Results 1 to 5 of 5

Thread: வாழட்டும் உலகம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    வாழட்டும் உலகம்

    வாழட்டும் உலகம்
    என்றென்றும்
    எம்மை
    உள்ளிருத்திக்கொண்டு...

    சிறுகச் சிறுகச் சிதைந்து
    உக்காத எலும்புகள் ஆனதும்தானே
    உள்ளாக்கப்பட்டோம் மண்ணுள்...

    குவிந்து கிடந்த போதிலும்
    ஒரு மிருகம்கூடக் குதறவில்லை,
    அவையும் நம் கூடவே
    குவிக்கப்பட்டுக் கிடந்ததால்...
    ஆனால்,
    அந்தக் குறையும் இருக்கவில்லை,
    குதறிய மனித வெறியர்களால்...

    கதறியபோது
    நமது வலிகளைக்
    கண்டுகொள்ளாத உலகம்,
    குதறிய வடுக்களாய்
    நம்மைக் கண்டபின்
    பதறுகின்றது...

    அணுகுண்டென்றால்
    ஓரணியில் திரளும் உலகம்,
    அணுவணுவாய் அழிக்கப்படுகையில்
    எதிரணியிற்கூட ஏன் இல்லை...

    அணுவால் அழிக்கப்பட்டிருக்கலாம்,
    இப்படி
    அணுவணுவாய் அழிக்கப்பட்டதிலும்...
    வடுக்கள் தொடர்ந்திருந்தாலும்
    வலிகள் சட்டென முடிந்திருக்கும்...

    இப்படிக்குச்,
    சடலங்களில் வீழ்த்தப்பட்டுச்
    சடலங்களில் புதைக்கப்பட்டச்
    சடலங்கள்...

    இப்படி இதை எழுதியது,
    இந்த வேதனைகளைப் பட்டறியாத
    நாளைய சடலமொன்று...
    Last edited by அக்னி; 18-05-2012 at 06:19 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வலிக்கிறது அக்னி. சடலம் சொல்லும் கவிதை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வாழ்கின்ற சடலங்கள் வீழ்கின்ற போதுதான்
    வீழ்ந்துபட்ட சடலங்களின் வேதனை புரியும்
    தாழ்வுற்ற மனிதனின் தரித்திர குணத்தால்
    பாழ்பட்டுப் போனதேப் பைந்தமிழ்த் திருநாடு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    சடலத்தின்
    வழி
    நம்
    மனதில்
    வலி .!

    கவிதை இன்
    வழி
    உம
    விழிகளில்
    வழியும்
    நீர்
    பேனா
    வழி
    பெருக்கெடுத்ததோ ..

    அருமை ..
    வசிகரன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    அக்னி !ஈழத்தின் அவலம் இக்கவியில் தெரிகிறது எனக்கு !
    ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து அக்கினியும் உங்கள் கவிதையில் எரிகிறது அக்னி!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •