கவிதை ..
கோடை தென்றல் ..
திரை இசை அன்று
ஆலமரம்
ஆழமான விழுது
பொழுதும் போக்கலாம்
அழுதும் பார்க்கலாம்
அனைவரும் சேர்ந்தும் கேட்கலாம் ,
இன்று ,
வக்கிரம்
தற்குறி
பொறுப்பின்மையின்
மொத்த முழக்கம் ,
இடை இடையே
தேனிசையும்
கலந்த கலவை .
கவிதை ..
கோடை தென்றல் ..
திரை இசை அன்று
ஆலமரம்
ஆழமான விழுது
பொழுதும் போக்கலாம்
அழுதும் பார்க்கலாம்
அனைவரும் சேர்ந்தும் கேட்கலாம் ,
இன்று ,
வக்கிரம்
தற்குறி
பொறுப்பின்மையின்
மொத்த முழக்கம் ,
இடை இடையே
தேனிசையும்
கலந்த கலவை .
வசிகரன்
பூமி நமது அன்னை. நீர் வேண்டின் இயற்கையாய் அமைந்த ஆறுகள் குளங்கள் எத்தனையோ இருந்தும் இன்று நாம் செய்வது ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தலே.
ஆழ்துளைக் கிணறுகளை எங்கெங்கும் அமைத்து நீரை உறிஞ்சுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் அன்னை முலை சுவைத்து அமுதப் பாலுண்ணாமல் இதயத்தில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சுவது போல.
இப்படி உறிஞ்சி உறிஞ்சு ஊரில் உள்ள அத்தனை ஏரி குளங்களையும் வற்ற வைத்தோம்.
இதனால் என்ன நடந்தது?
கிணறுகளில் நீர் வற்றியது. கிணற்றில் இறைக்க நீர் இல்லாததால் ஏற்றம் பயனின்றிப் போனது. இற்றுப் போனது.
இற்றுப் போனது கிணற்றில் இருந்த ஏற்றம் மட்டுமல்ல. அதைச் சார்ந்து வாழ்ந்த ஏழைகளின் வாழ்விலும்தான்.
கண்கள் ஒடுங்கின
காதுகள் அடைக்கின்றன
மூக்கு வழி சுவாசமும் குறைந்து கொண்டிருக்கிறது
தன் நிலையை சொல்லி அழக் கூடத் திராணியின்றி வாயும் அடங்கி விட்டது
உடலும் வலுவிழந்து ஒடுங்குகிறது.
இப்பை வற்றிப் போன தேகத்தில் ஓடிவிடாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் தவம் செய்கிறது
ஔருவம் - நீர் - அதாவது மழைக்கான தவம்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அந்த ஒரிஜினல் படத்திற்கான எனது கவிதை....
வான் வருவான்!
==========
எல்லாமே என்னை மறந்து விட்டன!
ஆட்டிப் படைத்த அவள்!
தீட்டி வளர்த்த மகன்!
ஊட்டி வளர்த்த மகள்!
என் முதுமையும், வறுமையும்
என்னை மறக்கவே இல்லையே?
எவனாவது ஒரு வரம் தருவானா?
அவனாவது ஒரு தரம் வருவானா?
வறுமை ஒழிக்கும் அருமைத் தலைவன்
எருமை மேலே இப்போதே வருவானா?
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks