சுதேசி சுதேசி என்றே
வளர்த்தோம் சர்வேசா...
இந்தப் பயிரை
கண்ணீர் விட்டே காத்தோம்...
கோக்கும் பெப்ஸியுமாய்
ஊற்றினால் எப்படி?
காந்தியிசம் கம்யூனிசம் அழிந்தால்
என்ன சர்வேசா?
மனிதம் என்ன ஆனது...
அதைக் கூடவா
ஆடு மாடுகளுக்கு
தின்னக் கொடுக்க வேண்டும்?
அஹிம்சையில்
அகரத்தை அடித்து சூப்பு
குடித்து விட்டு
சொன்னவனை
துரோகியாகவா
அறிவிக்க வேண்டும்?
ராட்டையில்
நூல் நூற்ற காலம்
அழிந்து
போனாலும் பரவாயில்லை...
அதற்காக
நூலை மட்டுமா உடுத்த வேண்டும்?
இந்தியமும் இல்லாமல்
மேற்கத்தியமும் இல்லாமல்
திரிந்து
இரண்டும் கெட்டானாகவா
இருக்க வேண்டும்?
இதற்காகவா இந்தப் பயிரை
வளர்த்தோம் சர்வேசா?
Bookmarks