Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 39

Thread: கவிதை எழுதுங்களேன்...!!!!

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    உலகத்தின் முதுகெலும்பை
    எங்கள் முதுகெலும்பை முறித்து..

    உணவுக்கூடமாய் திகழ்ந்தது தமிழகம்
    இன்று
    உலாக்கூடமாய் திரிந்திட்ட நிலை..

    அவர் நிலத்தை அவரவர் உழுத காலம் போய்
    உவர் நிலமே மிஞ்சியது இன்று..!

    அரிசி முதல் பிண்ணாக்கு வரை
    அரசின் இலவசம்..
    உழவனின் மனம் புண்ணாக்கி
    உழுதுபெற்ற வாக்குகள்
    அழுதுநிற்கும் நாங்கள்
    ஆதரிப்பார் யாரோ..?

    காவிரிக்காய் பாலாறுக்காய் வைகைக்காய்
    காய்ந்திருந்து காத்திருந்து
    மழைத்தாயும் கொஞ்சம் மனம் முறுக்கிப்போனதனால்
    உழைத்தாலும் வீணாச்சு எம் வாழ்க்கை பாழாச்சு..

    இந்த நிலைக்கொரு இறுதிவரும்
    எல்லார் மனதிலும் உறுதிவரும்..
    வறண்டு போன நிலையில் உங்கள்
    கரன்சியா கூட வரும்..?
    புண்ணாகிப் போன மனதிலிருந்து உதிர்ந்த கவிதை..
    ஆங்காங்கே திட்டுத் திட்டாய் உதிரம்..

  2. #26
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அவல நிலை....உழவன் அழும் நிலை
    உணவின்றி தவிக்கையில்
    உணருவான் அவன்
    உழவனுக்களித்த நிலை....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உழவன் இறவாதவன்....அப்படியே இருக்க வேண்டியவன்....அவன் இறப்பின்.....மற்றுமுளரோரின் இருப்பு கேள்விக்குறி. தொடரவேண்டும் உங்களின் வரிகளை. திரி தொடங்கியவன் என்ற உரிமையில் அல்ல இந்த வேண்டுதல்.....திரிலோகம் காப்பதும் உணவிடுபவனின் கருணையென்பதாலேயே இந்த தூண்டுதல். வாருங்கள் நண்பர்களே....உழவுக்கு வந்தனை செய்வோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாஸ்..

    இந்தப் படம் தினமும் என் மனதில் கனன்று கொண்டே உள்ளது. ஆனால், இன்னொரு நெருப்பின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருப்பதனால் உழவனைப் பாட காலம் கனியுதில்லை.. கனிந்தவையை ருசிக்கவும் இயலவில்லை.

  5. #29
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காலம் கனியும்போது கவிதை வரட்டும் பாஸ். காத்திருக்கிறோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முதற் பதிவின் படம் (#1) வார்த்தைகளை எங்கெங்கோ சுழற்றி எறிந்துவிடுகின்றது...
    இப்படம் சொல்வதை, எல்லோருமே பதிவிட்டாலும்கூட முழுமையாகச் சொல்ல முடியாது...

    *****

    தலைக்கும் அரைக்கும்
    இத்துண்டும்
    இல்லையென்றால்தான்
    மானியமாம்...

    தந்தவர்களுக்கே தெரியவில்லை,
    ஓட்டுக்குத் தந்த
    வேட்டியும் சால்வையும்...

    (மானியம் என்ற சொல்லை இப்படிப் பயன்படுத்தலாமா...)

    *****

    விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...
    விளைநிலத்தை ஒழித்து
    விவசாயத்தை ஒழித்து
    விவசாயியை ஒழித்து
    விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...

    *****

    அரை நிர்வாணமில்லா
    அரைநிர்வாணம்...

    *****

    என்ன அப்பூ
    சோர்ந்துபோயிட்டியள்...
    நான் எண்ட தோட்டத்தை
    எப்பிடி வச்சிருக்கேன் தெரியுமா...
    உங்களுக்கு உதவட்டுமா...
    உங்க facebook ID சொல்லுங்க...

    இது நகைச்சுவைக்காக இல்லை... farmvilleவில் பயிர் வாடிப்போகுமே என்று நேரம் கணித்து விதைத்து விளையாடும் பலரில் நானும் ஒருவன். அந்த விளையாட்டிலேயே நேரத்திற்கு அறுவடை செய்ய முடியாதபோது, பயிர்வாடிப்போயிருக்குமா என்று பதைபதைப்பதுண்டு என்றால், உயிர் வாடிவதங்கிப் போன இத்தேகத்தின் பதைபதைப்பும் பரிதவிப்பும் அளவிடத்தான் இயலுமோ...

    *****

    சிவா.ஜி... அன்பு வேண்டுகோள்...
    இப்போதைக்கு வேறு படங்களை இங்கே இணைக்காதீர்கள்.
    இந்த ஒரு படத்திற்கே உணர்வுகள் வரிகளாகட்டும்...

    *****

    ஒவ்வொரு கவிதைகளும் படத்தின் வலியைப் பறைசாற்றுகின்றன.
    இப்படம் சார்ந்து இன்னும் உணர்வலைகள் எழுந்து வரட்டும்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #31
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அற்புதமான வரிகள் அக்னி. விவசாயத்தை அழித்து...மாணியமாம்....எதற்கு...விவசாயியின் குழிமேட்டுக்கா.....அரசாங்கமும், அரசும் கைவிட்ட உழவனின் நிலை....உணவில்லாமல் தவிக்கும்போது உணர்வார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #32
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    கோவணம
    மாறினாலும்
    அறுந் தோடினாலும்
    கொள்கையில்
    மாறாத
    குணம் ,
    மண்மணம் ,
    அதைவிட்டு
    மாறாத
    மனம் ,
    இறந்தாலும்
    வாழ்ந்தாலும்
    எங்கும்
    போக
    ஒவ்வாத
    மனம் ,
    மண்ணில்
    வளம்
    இருந்தும்
    கண்ணில்
    நிரந்தர
    குளம் ,
    கையில்
    வறுமையின்
    நிறம் ,
    இருந்தும்
    சொல்லில்
    இன்னும்
    உண்மையின்
    நிறம் !

    வேறென்ன சொல்ல ..
    வசிகரன்

  9. #33
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக அருமை வசீகரன். மண்ணில் வளம் இருந்தும் கண்ணில் குளம்...இருந்தும் உழவை விடாத உழவன் உறுதி. அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் இங்கே உணவிடுபவனை உணவுக்கு கையேந்தும் நிலைமைக்கு மாற்றியிருக்கிறது. காலம் மாறுமென நம்புவோம்.

    வாழ்த்துக்கள் வசீகரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #34
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by vasikaran.g View Post
    கோவணம மாறினாலும்
    அறுந் தோடினாலும்
    கொள்கையில் மாறாத குணம் ,
    மண்மணம் ,
    அதைவிட்டு மாறாத மனம் ,
    இறந்தாலும் வாழ்ந்தாலும்
    எங்கும் போக ஒவ்வாத மனம் ,
    மண்ணில் வளம் இருந்தும்
    கண்ணில் நிரந்தர குளம் ,
    கையில் வறுமையின் நிறம் ,
    இருந்தும்
    சொல்லில் இன்னும் உண்மையின் நிறம் !

    வேறென்ன சொல்ல ..
    கவிதையின் உயிர்ப்பை மறைத்து மடங்கியிருந்த ஒற்றை வரிகளை, விரித்ததும் அழகாய் மனம் விரியவைக்கும் விந்தை.

    உழவனின் உளைச்சலைவிடவும் அவன் உறுதியை அழகாய்ச் சொல்லும் கவிதை. பாராட்டுகள் வசீகரன்.

  11. #35
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    முதுமை..

    மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.

    அதையே செய்கிறது உங்கள் கவிதை..

    ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.

    பாராட்டுகள்.
    விமர்சனத்துக்கும் பாராட்டுடனான ஊக்கத்துக்கும் நன்றி அமரன்.

  12. #36
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    *****

    தலைக்கும் அரைக்கும்
    இத்துண்டும்
    இல்லையென்றால்தான்
    மானியமாம்...

    தந்தவர்களுக்கே தெரியவில்லை,
    ஓட்டுக்குத் தந்த
    வேட்டியும் சால்வையும்...

    (மானியம் என்ற சொல்லை இப்படிப் பயன்படுத்தலாமா...)

    *****

    விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...
    விளைநிலத்தை ஒழித்து
    விவசாயத்தை ஒழித்து
    விவசாயியை ஒழித்து
    விவசாயிகளின் வறுமையை ஒழிப்போம்...

    *****

    அரை நிர்வாணமில்லா
    அரைநிர்வாணம்...

    *****

    என்ன அப்பூ
    சோர்ந்துபோயிட்டியள்...
    நான் எண்ட தோட்டத்தை
    எப்பிடி வச்சிருக்கேன் தெரியுமா...
    உங்களுக்கு உதவட்டுமா...
    உங்க facebook ID சொல்லுங்க...

    இது நகைச்சுவைக்காக இல்லை... farmvilleவில் பயிர் வாடிப்போகுமே என்று நேரம் கணித்து விதைத்து விளையாடும் பலரில் நானும் ஒருவன். அந்த விளையாட்டிலேயே நேரத்திற்கு அறுவடை செய்ய முடியாதபோது, பயிர்வாடிப்போயிருக்குமா என்று பதைபதைப்பதுண்டு என்றால், உயிர் வாடிவதங்கிப் போன இத்தேகத்தின் பதைபதைப்பும் பரிதவிப்பும் அளவிடத்தான் இயலுமோ...

    விரக்தி மேலிட்டால் ஒரு சிரிப்பு வரும். சிரிப்பைக் கண்டு மட்டும் அவர் மகிழ்வுடனிருக்கிறார் என்று தப்புக்கணக்கு போட்டுவிட முடியாது. அப்படித்தான். உங்கள் கவிதையூடே காணப்படும் நையாண்டியும். உழவனின் வேதனையின் வெளிப்பாடாய் அமைந்த வரிகளின் கூர்மை மனவாழம் தோண்டும் யதார்த்தம். பாராட்டுகள் அக்னி.

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •