நலமே சிவா.. நன்றி..!
தாமரை,
சேலம் பற்றி சொன்னதற்கு நன்றி..! பேர் லேண்ட்ஸ் ன் தமிழ்ப் பெயரைச் சொன்னதற்கும்...
அன்பு உறவுகளுக்கு மீண்டுமோர் வேண்டுகோள்....புதிதாய் மன்றத்தில் இணைந்த உறவுகள் தங்கள் ஊர்களைப் பற்றியும் எழுதலாமே....கலையரசி மேடம், கீதம் தங்கை, தாமரை போன்றோரின் ஊர்வாசனைக்குப் பிறகு உங்களூர் வாசமடிக்கட்டுமே....வாருங்கள் நண்பர்களே...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சிவாஜி அண்ணாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். புதிய உறவுகள் உங்கள் ஊர்களைப் பற்றி அனைவரும் இங்கு அறியத் தாருங்களேன்.
சிறுவயதில் எங்கள் அத்தை சொல்லித்தந்த பாடல்
...மாம்பழமாம் மாம்பழம்! பாடலில்
...சேலத்துமாம்பழம்...தித்திக்கும் மாம்பழம்.. என்ற வரிகளைப்பாடும் போதே எச்சில் வழிந்து மற்றவர்கள் சிரித்தது நினைவுக்கு வருகிறது.
சேலம்பற்றி திகட்டாத தித்திப்பாய் பகிர்ந்தீர்கள்! தாமரை அவர்களே!
சுவையோ சுவை!
என்றென்றும் நட்புடன்!
பிறந்தது கொரடாச்சேரி பின் தந்தையின் பணிமாற்த்தினால் சன்னாநல்லூர், குளிக்கரை, பூதமங்கலச்சேரி, பாலையூர், என பலவிடங்கள் மாறி நான் ஜந்தாம் வகுப்பு படிக்கும் போது மன்னை (மன்னார்குடி) வந்து பின் கல்லுரி வரை அங்கிருந்தது சிஏ படிக்க சென்னை வந்தது, எனது பெற்றோர் கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் குடிபுகுந்தது, நான் வேலையின் போது இருந்த புதுக்கோட்டை, திருச்சியில் அடைந்த அனுபவங்கள், ஆடிட்க்காக (தணிக்கைக்காக) பல ஊர்கள் பல நாடுகள் சுற்றித்திரிந்தாலும் மன்னையும், திருச்சியும் எனக்கு கிடைத்த மகத்தான பாக்கியங்கள், எதைச்சொல்ல வார்த்தைகள் அடைக்கின்றன ஆனால் எழுதத்தெரியவில்லை!
பாமினி ஆற்றங்கரையும், காவிரி ஆற்றங்கரையும் என்னற்ற அனுபவங்களைப்பதித்திருக்கின்றன என்னுள். மன்னையின் ஒவ்ஒரு தெருவும் கதைகள் சொல்லும் என் வாழ்வில். திருச்சி பாலக்கரை, பொன்மலை ரயில்வே காலனி F மற்றும் H குடியிருப்பு, தில்லைநகர் என பல நினைவிடங்கள். நான் அங்ககெல்லாம் வாழவில்லை என் எதிர்கால நினைவுகளைச்சேகரித்திருந்தேன் என்றே சொல்வேன் பிற்காலத்தில் அசைபோட! மல்லிகைப்பந்தலின் கீழ் அனுபவித்த வாசனையை வார்த்தைகளில் வடிக்கத்தெரியவில்லை!
என்றென்றும் நட்புடன்!
நினைவுகளின் கோர்வையினை தொகுப்பது என்பது கடினம் தான் .சில வருட நினைவுகள் என்றேனும் ஏதேனும் நிகழ்வுகள் நிகழும் போது நினைவுக்கு வரும் பல நினைவுகள் ஓய்வு நேரத்தில் அசை போடும் போது நினைவுக்கு வரும் வரும் நினைவுகளை எழுத்தேட்டில் பதிப்பது இன்னும் கடினம் .தங்கள் ஊர் நினைவுகள் மூலம் சில ஊர்களை பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி கும்பகோணத்து பிள்ளை அவர்களே!
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
புரிதலுக்கு நன்றி நாஞ்சிலாரே!
என்றென்றும் நட்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks