விடைபெறுகிறது நாகம்
விடைபெறா நேசத்தொடு
வேறறக் கூடி
விடைபெறுகிறது நாகம்
விடைபெறா நேசத்தொடு
வேறறக் கூடி
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
நகர முதலாய் யகர முடிவாய்
நமச்சிவாயத் திரு உருவாய்
நம்முன் வாலாட்டி
நன்றியுணர்வை ஊட்டும்
நல்ல குரு நாயார்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
நாசமாகாப் பூரண புத்தம்
நாசமாவதாகத் தோற்றுவிக்கும் மாயைப் பிரமை
பிரமையின் பிடியில் இருக்கும் நமக்கு
புத்தம் பிடிக்க வில்லை
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
குழுக்களாய் பேதக் குழியில் கிடக்கும் வரை
குருட்டாம் போக்குப் பேச்சே தொடரும்
பழுத்த நேசக் கனியாய்க் கனிய*
மழைக்கும் ஞானச் சாறே மணக்கும்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
கூட்டத்தோடு கோவிந்தா போடும் சாதாரண மனிதர்களை பழுத்த ஞானக்கனியாய் மாற்ற நேசக்கனியை அளிக்கும் மழை....!!!
(நேசக்கனியை ஞானச்சாற்றாய் மாற்றியமைக்கு மன்னிக்கவும்...எனக்குத் தோன்றியது)
நாகரா ஐயாவின் ஞானக்கிறுக்கலில்...ஞாலம் கண்டேன்.. நன்றிகள் ஐயா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி சிவா
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அன்பே கோப்பையாகிறது.
அன்பே பருகும் அமிழ்தமாய்த்
தன்னைப் பூரண*மாய்க் கோப்பையில் நிரப்பி
வழிகிறது.
அன்பே தன்னைத் தான் பூரணமாய்ப் பருகித்
தன்னைத் தனக்குப் பூரணமாய்ப் பகிர்கிறது.
அன்பின் பருகலுக்கும் பகிர்தலுக்கும் இடையே
எத்தடையும் இன்றியும்
மாயை பின்னும் அனந்தத் தடைகளின் பிரமையை
அன்பே பூரணமாய் அனுமதிக்கிறது.
அன்பே
தன் வள்ளன்மையின்
பூரணப் பிரமாணமாகிறது.
புதுசாக ஏதுங்
கூவ வேண்டிய அவசியமே இல்லா
அன்பே
நாகத்தின் அனாவசியப் புதுக் கூவல்களைப்
புறக்கணிக்காமல்
பூரணமாய் உள் வாங்கி
"நல்ல பாம்பே! நீ நீடூழி வாழி!"
என்று இருதய பூர்வமாய்
ஆசியும் அளிக்கிறது.
("நாகத்தின் அனாவசியப் புதுக் கூவல்கள்" படிமமாகி ஒவ்வொருவரின் ஒவ்வொன்றின் படைப்புகளையுஞ் சுட்டுகிறது, அன்பே ஓவ்வொருவரின் படைப்புகளையும் ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து ஆசி வழங்கி விட்ட பிறகு, எவ்வொருவரும் மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக மனச் சலனம் படத் தேவையில்லை, ஆனால் இந்த உண்மையை மனம் அவ்வளவு எளிதில் ஏற்காது, மனத்துக்கு மற்றவர்களின் அங்கீகாரம் வேண்டும், இது நம் அனைவருக்கும் பொருந்தும், மனச் சமனம் வரும் வரை இதுவே நம் இயல்பு, மனத்துக்கு இருதயம் தரும் ஆறுதலாகவே இக்கவிதை அமைந்திருக்கிறது)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அன்புக்கும் எனக்கும் இடையே
இருந்த தடைக்கல்லின் பிரமையை
அன்பே பூரணமாய்க் கரைத்து விட்டது
(இது தியான வாக்கியம், அவ்வப்போது ஞாபகங்கொள்ள ஒரு சீட்டில் எழுதி, இருதயத்துக்கு அருகிலுள்ள சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் உதவும் அன்பின் இந்த சிகிச்சை!!!)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
நடைப் பிணமான என்னை
எல்லோருங் கைவிட
வேறு வழியின்றி
அன்பின் கையிடம்
பூரணமாய்ச் சரணடைந்தேன்
அக்கணமே
உயிர்த்தெழச் செய்து
"என் வள்ளன்மைக் கை சுட்டும்
வழி காட்டியாய் நீ
இரு தயவாய்"
அருள் வாக்களித்து
மண் மேல் என்னை நட்டது
அன்பு.
(வசீகரித்து இழுக்கும் கவர்ச்சி மிகு வேறு வழிகள் இருக்கும் வரை குறுகிய நேர் வழியான பூரண சரணாகதிக்குத் தயாராவதில்லை நம் மனம்)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
உயிர்ப்புச் சக்தியாய்-உயிராய்- உயிர்ப்பிக்கும் கருவியாய் அன்பே......நன்று..நன்றி..
உம் புரிந்துணர்வுகளுக்கு நன்றி திரு. ந. க.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அன்போடு கூடிய அருளுரை!
மனமே அதற்கென்றும் பொருளுரை!
என்றென்றும் நட்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks