( தந்தை - மகன் தர்க்கம் தொடர்கிறது )
கிரியன் -
என்வயதில் பகுத்தறிவுப் பாடங்கள் படிக்க
வேண்டுமா அதுவும் உன்வயதுக் காரனிடம் ?
ஹெமோன் -
நானிளைஞன் , உண்மை , ஆனால் வயதைக்
காட்டிலும் செயல்களே கவனிக்கத் தக்கவை .
கிரியன்
- குழப்பம் விளைவிக் கின்றாரைப்
பக்தியுடன் வணங்கும் செயலா ?
ஹெமோன் -
கீழ்மையைப் பாராட்ட ஒருநாளும் தூண்டேன் .
கிரியன் -
ஆனால் அவளைத் தாக்கியது அந்நோய்தான் !
ஹெமோன் -
மறுக்கின்றார் தீப்ஸ்நகர் மக்கள் அனைவரும் .
கிரியன் -
எப்படிநான் ஆணைகள் பிறப்பிக்க வேண்டுமென
எனக்குப் புத்தி சொல்லுமா நகரம் ?
நீயவளை மணப்பது ஒருகாலும் நடக்காது .
ஹெமோன் -
அப்படி யென்றால் அவளிறப்பாள் அச்சாவு
அழிக்கும் இன்னொரு வரையும் .
கிரியன் -
மிரட்டலா ? எனக்கா ? அவ்வளவு துணிச்சலா ?
ஹெமோன் -
மிரட்டலா தவற்றை எதிர்த்து வாதிடல் ?
கிரியன் -
மாளட்டும் உடனேயவள் , இவன்கண் எதிரேயே !
ஹெமோன் -
நடவாது, நிச்சயமாய் என்னெதிரே மடியாள் .
உன்கண்ணும் இனியென்றும் என்தலையைக் காணாது .
( ஹெமோன் போய்விடுகிறான் )
Bookmarks