பொ.யு.மு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞர் செநோஃபநீஸ் .
தம் நாட்டாரின் பல தெய்வ வணக்கத்தையும் மாந்தரின் இயல்புகளைக் கடவுள்களுக்கும் விலங்குகளுக்கும் பொருத்தி இலக்கியம் படைப்பதையும் அவர் எதிர்த்தார் .
அவரது ஒரு செய்யுளின் கருத்து கீழே தரப்படுகிறது ( ஆங்கிலத்திலிருந்து )
குதிரையோ சிங்கமோ மந்தநடை எருதோ
சுறுசுறுப்புக் கையிருந்தால் ஓவியம் தீட்ட , சிலை செதுக்க,
குதிரைதன் கடவுளாய்ப் பரியொன்றைப் படைக்கும் ;
எருது வடித்திருக்கும் எருதுச் சிற்பத்தை !
சரியான கருத்து தானே ?
-----------------------------------------------------------------------------------------------------------.
Bookmarks