வந்து வாங்கிக்கோ.. அப்புறம்...ரெண்டு கிளி வச்சுரிக்கயில்ல....ஒரு கிளியை அந்த சின்ன பயன் கிட்ட கொடுடா...பாவம் வச்சு விளையாடட்டும்."

    "சரிண்ணே...கொடுத்துட்டா போச்சு"... என்று சொல்லிய படி.....கிளி கூட்டை திறந்தான் கிளினர்.

    திறந்தவுடன்...ஒரு கிளி அந்த இண்டு இடுக்கில் புகுந்தபடி...பறந்து விட்டது..

    "ஐயோ அண்ணே...ஆசையாய் வாங்கிட்டு வந்த கிளி பறந்து போயிடுச்சே....அய்யய்யோ அண்ணே...இந்த ஒரு கிளியை யாவது என் அத்தை பொண்ணுகிட்ட கொண்டு போய் சேர்கிறேன் ண்ணே..என் சம்பளத்தை நீங்களே வாங்கி வச்சுகோங்க"..என்றபடி...வேகமாக நடந்தான் அந்த கிளினர்.

    திகைத்து போன டிரைவர் வேலுவையும், குழந்தையையும் பார்த்தபடி வண்டியை கிளப்பினார்....டிரைவர்.
    "நமக்குன்னு வாய்க்கிற கிளினர் யாருமே சரியா அமைய மாடிங்குரானுங்க.....ம்ம்... ரெண்டு நாளா சரியா தூக்கமே இல்ல வேலு...அண்ணல் சரியான நேரத்துக்கு வேற போய் சேரனும். என்று டிரைவர் பேசி முடிப்பதற்குள் ...

    அண்ணே...எனக்கும் driving தெரியும் , உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் வேணும்னா வண்டியை ஓட்டுறேன்...அண்ணே எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்...ஒரு வேலை நீங்க வாங்கி கொடுத்திங்கன்னா ...நான் பொழச்சுக்குவேன் ....."

    ம்ம்....சரி இங்க வா...ஒட்டு....

    அவன் ஓட்டுவதை பார்த்து நம்பிக்கை வந்தவனாக...சரி சரி நான் போய் பின்னாடி பேனட்டுல படுதுகுறேன்...நீ பார்த்து பத்திரமா ஒட்டு.

    வேலுவுடைய அதிர்ஷ்டம்...எந்த செக் போச்டுளையும்...எந்த வித தடையுமில்லை....வண்டி பாட்டுக்கு போய் கொண்டே இருந்தது.

    அதிகாலை 5 மணிக்கு லோர்ரி வந்து சேர்ந்தது திருப்புருக்கு. வேலு டிரைவரை எழுப்பினான். டிரைவர் வேலுவை ஆச்சிரியத்துடன் பார்த்தார்.

    "பரவால்லையே வேலு....சரி இன்னும் 2 கிலோமீட்டர் இருக்கு அந்த கம்பனி க்கு போக.....சரி நீ இந்த பக்கம் வா...நான் ஓட்டுறேன்..."

    வண்டியை ஓட்டும் போது டிரைவருக்கு ஆயிரம் மன குழப்பம்.....
    இவனை வேலைக்கு சேர்த்து விட்டால்...நம்ம வேலைக்கு ஆப்பு வச்சுருவானோ..? ....அவன் கதையை கேட்டாலும் பாவமா த்தான் இருக்கு..என்ன பண்ணலாம்..? சரி பாப்போம்..."

    அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய வில்லை.

    வேலை வங்கி தந்தானா இல்லையா..?






    அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

  10. #21
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0
    சட்டத்தின் படி(7) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

    சென்ற வாரம்
    அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய வில்லை.

    வேலை வங்கி தந்தானா இல்லையா..?



    “தங்கச்சி தங்கச்சி அய்யோ கடவுளே யாராவது காப்பாத்துங்களேன்”
    முத்துவினுடைய கதறலைக்கேட்டு சிறு கூட்டம் கூடி விட்டது.

    “அய்யோ பாவம் என்ன கஸ்டமோ… ஏய்யா நீ எல்லாம் ஒரு மனுசனா என்த விச்சனைன்னாலும் வீட்டோடுயிருக்கணும். இப்போ நிலைமையைப் பாரு.” என்று ஆளுக்கு ஆள், வேலுவைப்பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

    சிறு தூரத்தில் மீனவத்தாய்மார்களும் பெண்களும் தங்களுடைய உறவுகள் எவ்வித ஆபத்துமின்றி கொலைவெறி பிடித்த இலங்கை கப்பற்படையிடமிருந்து உயிர் தப்பிப்பித்து வர வேண்டும் என தத்தம் தமது கடவுள்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.


    இங்கு நடக்கும் களேபரத்தைப்பார்த்து அவர்களும் ஓடி வந்தார்கள்.

    ஆர்ப்பரிக்கும் பேரலை மீது படகு ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்படகிலிருந்து இருவர் கடலில் குதித்தனர்.

    கடல் அலை இழுத்து சென்ற ராசாத்தியை இருவரும் கரைக்குத் தூக்கி கொண்டு வந்தனர்.

    தன் உயிரையும் துச்சமென மதித்து மற்ற உயிரை காப்பாற்றிய அந்த மீனவ சமுதாயத்தை காப்பாற்ற தமிழக மக்களிடமிருந்து எத்தனை வகையான ஆர்பாட்டம,; உண்ணாவிரதம்.?

    கட்சி பாகுபாடுயின்றி ஒரே அணியாக சேர்ந்து போராடினால்தான் இதற்கெ;ல்லாம் வழி பிறக்கும். குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் முளைக்குமே தவிர நமது மத்திய அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.. மக்கள் கையில் இருக்கும் வலிமையுள்ள ஒரே ஆயுதம் ஓட்டு மடடும்தான். அந்த ஆயுதத்தினால்தான் இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நினைத்ததை பெற முடியும்.

    ராசாத்தியை தரையில் கிடத்தியவுடன் மீனவப் பெண்கள் முதலுதவி செய்து அவளை காப்பாற்றினார்கள்.

    “அய்யோ பாவம் கர்ப்பமாயிருக்கு…இந்த புள்ள”.. அதில் ஒரு பெண் பரிதாபப்பட்டாள்.

    “ஏய்யா உனக்கு அறிவிருக்கா என்ன நடந்திருந்தாலும் பேசி தீர்ககணும். ஒரு உயிரு இல்லையா..ரெண்டு உயிர். போயிருந்தா என்ன பண்ணுவ?” முத்துவைப் பார்த்து திட்டினார் ஒருவர்.

    மற்;றொருவர் பீடிக் குடித்துக்கொண்டே “இவனையெல்லாம் சுட்டுக் கொள்ளணும்.”

    “கொல்லுங்கைய்யா கொல்லுங்க…யாருன்னே தெரியாத இவ… கடலுக்குள்ளே விழுந்து சாக போறாளே ன்னு எப்படியாவது இவளை காப்பாற்றணும்ன்னு தங்கச்சி தங்கச்சி ன்னு கூப்பிட்டு பின்னாலயே ஓடி வந்தேன் பாரு அதுக்காக என்னை கொல்லுங்கய்யா” கண் கலங்க கொன்னான் முத்து.

    “என்னது உன் தங்கச்சி இல்லையா..?” என்றபடி எல்லோரும் முத்துவை வியந்து பார்த்தார்கள்.

    “ஆமாய்யா… இவளை அந்த ரோட்டுலயே பார்த்தேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே நான் டாஸ்மாக்குல தண்ணியடிச்சிட்டு வந்திட்டு இருந்தேன்.இவளுடைய பையன்னை கார் இடிச்சிருச்சு. ஆனால் 2 பேர் வந்து பையனை தூக்கிட்டு போனாங்;க..என்ன ஏதுன்னு விசாரிக்கல..கொஞ்ச நேரத்திலே குழந்தையை பற்றி கேட்டு. இவ வந்தா.. நான் பாதி மப்புலே குழந்தை போயிட்டதுன்னு சென்னேன். நான் குழந்தை செத்து போயிட்டதா சொன்னதா நினைச்சு இந்த புள்ள மயக்கமாயிட்டா. மயக்கம் தெளிந்த பின் நடந்ததுதான் இந்த சம்பவம்.. காப்பாத்தனும்ன்னு நெனச்சேன். அதான் இந்த புள்ள பின்னாடியே ஓடி வந்தேன்” சொல்லி முடித்தான் முத்து.


    சுணடல் விற்கும் சிறுவன் முதல் சுற்றுலா பயணிகள் வரை சிலர் பாராட்டவும் சிலர் திட்டவும் செய்தனர். சில பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தனர்.

    “இப்போ அநாதையான இவளை என்ன செய்ய போற?” என்றுதான் கேட்டார்களே தவிர ராசாத்திக்கு அடைக்கலம் தரும் மன நிலைமை யாருக்கும் இல்லை.

    “ஏய்யா கூட பொறந்தாத்தான் தங்கச்சியா, கூட பொறக்கலைன்னா தங்கச்சி இல்லையா? இந்த மெட்ராசுல கால்வாசி பேரு அநாதையா வந்தவங்க தாய்யா.. ஏன் நான் கூட அநாதையா வந்தவன் தாய்யா. உங்க எல்லோரும் முன்னாடியும் நான் ஒண்ணு சொல்றேன். இவளை நான் என் தங்கச்;சி மாதிரி வைச்சுக்குவேன் பாதுகாப்பேன். இனிமே இவ என் தங்கச்சித்தான் தங்கச்சித்தான.;”

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராசாத்தி வருத்தம் கலந்த சந்தோசத்துடன் முத்துவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    முத்து ராசாத்தியின் கையைப் பிடித்து “ எந்திரிம்மா தங்கச்சி…அண்ணே நான் இருக்கேன் கவலைப் படாதே..உ;ன குழந்தையை எப்படியும் தேடி கண்டு பிடிக்கலாம்.என்று சொல்லி மீனவர்களைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தியை கூட்டிக்கொண்டு நடந்தான்.

    அந்த படகில் உயிருடன் இருந்த ஒரு மீன் ஒரே துள்ளலில் மீண்டும் கடலுக்குள் குதித்தது.

    பானு பானு என்று தன் வீட்டுக் கதவை தட்;டினான் முத்து.

    கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும் திகைத்து நின்றார்கள்.

    எதற்காக…..இந்த திகைப்பு?

    அடுத்த வாரம் வரை காத்திருக்கலாமே?!!

  11. #22
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    பானு ஏற்றுக்கொள்வாளா ராசாத்தியை??? விருவிருப்பாய்த் தொடர்ந்துகொண்டிருக்கிறது ஒவ்வொரு வாரமும்...வாழ்த்துக்கள்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  12. #23
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நிறைய திருப்பங்களுடன் நகரும் கதை சுவாரசியம். தொடருங்க....!!!

    (எழுத்துப்பிழைகளை களைந்தால் இன்னும் நல்லாருக்கும்)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  13. #24
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஏழு பகுதிகளையும் படித்து முடித்தேன். விறுவிறுப்பாக கொண்டு போறீங்க.. தொடருங்கள்..!

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •