கடவுள் நமக்கு அனுப்பும் பரிசுப் பொருள், பிரச்சினை எனும் பேப்பரில் சுற்றித்தான் தரப்படுகிறது,
பேப்பர் எனும் பிரச்னையை களையும் வரை பரிசை அடைய முடியாது!!!
-படிச்சது கொஞ்சம், கலந்தது கொஞ்சம்
-நாகா
கடவுள் நமக்கு அனுப்பும் பரிசுப் பொருள், பிரச்சினை எனும் பேப்பரில் சுற்றித்தான் தரப்படுகிறது,
பேப்பர் எனும் பிரச்னையை களையும் வரை பரிசை அடைய முடியாது!!!
-படிச்சது கொஞ்சம், கலந்தது கொஞ்சம்
-நாகா
படிக்க நல்லாத்தான் இருக்கு
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
ஆனா...இதைக் கவிதை எனும் பகுதிக்குள் கொண்டுவர...தயக்கமாய் இருக்கிறதே...பொன்மொழிகள் என சொல்லலாம்.....ஆனாலும் வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கடவுள் பரிசை வண்ணத்தாளில் சுற்றித்தந்திருந்தால்தான் உடனே பிரித்திருப்போமே....
பொட்டலமாய்க் கட்டியல்லவோ பரிசளிக்கிறார். பொட்டலத்தைச் சுற்றிய சிக்கலான நூல்கண்டு போலே பிரச்சனைகள்....
சிக்கலின் நுனி தெரிந்துவிட்டால் சீக்கிரம் பிரித்துவிடலாம் அல்லது கத்தரித்துவிட்டால் உடனே களைந்துவிடலாம்.
ஆம், உள்ளேயே போட்டுக் குழப்பிக்கொண்டிராமல் பிரச்சனைகளை மனதினின்று கத்தரித்துவிட்டால் வாழ்க்கை இனிக்குமாம். பெரியவர்கள் சொல்கிறார்கள்.
நல்லதொரு கருத்து. சிவாஜி அண்ணா குறிப்பிட்டதுபோல் கவிதை வடிவம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள்.
நன்றி,
இதை கவிதை என நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனாலும் வேறு பகுதிகள் இல்லாததால் இங்கே திரியிட வேண்டியதாயிற்று.
அறிவுரை ..
சிறுகுறை
கவிதையாய்
தந்திருந்தால்
அருமை யான்
உரை என்று
உரைக்கலாம்
நன்று
வசிகரன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks