மன்னிப்பு என்னும் மாபெரும் மந்திரத்தால்
இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம் செய்யலாம்.
மன்னிக்கப் படுபவன் மனிதநிலை அடைகிறான்
மன்னிப்புக் கொடுத்தவனோ தெய்வநிலை அடைகிறான்.
கற்றவன்தான் அதிகக் குற்றம் செய்கிறான்
கொற்றவனும் சிலசமயம் குற்றம் செய்கிறான்.
தண்டனைகள் குற்றங்களைக் கூட்டவே செய்கின்றன.
மன்னிப்பு மட்டுமே திருடர்களைத் திருத்துகின்றன.
அப்பத்தைத் திருட நினைப்பவனுக்கு அறுசுவை உணவுகொடு.
துண்டைத் திருட நினைப்பவனுக்கு வேஷ்டியை உருவிக்கொடு
நாணித் தலைகுனிந்து நல்லவனாய்த் திருந்திடுவான்.
இன்னா செய்தார்க்கு இனியவே செய்தலும்-ஒரு
கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டலும்
மன்னிப்புப் புத்தகத்தின் மறக்கவொண்ணா பக்கங்கள்.
Bookmarks