அவல நிலை....உழவன் அழும் நிலை
உணவின்றி தவிக்கையில்
உணருவான் அவன்
உழவனுக்களித்த நிலை....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உழவன் இறவாதவன்....அப்படியே இருக்க வேண்டியவன்....அவன் இறப்பின்.....மற்றுமுளரோரின் இருப்பு கேள்விக்குறி. தொடரவேண்டும் உங்களின் வரிகளை. திரி தொடங்கியவன் என்ற உரிமையில் அல்ல இந்த வேண்டுதல்.....திரிலோகம் காப்பதும் உணவிடுபவனின் கருணையென்பதாலேயே இந்த தூண்டுதல். வாருங்கள் நண்பர்களே....உழவுக்கு வந்தனை செய்வோம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பாஸ்..
இந்தப் படம் தினமும் என் மனதில் கனன்று கொண்டே உள்ளது. ஆனால், இன்னொரு நெருப்பின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருப்பதனால் உழவனைப் பாட காலம் கனியுதில்லை.. கனிந்தவையை ருசிக்கவும் இயலவில்லை.
காலம் கனியும்போது கவிதை வரட்டும் பாஸ். காத்திருக்கிறோம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
முதற் பதிவின் படம் (#1) வார்த்தைகளை எங்கெங்கோ சுழற்றி எறிந்துவிடுகின்றது...
இப்படம் சொல்வதை, எல்லோருமே பதிவிட்டாலும்கூட முழுமையாகச் சொல்ல முடியாது...
*****
தலைக்கும் அரைக்கும்
இத்துண்டும்
இல்லையென்றால்தான்
மானியமாம்...
தந்தவர்களுக்கே தெரியவில்லை,
ஓட்டுக்குத் தந்த
வேட்டியும் சால்வையும்...
(மானியம் என்ற சொல்லை இப்படிப் பயன்படுத்தலாமா...)
*****
விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...
விளைநிலத்தை ஒழித்து
விவசாயத்தை ஒழித்து
விவசாயியை ஒழித்து
விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...
*****
அரை நிர்வாணமில்லா
அரைநிர்வாணம்...
*****
என்ன அப்பூ
சோர்ந்துபோயிட்டியள்...
நான் எண்ட தோட்டத்தை
எப்பிடி வச்சிருக்கேன் தெரியுமா...
உங்களுக்கு உதவட்டுமா...
உங்க facebook ID சொல்லுங்க...
இது நகைச்சுவைக்காக இல்லை... farmvilleவில் பயிர் வாடிப்போகுமே என்று நேரம் கணித்து விதைத்து விளையாடும் பலரில் நானும் ஒருவன். அந்த விளையாட்டிலேயே நேரத்திற்கு அறுவடை செய்ய முடியாதபோது, பயிர்வாடிப்போயிருக்குமா என்று பதைபதைப்பதுண்டு என்றால், உயிர் வாடிவதங்கிப் போன இத்தேகத்தின் பதைபதைப்பும் பரிதவிப்பும் அளவிடத்தான் இயலுமோ...
*****
சிவா.ஜி... அன்பு வேண்டுகோள்...
இப்போதைக்கு வேறு படங்களை இங்கே இணைக்காதீர்கள்.
இந்த ஒரு படத்திற்கே உணர்வுகள் வரிகளாகட்டும்...
*****
ஒவ்வொரு கவிதைகளும் படத்தின் வலியைப் பறைசாற்றுகின்றன.
இப்படம் சார்ந்து இன்னும் உணர்வலைகள் எழுந்து வரட்டும்.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அற்புதமான வரிகள் அக்னி. விவசாயத்தை அழித்து...மாணியமாம்....எதற்கு...விவசாயியின் குழிமேட்டுக்கா.....அரசாங்கமும், அரசும் கைவிட்ட உழவனின் நிலை....உணவில்லாமல் தவிக்கும்போது உணர்வார்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கோவணம
மாறினாலும்
அறுந் தோடினாலும்
கொள்கையில்
மாறாத
குணம் ,
மண்மணம் ,
அதைவிட்டு
மாறாத
மனம் ,
இறந்தாலும்
வாழ்ந்தாலும்
எங்கும்
போக
ஒவ்வாத
மனம் ,
மண்ணில்
வளம்
இருந்தும்
கண்ணில்
நிரந்தர
குளம் ,
கையில்
வறுமையின்
நிறம் ,
இருந்தும்
சொல்லில்
இன்னும்
உண்மையின்
நிறம் !
வேறென்ன சொல்ல ..
வசிகரன்
மிக அருமை வசீகரன். மண்ணில் வளம் இருந்தும் கண்ணில் குளம்...இருந்தும் உழவை விடாத உழவன் உறுதி. அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் இங்கே உணவிடுபவனை உணவுக்கு கையேந்தும் நிலைமைக்கு மாற்றியிருக்கிறது. காலம் மாறுமென நம்புவோம்.
வாழ்த்துக்கள் வசீகரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
விரக்தி மேலிட்டால் ஒரு சிரிப்பு வரும். சிரிப்பைக் கண்டு மட்டும் அவர் மகிழ்வுடனிருக்கிறார் என்று தப்புக்கணக்கு போட்டுவிட முடியாது. அப்படித்தான். உங்கள் கவிதையூடே காணப்படும் நையாண்டியும். உழவனின் வேதனையின் வெளிப்பாடாய் அமைந்த வரிகளின் கூர்மை மனவாழம் தோண்டும் யதார்த்தம். பாராட்டுகள் அக்னி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks