Results 1 to 6 of 6

Thread: கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து

    ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
    ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
    காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
    கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
    கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
    காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
    கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
    இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
    பானையின் அடியில் இருந்த நீரைப்
    பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
    அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
    அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
    இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
    இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
    உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
    "தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
    பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
    சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes கீதம் liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஆகாயத் தோட்டியென்னும் பெயரால் காக்கையைக் குறித்தக் காரணம் கண்டு ரசித்தேன்.

    கால்கை பிடிப்பதையே காக்காய் பிடிப்பது என்று மாறிய வழக்கைத் தெளிவித்தமை கண்டு மகிழ்ந்தேன்.

    காக்கையிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவற்றைக் கவிதையாக்கிய அழகு கண்டு வியந்தேன். பாராட்டுகள் ஐயா.

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    உரத்த
    குரலில்
    சொன்ன
    உண்மை !
    ஸ்ரத்தை
    எடுத்தாவது
    சிந்திக்க
    வேண்டியது...

    நன்று
    வசிகரன்

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வசிகரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
    இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .//

    பல விதாமாய் சிந்திக்க வைத்த வரிகள், வாழ்த்துக்கள் ஐயா
    அன்புடன் ஆதி



  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆதன் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •