(அகமெம்நோன் மகளை வரவழைத்தார் . அவர் எதிர்பார்க்கவில்லை மனைவியும் வருவாள் என்பதை )
கிளித்தெம்நேஸ்த்ரா :--- ஒரேயொரு கேள்வி , கணவரே , பதில்சொல் ஆண்மையுடன் .
அகமெம்நோன் : ------- உத்தரவு போடாதே எனக்கு ; நிச்சயம் பதில்சொல்வேன்.
க்ளித்தெம்நேஸ்த்ரா : ------ இந்தக் குழந்தை , உன்மற்றும் என்குழந்தை
கொல்லப் போகிறாயா இதனை ?
அகமெம்நோன் : --------- கடவுளே , என்ன கேள்வியிது ? எவ்வளவு
தவறான ஐயம்?
க்ளித்தெம்நேஸ்த்ரா -------- உடைத்துவிடு மர்மத்தை ; சொல்பதில்: ஆம்இல்லை.
அகமெம்நோன் ------------- அறிவுபூர்வக் கேள்விகேள் , அறிவுபூர்வ விடைபெறுவாய்
க்ளித்தெம்நேஸ்த்ரா --- ஒன்று மட்டுந்தான் , பதில்தா அதற்கு .
அகமெம்நோன் ---- தெய்வமே, உதவு.; இதுநியாயமா யாவும்
எனக்கெதிராய் உள்ளன .
க்ளித்தெம்நேஸ்த்ரா --- எதிராக, உனக்கு , எனக்கு , இவளுக்கு , நம்மூவர்க்கும் .
அகமெம்நோன் -------- யாருனக்குச் சொன்னவர் தவறாய் ?
க்ளித்தெம்நேஸ்த்ரா ---- அப்படியா கேட்கிறாய் ? மதியின்றா உனக்கு ?
மூளையென இருக்கிறதா ஒன்று ?
அகமெம்நோன் ---- தொலைந்தேன்நான் , தெரிந்துவிட்ட தெல்லாம்
வெளிப்பட்ட தென்கமுக்கம் .
க்ளித்தெம்நேஸ்த்ரா -- ட்ரோய்க்குப் பலியொன்று வேண்டு மென்றால்
மெநலாஸ் கொல்லட்டும் ஹெர்மி யோனை,
அவருக்கு ஹெலெனால் பிறந்த மகளை .
தகராறே அவரால்தான் , எல்லாமே ஹெலென் பொருட்டு .
----------------------------------------------------------------------------------------------------------------------------
Bookmarks