Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: மன்னிப்பு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    மன்னிப்பு

    மன்னிப்பு என்னும் மாபெரும் மந்திரத்தால்
    இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம் செய்யலாம்.
    மன்னிக்கப் படுபவன் மனிதநிலை அடைகிறான்
    மன்னிப்புக் கொடுத்தவனோ தெய்வநிலை அடைகிறான்.
    கற்றவன்தான் அதிகக் குற்றம் செய்கிறான்
    கொற்றவனும் சிலசமயம் குற்றம் செய்கிறான்.
    தண்டனைகள் குற்றங்களைக் கூட்டவே செய்கின்றன.
    மன்னிப்பு மட்டுமே திருடர்களைத் திருத்துகின்றன.
    அப்பத்தைத் திருட நினைப்பவனுக்கு அறுசுவை உணவுகொடு.
    துண்டைத் திருட நினைப்பவனுக்கு வேஷ்டியை உருவிக்கொடு
    நாணித் தலைகுனிந்து நல்லவனாய்த் திருந்திடுவான்.
    இன்னா செய்தார்க்கு இனியவே செய்தலும்-ஒரு
    கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டலும்
    மன்னிப்புப் புத்தகத்தின் மறக்கவொண்ணா பக்கங்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மன்னிப்பின் மேன்மையைப் பறைசாற்றும் வரிகளை, தண்டிக்கும் எண்ணமிருப்பவர் படித்தால் போதும், கொஞ்சமாவது சிந்திக்கத் தோன்றும்.

    மிகவும் உண்மையான வரிகள். பாராட்டுகள் ஐயா.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    மன்னிப்பு ...மேன்மை...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    மன்னிப்பின் கண்கள் கருனை மிக்கவை
    மன்னிப்பின் மனம் தயவு மிக்கது
    மன்னிப்பின் கைகள் தாட்சயம் கொண்டவை
    மன்னிக்கும் குணம் தெய்வீக மானது

    மன்னிக்க கற்றுக் கொள் பல தண்டனைகள் இறக்கும்
    மன்னித்து பழகு பல வஞ்சனைகள் அற்று போகும்
    மன்னித்தல் பழக்கு பல பகைமைகள் மரித்து போகும்
    மன்னிததுப் பார் பல உறவுகள் வந்து சேரும்

    வாழ்த்துக்கள் ஐயா
    அன்புடன் ஆதி



  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜெயந்த்,ஆதன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    மன்னிப்பின் மேன்மை மகத்துவமானது என சொல்லும் கவிதை அருமை.

    எத்தனை தடவை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், ஆனால் எதையும் மறக்க கூடாது என்பது என் அனுபவ பாடம்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மன்னிப்பின் மேன்மை சொல்லும் கவிதை. ஆனாலும் சிலரின் செயல்கள் மன்னிக்கத் தகுதியில்லாதவையாக இருக்கின்றன. மன்னிப்பு என்பதே அவன் செய்த தவறை உணர்ந்து திருந்தத்தான்....ஆனால்...எதை செய்தாலும் மன்னிப்புக் கிடைக்கும் என்ற தைரியத்தில் தொடர்ந்து குற்றம் செய்பவனை எப்படி மன்னிப்பது.

    மிக அருமையானக் கருத்துக்கள் ஐயா. வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஹேகா, சிவா.ஜி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களை மன்னிக்கும் தெய்வ குணம் நமக்கு இருந்தால் தெய்வத்தை தேடி கோயிலுக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை... அன்பும் கருணையும் இருக்கும் இடத்திற்கு தெய்வமே தேடி வரும் என்பதை அழகாகச்சொன்ன கவிதை வரிகள் ஜகதீசன்....

    ஹேகா சொன்னது போல தவறுகளை மன்னித்துவிட்டு தவறு செய்பவரிடம் இருந்து நாம் ஒதுங்கிவிடவேண்டும்....

    தவறு செய்துவிட்டு கேட்கப்படும் மன்னிப்பு அடுத்தமுறை செய்யப்போகும் தவறுக்கு கேட்கப்படும் அனுமதி என்று அம்மா சொல்லி இருக்காங்க.....

    மன்னித்துவிடலாம்.. ஆனால் அவர்கள் செய்த கெடுதலை மட்டும் மறக்காமல் மனதோடு இருந்தால் அதுவே நமக்கு ஜாக்கிரதை உணர்வுடன் கூடிய அனுபவம் கிடைக்கும்..

    அன்பு நன்றிகள் ஜகதீசன்... கருணை மனதுடன் கூடிய கவிதை வரிகள் வரைந்தமைக்கு.
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    [QUOTE=மஞ்சுபாஷிணி;549218]



    (தவறு செய்துவிட்டு கேட்கப்படும் மன்னிப்பு அடுத்தமுறை செய்யப்போகும் தவறுக்கு கேட்கப்படும் அனுமதி என்று அம்மா சொல்லி இருக்காங்க.....)


    எந்த அம்மா?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #12
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    [QUOTE=M.Jagadeesan;549230]
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post



    (தவறு செய்துவிட்டு கேட்கப்படும் மன்னிப்பு அடுத்தமுறை செய்யப்போகும் தவறுக்கு கேட்கப்படும் அனுமதி என்று அம்மா சொல்லி இருக்காங்க.....)


    எந்த அம்மா?
    ஆப்வியஸ்லி எங்க அம்மா தான்.. எனக்கு ஒரே ஒரு அம்மா தானே இருக்காங்க ... இது என்னப்பா இப்படி ஒரு சந்தேகம்?
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •