அன்பார்ந்த மன்ற உறவுகளே…
களைகட்டிவிட்டது திருவிழா!
வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் துவங்குகிறது மன்றத்தின் மனங்கவர் பதிவரைத் தேர்ந்தெடுப்பதற்கானப் போட்டி.
கடந்த மாதங்களில் உங்கள் மனங்கவர்ந்த பதிவுகளைப் படைத்தவரை இங்கு பரிந்துரை செய்யுங்கள்.
ஒருவர், ஒருவரை மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
பரிந்துரை செய்யப்படும் பதிவர் உங்கள் மனங்கவர்ந்த காரணத்தையும் தெரிவித்தால் போட்டி களைகட்டும்.
நீங்கள் பரிந்துரைப்பவர் நிர்வாக உறுப்பினராக இருக்கக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி,
உரியவரை வரும் 20 ஆம் தேதிக்குள் முன்மொழிந்து போட்டியை செம்மையாய் நடத்திட ஒத்துழைப்பு தாருங்கள்.
பரிந்துரைக்குப் பின் வாக்கெடுப்பு நடைபெறும்.
அனைவரின் சீரிய ஒத்துழைப்பையும் நாடுகிறோம். நன்றி.
**************************************************************************
மனங்கவர் பதிவருக்கான வாக்கெடுப்பு துவங்கிவிட்டது. இங்கே சென்று உங்கள் பொன்னான வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே பதியலாம்.
வாக்கினைச் செலுத்த கடைசி நாள் : 24 - 07 - 2012
பண்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வாக்கெடுப்பில் பங்கேற்று மன்ற உறுப்பினர்களை ஊக்குவியுங்கள்.
Bookmarks