Quote Originally Posted by கலைவேந்தன் View Post
உலகத்தின் முதுகெலும்பை
எங்கள் முதுகெலும்பை முறித்து..

உணவுக்கூடமாய் திகழ்ந்தது தமிழகம்
இன்று
உலாக்கூடமாய் திரிந்திட்ட நிலை..

அவர் நிலத்தை அவரவர் உழுத காலம் போய்
உவர் நிலமே மிஞ்சியது இன்று..!

அரிசி முதல் பிண்ணாக்கு வரை
அரசின் இலவசம்..
உழவனின் மனம் புண்ணாக்கி
உழுதுபெற்ற வாக்குகள்
அழுதுநிற்கும் நாங்கள்
ஆதரிப்பார் யாரோ..?

காவிரிக்காய் பாலாறுக்காய் வைகைக்காய்
காய்ந்திருந்து காத்திருந்து
மழைத்தாயும் கொஞ்சம் மனம் முறுக்கிப்போனதனால்
உழைத்தாலும் வீணாச்சு எம் வாழ்க்கை பாழாச்சு..

இந்த நிலைக்கொரு இறுதிவரும்
எல்லார் மனதிலும் உறுதிவரும்..
வறண்டு போன நிலையில் உங்கள்
கரன்சியா கூட வரும்..?
புண்ணாகிப் போன மனதிலிருந்து உதிர்ந்த கவிதை..
ஆங்காங்கே திட்டுத் திட்டாய் உதிரம்..