ஒவ்வொரு உழவன் மரணத்திலும்
ஆயிரம் ஏழைகள் பட்டினியில் சாகின்றனர்!
ஆயிரம் பேர் புதிதாய் ஏழைகளாகின்றனர்!!
உன்முறையும் அவன்முறையும்
வெகுதூரத்தில் இல்லை!!!
காலம் பதில் சொல்வதாக இருந்தால்.. இப்படித்தான் சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு உழவன் மரணத்திலும்
ஆயிரம் ஏழைகள் பட்டினியில் சாகின்றனர்!
ஆயிரம் பேர் புதிதாய் ஏழைகளாகின்றனர்!!
உன்முறையும் அவன்முறையும்
வெகுதூரத்தில் இல்லை!!!
காலம் பதில் சொல்வதாக இருந்தால்.. இப்படித்தான் சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உலகத்தின் முதுகெலும்பை
எங்கள் முதுகெலும்பை முறித்து..
உணவுக்கூடமாய் திகழ்ந்தது தமிழகம்
இன்று
உலாக்கூடமாய் திரிந்திட்ட நிலை..
அவர் நிலத்தை அவரவர் உழுத காலம் போய்
உவர் நிலமே மிஞ்சியது இன்று..!
அரிசி முதல் பிண்ணாக்கு வரை
அரசின் இலவசம்..
உழவனின் மனம் புண்ணாக்கி
உழுதுபெற்ற வாக்குகள்
அழுதுநிற்கும் நாங்கள்
ஆதரிப்பார் யாரோ..?
காவிரிக்காய் பாலாறுக்காய் வைகைக்காய்
காய்ந்திருந்து காத்திருந்து
மழைத்தாயும் கொஞ்சம் மனம் முறுக்கிப்போனதனால்
உழைத்தாலும் வீணாச்சு எம் வாழ்க்கை பாழாச்சு..
இந்த நிலைக்கொரு இறுதிவரும்
எல்லார் மனதிலும் உறுதிவரும்..
வறண்டு போன நிலையில் உங்கள்
கரன்சியா கூட வரும்..?
காலத்தின் பதிலில் காரத்தைக் கண்டேன் தாமரை.... என்ன செய்வான் உழவன்.....பாவமென்ற பரிதாபச் சொல்லுக்குள் அடங்கிவிட்டானே....
கரன்சியையா உண்ண முடியும் என்ற கலையின் வார்த்தை உண்மையை அறைந்து சொல்கிறதே.....
எல்லோரும் எழுவோம்.....உழவனை உயர்த்துவோம்....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உங்கள் ஒவ்வொரு வரியும் சிலாகிக்க வைக்கும் சிறப்பு.......அதற்குத்தானம்மா......இந்த அண்ணனின் உரைப்பு......
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அனைவரது கவிதைகளுமே இதயத்தை நனைத்தது. அனைவருக்கும் பாராட்டுகள்.
எனக்கு பொற்காசு கிற்காசு எதுவும் இல்லீங்களா..?
ஆஹா....அதுக்கென்ன...கொடுத்துட்டாப் போச்சு....நெஞ்சை அசைக்கும் கவியெழுதிய நண்பருக்கு ஆயிரம் பொற்காசுகள்...அன்புப் பரிசு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி சிவா.. பொற்காசுகள் கிடைத்தன.. மகிழ்ந்தேன்..!!
முதுமை..
மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.
அதையே செய்கிறது உங்கள் கவிதை..
ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.
பாராட்டுகள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks