Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: நாற்பதடி வெண்பா: நல்லியற்கை நல்கியதாம் நல்லுணவை நாமுண்போம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0

    நாற்பதடி வெண்பா: நல்லியற்கை நல்கியதாம் நல்லுணவை நாமுண்போம்

    நாற்பதடி வெண்பா:
    நல்லியற்கை நல்கியதாம் நல்லுணவை நாமுண்போம்

    [இன்னிசைக் கலிவெண்பா]
    அன்றெல்லாம் நம்முன்னோர் அக்களிப்பாய் வாழ்ந்திட்டார்
    நன்றென்றே நல்லியற்கை நல்கியதை ஏற்றார்கள்
    தேங்காயும் நற்பழங்கள் தேர்ந்தெடுத்துப் பூசித்தார்
    மாங்காயும் நல்லபலா வாழைவகை உண்டுவந்தார்
    அன்றவருக் கச்சமில்லை அல்சரென்றும் கேன்சரென்றும்
    நன்றாக வாழ்ந்தார்கள் நல்லதையே சிந்தித்தார்.

    பாலைவன நாடுகளில்* பல்திராட்சைச் சாறுடனே
    சோலைவளர் பேரீச்சம் சோர்வின்றி உண்டார்கள்
    எத்தகைய சூட்டினிலும் ஏதமிகும் மண்ணிடையில்
    சித்தமதே குன்றாமல் சீர்மிகுந்தே வாழ்ந்தார்கள்.
    ஆப்பிரிக்க நாடொன்றில்* அத்தனைபேர் நல்லுயிரை
    காப்பதுவும் யாதென்றீர்? வாழைமரக் காய்கனியே!
    கேரளத்தைப் பாருங்கள் கப்பையுடன் நேந்திரமும்
    தாரளமாய் காலையிலே தக்கபடி உண்ணுகின்றார்.

    இப்படியாய் இங்கிருக்க இன்றிளைய செந்தமிழர்
    எப்படித்தான் ஏற்றாரோ இத்தாலிப் பிஸ்சாவை!
    சீனாவின் நூடுல்ஸ்சும் சில்லிகொபி என்றுசொல்லி
    தானாய்கை யாட்டுமுன்னே தந்திடுவார் செய்ததனை!
    இத்தகைய இல்லுணவை இங்கிவர்கள் உண்பதுடன்
    மெத்தனமாய் பீடிசிகார் மேல்நாட்டுப் விஸ்கியென்பார்!
    ஆட்டிறைச்சி, கோழிபுறா அக்கக்காய் வெட்டிவைத்தே
    காட்டுமுயல் பன்றியுடன் கச்சிதமாய் ஓருணவாம்!
    கூட்டமிடும் வெள்ளெலியைக் கூடயிவர் விட்டதில்லை!
    மாட்டிறைச்சி போத்தென்றே* மச்சையையும்* விட்டகலார்
    நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
    இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.

    நல்லுணவு சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
    நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?
    மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
    ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!
    முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்துப் பேசுகிறார்
    பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!?
    தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
    வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?

    உண்மையிதே ஆனாலும் உண்பதற்கு என்னவென்பீர்?
    திண்மையுடன் நான்சொல்வேன் தின்பதற்குண் டேராளம்
    நல்லியற்கை தந்துள்ள நற்பழங்கள், கொட்டைகளும்
    பல்விதமாம் கீரைகளும், பச்சைக்காய் நற்பருப்பும்
    தாழ்வின்றி நற்தேங்காய் தாராள மாய்சேர்த்தே
    வாழ்வோம்நாம் வையகத்தில் நன்கு.

    [நேரிசை வெண்பா]
    வாழ்த்திடுவோம் நல்லுணவை வந்தனங்கள் சொல்லித்தான்
    தாழ்த்திடுவோம் நம்தலையை தண்டமிழா – பாழ்கொள்ளை
    நோய்நொடிகள் நீங்கிநல்ல நுண்மையுற நாமுண்போம்
    காய்கனிகள் கச்சிதமாய் சேர்த்து


    பாலைவன நாடுகளில்* = அரேபிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்.
    ஆப்பிரிக்க நாடொன்றில்* = கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி,ருவாண்டா
    போத்தென்றே* = போத்து = பறவை, விலங்குகளின் ஆணினத்தைக் குறிக்கும்
    சொல். கேரளத்தில் (மலையாளத்தில்) எருமை.
    மச்சையையும்* = மஜ்ஜை = எலும்பின் உட்திசு (மச்சை) = marrow of the bone.
    [ஆதாரங்கள்: சென்னை பேரகரமுதலி, வின்சுலோ அகரமுதலி]


