என்னை நேசிக்கவில்லை நீ !
பிரியத் தூண்டும் உண்மை..
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்..
பிரியாமல் தவிப்பதன் உண்மை !
நேசிக்காமல் கொல்கிறாய் நீ
என் நேசத்திலிருந்தே
சுவாசத்தை கிரகிக்கிறேன் நான் !
தொடங்கிய புள்ளியில் மீண்டும் மீண்டும்
தள்ளி இழுக்கும் சுழலில் நான் !
ஒரு பாதி மறுதலிப்பும்
மறு பாதி மெளனமுமாய் நீ..
உன் கோபம் ,
கண்டுகொள்ளா முகபாவத்திற்கு ,
வளைந்து கொடுக்கும் என் நேசம்...
நீ அறியாமல் உன்னையும்
வளைத்திடும் அறிகுறிகள் கண்டு
புன்னகைக்கிறேன் !
கர்வக் கோட்டையமைக்கிறாய் உனைச்சுற்றி..
என் சீண்டல்களால் அதை தகர்க்கிறேன் !
காதலையோ கண்ணீரையோ
காட்டிக்கொள்ளாத உன் கர்வமென்ற
விண்ணைத் தாண்டி வா..
சேர்ந்து அழுதால் கண்ணீரையும்
கரைக்கும் நம் நேசம் !
Bookmarks