( கன்னி எலெக்த்ரா தன்னைத் துன்புறுத்தும் தாயிடம் )
தாயா ! சிறைக் காவலர் என்பது பொருந்தும்,
என்மீது நீதிணிக்கும் அடிமைத் தனத்தையும்
உன்னிட மிருந்தும் உன்துணைவ ரிடமிருந்தும்
நான்கேட்க வேண்டியுள்ள வசவுகளையும் நினைத்தால் .
ஏசலாம் என்னை எண்ணப் படியெலாம் .
இழிந்தவள் , கொடூரி , நாண மில்லாள் ,
இவ்வா றெல்லாம் இருக்கிறேன் என்றால்
இதுவே சான்று உன்மகள் எனற்கு .
( என்ற்கு - எனல் + கு = என்பதற்கு )
Bookmarks