பொன்மலை என்றதுமே ஒரே மாதிரியான வீடுகள் அமைந்த ஊர் தான் நினைவுக்கு வருகிறது. புதிதாய் ஊருக்குள் நுழையும் வெளியூர்க் காரர்களுக்கு வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போது மென்றாகிவிடும்.
மரியாதையுடன் பேசும் திருச்சி தமிழ், எம்மதமும் சம்மதம் என்கிற அம்மக்களின் சகோதர மனப்பான்மை, திருட்டு சீசன், ரெயில்வே பணிமனை பற்றிய செய்திகள், தொலைக்காட்சி வருவதற்கு முன், பின் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு சொந்த ஊரின் அருமை பெருமைகளை அடுக்கியிருக்கும் கீதத்துக்குப் பாராட்டுக்கள்.
அந்த ஊருக்கே உரித்தான சிறப்புச் செய்திகளைச் சுவைபடச் சொல்லி பொன்மலையைச் சுற்றிக் காட்டிய கீதத்துக்கு நன்றி!
Bookmarks