    மேற்கொண்டு படிப்பதற்கு:
    1. இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.ஆ. அப்பன். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, மூலிகை விளக்கங்கள், இயற்கை உணவு செய்முறைகள்.
    2. டாக்டர் தேவேந்திர வோரா அவர்களின் “நம் நலம் நம் கையில் பாகம்-1 (தமிழ், ஆங்கிலம்), பாகம்-2, (ஆங்கிலம்).
    3. இயற்கை வாழ்வியல் கலை. கொ.எத்திராஜ், சித்த வித்தை தவ மையம், சித்தர் வழி சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
    4. எளிய முறை உடற்பயிற்சி-வேதாத்திரி மகரிஷி


    ----- Dr. சுந்தரராஜ் தயாளன்,பெங்களூர். .
    Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன்; 28-07-2012 at 12:14 PM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    யம்மாடியோவ் ! ஐய்யா சுந்தர்ராஜ் அவர்களே அருமை அருமை ..இன்னமும் வெண்பாவும் வஞ்சிப்பாவும் களிக்கத்தேன் செய்யுது ..
    வசிகரன்

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காய்கறிகளின் அருமை பற்றி காய்ச்சீர்களைக் கொண்டே விளக்கிய விதம் பாராட்டுக்குரியது.

    கலி தீர்க்கும் வழிகளைக் கலிவெண்பா மூலம் காட்டி, களிப்பேருவகை கொள்ளச் செய்துவிட்டீர்கள்.

    ஒவ்வொரு அடியையும் அழகுற அமைத்து எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பாவியற்றிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டு தயாளன் ஐயா.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இயற்கை உணவின் மகத்துவத்தைச் சிறப்பிக்கும் அற்புதமான கலிவெண்பா ஐயா.. மிக வியந்தேன். பலமுறை வாசித்தேன். வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பொழிவை..!

    பாராட்டுகள் என்று சொன்னால் அது மிக மிக குறைவே. என் செய்வேன்..?

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தங்களை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்னும் ஆவல் மிகுகிறது ஐயா.. அடுத்தமுறை ஊருக்கு வந்தால் பெங்களூரில் தங்களைச் சந்திப்பேன் இன்ஷா அல்லாஹ்..!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by vasikaran.g View Post
    யம்மாடியோவ் ! ஐய்யா சுந்தர்ராஜ் அவர்களே அருமை அருமை ..இன்னமும் வெண்பாவும் வஞ்சிப்பாவும் களிக்கத்தேன் செய்யுது ..
    மிகவும் நன்றி வசிகரன். முதலில் பின்னுடமிட்டவர் நீங்களே.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வெகு அருமை....எனச் சொன்னாலும் அது சம்பிரதாயமே. இதமான கவிதை.....பதமாக பகிரும் நல்லுணவு தகவல்கள் நல்ல கவி வடிவத்தில், தெள்ளுதமிழ் வெண்பாவில் அள்ளுகிறது மனதை.

    மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.

    (உடல்நலம் தேவலையா இப்போது?)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    அறுசுவை விருந்து உண்ட மாதிரி திருப்தியாக இருக்கிறது. வாழ்த்த வகை தெரியவில்லை....!

  9. #9
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    காய்கறிகளின் அருமை பற்றி காய்ச்சீர்களைக் கொண்டே விளக்கிய விதம் பாராட்டுக்குரியது.

    கலி தீர்க்கும் வழிகளைக் கலிவெண்பா மூலம் காட்டி, களிப்பேருவகை கொள்ளச் செய்துவிட்டீர்கள்.

    ஒவ்வொரு அடியையும் அழகுற அமைத்து எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பாவியற்றிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டு தயாளன் ஐயா.
    கீதம் அவர்களுக்கு மிக்க நன்றி...உங்களின் பின்னுட்டம் கண்டு அகமகிழ்ந்தேன்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    இயற்கை உணவின் மகத்துவத்தைச் சிறப்பிக்கும் அற்புதமான கலிவெண்பா ஐயா.. மிக வியந்தேன். பலமுறை வாசித்தேன். வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பொழிவை..!

    பாராட்டுகள் என்று சொன்னால் அது மிக மிக குறைவே. என் செய்வேன்..?
    மிகவும் நன்றி கலைவேந்தன் அவர்களே...உண்மையில் உங்களின் முன்பு நான் ஒன்றுமில்லை...சாதாரணம்தான்.

  11. #11
    புதியவர் பண்பட்டவர் jayaprakash's Avatar
    Join Date
    28 Jul 2012
    Age
    33
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    10,217
    Downloads
    0
    Uploads
    0
    இப்பவும் இப்படீல்லாம் எழுத ஆள் இருக்காகளா? தமிழ் பொழைச்சிக்கும்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இரக்கமின்றிக் கொன்று புசிப்போரே! நிற்க!
    மரக்கறியின் மாண்பதனைப் பாவில் - உரக்கவே
    ஓதும் தயாளராம் சுந்தரரின் நல்லுரையைக்
    காதுகொடுத் துக்கேட்பீர் இங்கு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •