கிரேக்க இதிகாசம் , இலியட்,, எலெக்த்ரா நாடகத்துக்கு ,,அடிப்படை .
அதன் சுருக்கம்
:
மன்னர் அகமெம்நோனுக்கு எலெக்த்ரா , கிரிசேர்த்தமிஸ் என்ற இரு புதல்விகளும் ஒரேஸ்த்தஸ்
என்னும் மகனும் இருக்கின்றனர்
( இஃபிஜெனியா என்ற மகள் தெய்வத்துக்குப் பலி கொடுக்கப்பட்டுவிட்டாள் )
அரசரது தலைமையில் கிரேக்கப் படை ட்ரோய் நகரத்தாரை எதிர்த்துப் போரில் ஈடுபட்டிருந்தது ;
அது நெடுங்காலம் நீடிக்கவே , அவரது மனைவி க்ளித்தெம்நேஸ்த்ரா , எகிஸ்த்தஸ் என்பவனை
மணந்துகொண்டாள் . வெற்றிக் கனி கொய்து அவர் திரும்பி வந்தபோது , மனைவியும் புதுக்
கணவனும் , முன் திட்டப்படி அவரைக் கொன்றுவிட்டனர் .
தம்பி பழி வாங்க வேண்டும் என்பது எலெக்த்ராவின் விருப்பம் . சிறுவனாகிய அவனது உயிருக்கு அன்னையால்
நேரக்கூடிய ஆபத்தைத் தவிர்ப்பதற்காக அவன் வேறு ஊரில் பத்திரமாய் வளர்வதற்கு அவள் கமுக்கமாய் ஏற்பாடு
செய்தாள் . தக்க வயதில் அவன் வந்து வினை முடிக்க வேண்டும் .
இரு நாடகங்களிலிருந்தும் சில காட்சிகளை , ஆங்கில வழி , மொழி பெயர்த்து வழங்குவேன் ..
Bookmarks