Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 39

Thread: கவிதை எழுதுங்களேன்...!!!!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கவிதை எழுதுங்களேன்...!!!!



    இந்தப் படத்துக்கு கவிதை எழுதுங்கள். நம் மண்ணின் மைந்தனுக்காய் சில வரிகள்....மாயும் ஆதி தொழிலுக்கு நம் ஆத்ம சம்ர்ப்பணமாய் சில வரிகள்...உழவுக்கு வந்தனம் செய்ய சில வரிகள்.......!!!
    Last edited by சிவா.ஜி; 10-04-2012 at 08:04 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மானம் பாத்தப் பொழப்பும்
    மலையேறிப் போச்சி.
    என் மானம் காத்த ஒழவும்
    மண்ணாப்போச்சி.
    தானமா வந்த தண்ணியும்
    திடுக்குனு நின்னுபோச்சி.

    வறண்ட பூமி பாத்து
    திரண்ட கண்ணீரப் பாத்தும்
    இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
    இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

    வக்கத்த போக்கு பாத்து
    நான்பெத்த மக்களெல்லாம்
    வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
    கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

    கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
    எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
    துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

    சொல்லி அழவும் நாதியத்தவனா
    ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
    இத்துப்போன ஏத்தக்காலோரம்
    இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

    மாடா உழைச்ச கழனியெல்லாம்
    காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
    என்னயக் காடுகொண்டுபோவ
    வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.


    *******

    படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கீதம் View Post
    மானம் பாத்தப் பொழப்பும்
    மலையேறிப் போச்சி.
    என் மானம் காத்த ஒழவும்
    மண்ணாப்போச்சி.
    தானமா வந்த தண்ணியும்
    திடுக்குனு நின்னுபோச்சி.

    வறண்ட பூமி பாத்து
    திரண்ட கண்ணீரப் பாத்தும்
    இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
    இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

    வக்கத்த போக்கு பாத்து
    நான்பெத்த மக்களெல்லாம்
    வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
    கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

    கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
    எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
    துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

    சொல்லி அழவும் நாதியத்தவனா
    ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
    இத்துப்போன ஏத்தக்காலோரம்
    இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

    மாடா உழைச்ச கழனியெல்லாம்
    காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
    என்னயக் காடுகொண்டுபோவ
    வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.

    *******

    படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.
    முதுமை..

    மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.

    அதையே செய்கிறது உங்கள் கவிதை..

    ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.

    பாராட்டுகள்.

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    முதுமை..

    மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.

    அதையே செய்கிறது உங்கள் கவிதை..

    ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.

    பாராட்டுகள்.
    விமர்சனத்துக்கும் பாராட்டுடனான ஊக்கத்துக்கும் நன்றி அமரன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தலையிலே முண்டாசு ; கையிலே இல்லை காசு
    முகத்திலே வெள்ளைமீசை ; வாழ்வதற்கு இல்லை ஆசை
    நெஞ்சிலே இருக்கு உரம்; வயலுக்கு இல்லை உரம்
    இடையிலே கோமணம்; அடகுக்கடையில் ஆவணம்
    சேற்றிலே உழைக்கும் கால்கள்;செருப்பையே அணிந்ததில்லை.
    ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
    காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
    கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தலையிலே முண்டாசு ; கையிலே இல்லை காசு
    முகத்திலே வெள்ளைமீசை ; வாழ்வதற்கு இல்லை ஆசை
    நெஞ்சிலே இருக்கு உரம்; வயலுக்கு இல்லை உரம்
    இடையிலே கோமணம்; அடகுக்கடையில் ஆவணம்
    சேற்றிலே உழைக்கும் கால்கள்;செருப்பையே அணிந்ததில்லை.
    ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
    காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
    கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!
    சங்கத் தமிழில் பொங்கும் கோபம்..
    விரக்தியுடன் தொடங்கும் கவிதை ஆத்திரம்மிகுந்து முடிகிறது.. இடைப்பட்டு நிற்கும் ’கோ’மணம்.... மனம் வலிக்கிறது
    அணையை கவிதையில் இணைத்ததமை சமகாலத் தெறிப்பு.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    கவிதை எனக்கு புரியாத ஒன்று.

    காலையில் படத்தை பார்த்ததும் எப்படிப்பட்ட கவிதைகள் வரும் என்று மனதில் ஒரு ஆர்வம்.

    சகோதரி கீதம் அவர்களின் கவிதை அற்புதம். அதிலும்

    மாடா உழைச்ச கழனியெல்லாம்
    காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
    என்னயக் காடுகொண்டுபோவ
    வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.
    இந்த வரிகள் மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்தின.

    பாராட்டுக்கள் சகோதரி.

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
    காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
    நண்பர் M.Jagadeesan அவர்களின் கவிதையும் நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    கீதம் அக்கா, நீங்க சொன்ன மாதிரி இந்த புகைப்படமே ஆயிரம் கவிதைக்கு சமம். உங்களின் ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது. நெஞ்சை அழுத்தும் வரிகள் அக்கா.

    ஐயா அவர்களின் வரிகள் சுருக்கமாய் சுருக்கென தைக்கிறது.


    சிவா அண்ணா, நெஞ்சில் வார்த்தைகளுக்கு பதில் வலி தான் வருகிறது.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
    கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!
    மனம் நெகிழ்த்திய வரிகள். ஒரு ஓவிய வர்ணனை போலே உயிர்ப்பான வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.

    Quote Originally Posted by இராஜேஸ்வரன் View Post
    கவிதை எனக்கு புரியாத ஒன்று.

    காலையில் படத்தை பார்த்ததும் எப்படிப்பட்ட கவிதைகள் வரும் என்று மனதில் ஒரு ஆர்வம்.

    சகோதரி கீதம் அவர்களின் கவிதை அற்புதம். அதிலும்



    இந்த வரிகள் மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்தின.

    பாராட்டுக்கள் சகோதரி.
    தங்களுடைய ஊக்கமிகுப் பாராட்டுக்கு மிகவும் நன்றி இராஜேஸ்வரன்.

    Quote Originally Posted by meera View Post
    கீதம் அக்கா, நீங்க சொன்ன மாதிரி இந்த புகைப்படமே ஆயிரம் கவிதைக்கு சமம். உங்களின் ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது. நெஞ்சை அழுத்தும் வரிகள் அக்கா.
    உண்மைதான் மீரா. இன்று உழவையே நம்பியிருப்பவர்களின் நிலை இதுதான். ஊக்கமிகுப் பாராட்டுக்கு நன்றி மீரா.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அன்னையின் நெஞ்சில்
    ஆழத் துளையிட்டு
    இதயத்திலிருந்து
    ஈரத்தையெல்லாம்
    உறிஞ்சி எடுத்து
    ஊருணி வறண்டது.

    எளியவர் வாழ்விலும் கிணற்றிலும்
    ஏற்றமும் இற்றது..

    ஐந்தும் ஒடுங்கி
    ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி
    ஓடாமல் இருக்கிறது
    ஒளருவதவம்
    Last edited by தாமரை; 10-04-2012 at 10:52 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    அன்னையின் நெஞ்சில்
    ஆழத் துளையிட்டு
    இதயத்திலிருந்து
    ஈரத்தையெல்லாம்
    உறிஞ்சி எடுத்து
    ஊருணி வறண்டது.

    எளியவர் வாழ்விலும் கிணற்றிலும்
    ஏற்றமும் இற்றது..

    ஐந்தும் ஒடுங்கி
    ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி
    ஓடாமல் இருக்கிறது
    ஒளருவதவம்
    பொழிப்புரை கொடுக்காமல் இருந்தால் எப்படி?

    ஐந்தில் நான்கு ஆவியைக் கொண்டது.

    ஐந்தாவதில் இவனின் ஆவி... (உடம்பு இருப்பதே தெரியலையே)

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    பொழிப்புரை கொடுக்காமல் இருந்தால் எப்படி?

    ஐந்தில் நான்கு ஆவியைக் கொண்டது.

    ஐந்தாவதில் இவனின் ஆவி... (உடம்பு இருப்பதே தெரியலையே)

    பூமி நமது அன்னை. நீர் வேண்டின் இயற்கையாய் அமைந்த ஆறுகள் குளங்கள் எத்தனையோ இருந்தும் இன்று நாம் செய்வது ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தலே.

    ஆழ்துளைக் கிணறுகளை எங்கெங்கும் அமைத்து நீரை உறிஞ்சுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் அன்னை முலை சுவைத்து அமுதப் பாலுண்ணாமல் இதயத்தில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சுவது போல.

    இப்படி உறிஞ்சி உறிஞ்சு ஊரில் உள்ள அத்தனை ஏரி குளங்களையும் வற்ற வைத்தோம்.

    இதனால் என்ன நடந்தது?

    கிணறுகளில் நீர் வற்றியது. கிணற்றில் இறைக்க நீர் இல்லாததால் ஏற்றம் பயனின்றிப் போனது. இற்றுப் போனது.

    இற்றுப் போனது கிணற்றில் இருந்த ஏற்றம் மட்டுமல்ல. அதைச் சார்ந்து வாழ்ந்த ஏழைகளின் வாழ்விலும்தான்.

    கண்கள் ஒடுங்கின
    காதுகள் அடைக்கின்றன
    மூக்கு வழி சுவாசமும் குறைந்து கொண்டிருக்கிறது
    தன் நிலையை சொல்லி அழக் கூடத் திராணியின்றி வாயும் அடங்கி விட்டது
    உடலும் வலுவிழந்து ஒடுங்குகிறது.

    இப்பை வற்றிப் போன தேகத்தில் ஓடிவிடாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் தவம் செய்கிறது

    ஔருவம் - நீர் - அதாவது மழைக்கான தவம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •