Results 1 to 7 of 7

Thread: இந்தியாவில் புற்றுநோய்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    இந்தியாவில் புற்றுநோய்

    1. நீங்கள் முயற்சிக்காமலேயே எடை குறைகிறதா? எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மருத்துவரிடம் கூறி உடலின் எல்லா பாகங்களையும் சி.டி ஸ்கான் செய்து கொள்ளுங்கள்.

    2. உடல் பெருமன் கூடுவது ஓவேரியன் கான்ஸருக்கு அடையாள்ம். அடி வயிற்றில் வலி, அதிகம் சாப்பிடாமலேயே வயிறு நிரம்புதல், அடிக்கடி சிறு நீர் கழித்தல் ஆகியவையும் ஓவேரியன் கான்ஸருக்கு அடையாளங்கள்.

    3. மார்பகத்தின் தோல் தடித்து சிவப்பாக மாறுகிறதா? அது மார்பக புற்று நோயின் அறிகுறி.

    4. மாதவிடாய்களுக்கான காலங்களை தவிர்த்து இடைப்பட்ட காலங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் அதை புறக்கணிக்காதீர்கள், அது கர்ப்பபை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    5. தோலின் நிறம் மாறுவது தோல் சம்பந்தப்பட்ட புற்று நோயின் அறிகுறி.

    6. உணவை முழுங்குவதில் சிரமம் இருக்கிறதா? அது தொண்டை இருக்கும் பகுதியான இசோபாகஸ் என்ற இடத்தில் இருக்கும் புற்று நோயின் அறிகுறி.

    7. உங்களுடைய சிறு நீரிலோ அல்லது மலத்திலோ ரத்தம் இருந்தால் அது உணவுக்குழாய் (கலோன்) புற்று நோயின் அறிகுறி. இருமலுடன் ரத்தம் வெளிப்பட்டால் உடனே செக்*உப் செய்து கொள்ளுங்கள்.

    8. அடி வயிற்றில் வலியும் மன்ச்சோர்வும் ஏற்படுகிறதா? அது பான்க்ரியாஸ் என்ற சுரப்பியில் வரும் புற்று நோயின் அறிகுறி.

    9. கர்ப்பமாக இருக்கும் போது அஜீரணம் ஏற்படுவது இயற்கை. மற்ற நேரங்களில் காரணமின்றி அஜீரணம் ஏற்பட்டால் அது தொண்டை, வயிறு இவற்றில் ஏற்படும் புற்று நோயின் அறிகுறி.

    10. புகை பிடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் வாயிலோ அல்லது நாக்கிலோ வெள்ளை புள்ளிகள் தோன்றினால் அது ஓரல் புற்று நோயின் அறிகுறி.

    11. திடீரென்று காரணமின்றி வலி ஏற்பட்டால் உடன் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    12. உங்களுடைய கக்கத்திலோ அல்லது கழுத்தின் கீழ் பகுதியிலோ கட்டி ஒன்று உருவானால் அது ஒரு புற்று நோயின் அறிகுறி,

    13. இன்ப்ளுன்சா அல்லது வைரஸ் இவற்றால் ஏற்படும் காய்ச்சலை தவிர வேறு வைகையான காய்ச்சல் ஏற்பட்டால் அது புற்று நோயின் அறிகுறி.

    14. அடிக்கடி மயக்கம் வருதலும் புற்று நோயின் அறிகுறி.

    15. மூன்று நான்கு வாரங்களுக்கு மேலாக இடைவிடாத இருமல் புற்று நோயின் அறிகுறி.

    மேற்கண்ட அறிகுறிகளை படித்து விட்டு பயப்பட வேண்டாம். புற்று நோயை முதலிலேயே கண்டு பிடித்து விட்டால் அவற்றை குணப்படுத்துதல் எளிது. ஆகவே இந்த அறிகுறிகளை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.
    Last edited by மதுரை மைந்தன்; 22-06-2012 at 12:33 PM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பெண்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் புற்றுநோய் பற்றிய எச்சரிக்கைகளை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இந்த திரியை நீங்கள் தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ஐயா

    இன்னும் சில பதிவுகள் சேர்ந்த பின் இந்த திரியை ஒட்டி வைக்க பரிந்துரைப்பதோடு, 5 நட்சத்திரமும்

    மிக தேவையா பயனுள்ள திரியை துவக்கியமைக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் ஐயா
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    பெண்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் புற்றுநோய் பற்றிய எச்சரிக்கைகளை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
    நன்றி சகோதரி!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    இந்த திரியை நீங்கள் தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ஐயா

    இன்னும் சில பதிவுகள் சேர்ந்த பின் இந்த திரியை ஒட்டி வைக்க பரிந்துரைப்பதோடு, 5 நட்சத்திரமும்

    மிக தேவையா பயனுள்ள திரியை துவக்கியமைக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் ஐயா
    நிச்சயமாக தொடருவேன். புற்றுனோய் விழிப்புணர்ச்சி நமது மக்களுக்கு மிக அவசியம். உலக சுகாதார அமைப்பு (WHO)
    வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அடுத்த பத்தாண்டுகளில் புற்றுனோய்க்கு இரையானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருமுன் காத்தல் மிக அவசியம். அதற்கு புற்று நோயைப் பற்றிய விழிப்புணர்ச்சி மிக அவசியம். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    இந்தியாவில் புற்றுநோய்


    இந்தியாவில் மனிதர்களின் இறப்புக்கு 10 காரணங்களில் ஒன்று புற்றுநோய்.

    ஆண்களில் பெரும்பாலானோருக்கு சுவாசக் குழாயில் புற்றுநோய் வருகிறது.

    பெண்களுக்கு கருப்பையில் அதிகம் புற்று நோய் வருகிறது.

    பச்சை புகையிலையை பயன்படுத்துவதால் ஆண்களில் 44 சதவிகிதத்தோருக்கும் பெண்களில் 20 சதவிகிதத்தோருக்கும் புற்று நோய் ஏற்படுகிறது.

    எந்த நிமிடத்திலும் 25 லட்சம் பேர் புற்று நோய்க்கு ஆளாகிரார்கள்.

    ஆனால் இதில் 7 - 8 லட்சம் பேரில் தான் புர்று நோய் கண்டறியப்படுகிறது. இவர்களில் பாதிக்குமேல் புற்று நோய்க்கு இரையாகிறார்கள்.

    80 சதவிகிதம் பேருக்கு புற்று நோய் முற்றி புரையாடிப்போன நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



    புற்று நோய்க்கான காரணங்கள்


    புகையிலை பழக்கம்

    உணவுப் பொருட்களில் கலப்படம்

    கதிர்வீச்சுக்கு உள்ளாகுதல்

    குடிப்பழக்கம்

    சுற்றுப்புற சூழலில் கலப்படம்

    ஒரு சில மருந்துகளை சாப்பிடுதல்

    விவ்சாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லிகள்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  7. #7
    புதியவர்
    Join Date
    19 Jun 2012
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    9,165
    Downloads
    65
    Uploads
    0
    உங்களுடைய தகவளுக்கு மிக்க நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •