Results 1 to 3 of 3

Thread: சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 4

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 4

    ( இளைஞர் இருவர் ஒரேஸ்த்தசின் அஸ்தி என்று சொல்லி வெண்கலப் பாத்திரம் ஒன்றைத் தருகின்றனர். கையில் வாங்கிய எலெக்த்ரா

    இதுதானா மிச்சம் என்வாஞ்சைக் குரிய
    ஒரேஸ்த்தசில் இருந்து ; இதுமட்டுந் தானுலகில்
    எனக்குக் கூரருமையாய் இருந்தவனை நினைவூட்ட .
    இப்படி உன்னை வரவேற்பேன் என்று எண்ணினேனா
    இறுதியாய் உன்னைப் பிரிந்தபோது - இப்படி
    ஒருகைப்பிடி வெறுமை ? இதுவாநான்
    விடைதந்த பிரியமான குழந்தை ?
    உயிர்பிழைக்க வெளியூர்க்கு அனுப்பி உன்னைக்
    காப்பாற்ற முயன்ற தற்குப் பதிலாய்
    நான்செத் திருந்தால் இருந்திருக்கும் எவ்வளவோ மேலாய் .
    அன்றே நீயும் மாய்ந்திருப்பாய். இடம்பெற்று
    இருப்பாய் தந்தையின் கல்லறையில். அதற்கு மாறாய்
    வெளியூரில் , இக்கொடிய இறப்பு, இல்லுக்குத் தூரமாய்,
    சகோதரிக்குத் தொலைவில். உடம்பைக் கழுவி
    ஈமக் கடனுக்காய் உடையணி விக்கவோ
    துயர்தரும் மீதியைப் பாசமிகு கைகளால்
    சேகரிக்கும் கடமைதனைச் செம்மையாய்ச் செய்யவோ
    நானங் கில்லை. அன்புக்கு உரியவனே,
    உனக்காகச் செய்ய வேண்டிய தெல்லாம் அந்நியர்
    வேலைஆயிற்று. இங்கே வீட்டுக்கு எங்களிடம்
    சிறுதூசிப் பாத்திரமாய் நீவரும் வரையில்.
    உன்னை வளர்த்தேன் வழக்கமாய்க் கடந்த நாள்களில்.
    அன்னையின் குழந்தை என்பதைக் காட்டிலும் அதிகமாய்
    என்மகவாய் நீயிருந்தாய்; வேறுயாரும் இல்லையுன்னைக்
    கவனித்துக் கொள்ள நானன்றி ; சகோதரியென்
    றழைப்பாய் என்னை, வேறுசகோதரி இல்லாததுபோல்.
    நீஇல்லை இப்போது , முடிந்தது எல்லாம் ஒருநாளில்;
    போயின யாவும் காற்றில் தூசிபோல்;
    மாய்ந்தார் தந்தை , மாண்டாய்நீ , பிணமன்றி
    நான்வேறு என்ன எல்லாரும் போனபின் என்னைவிட்டு ?

    ( தூதராய் வந்தவர் ஒரேஸ்த்தசை வளர்த்தவர் ; இளைஞர் இருவரும் ஒரேஸ்த்தசும் நண்பனும் . மாறுவேடம் நீக்கிய அவர்கலைக் கண்டு களிகூர்ந்தால் எலெக்த்ரா .
    அரண்மனையுள் சென்ற ஒரேஸ்த்தஸ் தாயையும் புதுக் கணவனையும் கொன்றான் )

    ------------------------------------------------------------------------

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    என்ன அழகான வசனங்கள். கருத்துச் செறிவு வியக்க வைக்கிறது. இவை மேடையில் கேட்க எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

    நினைக்கவே இனிக்கிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    என்ன அழகான வசனங்கள். கருத்துச் செறிவு வியக்க வைக்கிறது. இவை மேடையில் கேட்க எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

    நினைக்கவே இனிக்கிறது.
    மெய்தான் . கிரேக்க மூலத்தில் வாசித்தால் பிரமாதமாய் இருக்கும் . 1500 ஆண்டுக்குப் பின்னும் காலத்தை வென்று நிற்கும் படைப்புகளை இயற்றியோரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •