Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 39

Thread: கவிதை எழுதுங்களேன்...!!!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஒவ்வொரு உழவன் மரணத்திலும்
    ஆயிரம் ஏழைகள் பட்டினியில் சாகின்றனர்!
    ஆயிரம் பேர் புதிதாய் ஏழைகளாகின்றனர்!!

    உன்முறையும் அவன்முறையும்
    வெகுதூரத்தில் இல்லை!!!

    காலம் பதில் சொல்வதாக இருந்தால்.. இப்படித்தான் சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    உலகத்தின் முதுகெலும்பை
    எங்கள் முதுகெலும்பை முறித்து..

    உணவுக்கூடமாய் திகழ்ந்தது தமிழகம்
    இன்று
    உலாக்கூடமாய் திரிந்திட்ட நிலை..

    அவர் நிலத்தை அவரவர் உழுத காலம் போய்
    உவர் நிலமே மிஞ்சியது இன்று..!

    அரிசி முதல் பிண்ணாக்கு வரை
    அரசின் இலவசம்..
    உழவனின் மனம் புண்ணாக்கி
    உழுதுபெற்ற வாக்குகள்
    அழுதுநிற்கும் நாங்கள்
    ஆதரிப்பார் யாரோ..?

    காவிரிக்காய் பாலாறுக்காய் வைகைக்காய்
    காய்ந்திருந்து காத்திருந்து
    மழைத்தாயும் கொஞ்சம் மனம் முறுக்கிப்போனதனால்
    உழைத்தாலும் வீணாச்சு எம் வாழ்க்கை பாழாச்சு..

    இந்த நிலைக்கொரு இறுதிவரும்
    எல்லார் மனதிலும் உறுதிவரும்..
    வறண்டு போன நிலையில் உங்கள்
    கரன்சியா கூட வரும்..?

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காலத்தின் பதிலில் காரத்தைக் கண்டேன் தாமரை.... என்ன செய்வான் உழவன்.....பாவமென்ற பரிதாபச் சொல்லுக்குள் அடங்கிவிட்டானே....

    கரன்சியையா உண்ண முடியும் என்ற கலையின் வார்த்தை உண்மையை அறைந்து சொல்கிறதே.....


    எல்லோரும் எழுவோம்.....உழவனை உயர்த்துவோம்....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தங்கை கீதத்தின் கவிதை...ஏற்கனவே படம் பார்த்ததால் கனமான மனதை இன்னும் பாரமாக்கியது. அற்புதமான கவிதைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

    மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.
    தங்கள் அன்புக்கும் ஊக்கமளிக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அண்ணா.

  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கள் ஒவ்வொரு வரியும் சிலாகிக்க வைக்கும் சிறப்பு.......அதற்குத்தானம்மா......இந்த அண்ணனின் உரைப்பு......

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அனைவரது கவிதைகளுமே இதயத்தை நனைத்தது. அனைவருக்கும் பாராட்டுகள்.

    எனக்கு பொற்காசு கிற்காசு எதுவும் இல்லீங்களா..?

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....அதுக்கென்ன...கொடுத்துட்டாப் போச்சு....நெஞ்சை அசைக்கும் கவியெழுதிய நண்பருக்கு ஆயிரம் பொற்காசுகள்...அன்புப் பரிசு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி சிவா.. பொற்காசுகள் கிடைத்தன.. மகிழ்ந்தேன்..!!

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கீதம் View Post
    மானம் பாத்தப் பொழப்பும்
    மலையேறிப் போச்சி.
    என் மானம் காத்த ஒழவும்
    மண்ணாப்போச்சி.
    தானமா வந்த தண்ணியும்
    திடுக்குனு நின்னுபோச்சி.

    வறண்ட பூமி பாத்து
    திரண்ட கண்ணீரப் பாத்தும்
    இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
    இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

    வக்கத்த போக்கு பாத்து
    நான்பெத்த மக்களெல்லாம்
    வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
    கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

    கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
    எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
    துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

    சொல்லி அழவும் நாதியத்தவனா
    ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
    இத்துப்போன ஏத்தக்காலோரம்
    இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

    மாடா உழைச்ச கழனியெல்லாம்
    காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
    என்னயக் காடுகொண்டுபோவ
    வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.

    *******

    படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.
    முதுமை..

    மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.

    அதையே செய்கிறது உங்கள் கவிதை..

    ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.

    பாராட்டுகள்.

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தலையிலே முண்டாசு ; கையிலே இல்லை காசு
    முகத்திலே வெள்ளைமீசை ; வாழ்வதற்கு இல்லை ஆசை
    நெஞ்சிலே இருக்கு உரம்; வயலுக்கு இல்லை உரம்
    இடையிலே கோமணம்; அடகுக்கடையில் ஆவணம்
    சேற்றிலே உழைக்கும் கால்கள்;செருப்பையே அணிந்ததில்லை.
    ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
    காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
    கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!
    சங்கத் தமிழில் பொங்கும் கோபம்..
    விரக்தியுடன் தொடங்கும் கவிதை ஆத்திரம்மிகுந்து முடிகிறது.. இடைப்பட்டு நிற்கும் ’கோ’மணம்.... மனம் வலிக்கிறது
    அணையை கவிதையில் இணைத்ததமை சமகாலத் தெறிப்பு.

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    அன்னையின் நெஞ்சில்
    ஆழத் துளையிட்டு
    இதயத்திலிருந்து
    ஈரத்தையெல்லாம்
    உறிஞ்சி எடுத்து
    ஊருணி வறண்டது.

    எளியவர் வாழ்விலும் கிணற்றிலும்
    ஏற்றமும் இற்றது..

    ஐந்தும் ஒடுங்கி
    ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி
    ஓடாமல் இருக்கிறது
    ஒளருவதவம்
    பொழிப்புரை கொடுக்காமல் இருந்தால் எப்படி?

    ஐந்தில் நான்கு ஆவியைக் கொண்டது.

    ஐந்தாவதில் இவனின் ஆவி... (உடம்பு இருப்பதே தெரியலையே)

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எரி எண்ணெய்யைக் கொடுத்ததும் இந்த மண்தான்
    என் உணவைக் கொடுத்ததும் இந்த மண்தான்
    எரி எண்ணையை எடுத்தவனுக்கு கொடுக்கும் மதிப்பை
    ஏன் என் எரிவயிறுக்கு உணவு கொடுத்தவனுக்கு இங்கில்லை....

    உலகை உய்விப்பது உணவுதான்
    உலகுக்கு உணவுழழ்பவன் நல்வாழ்வு கனவுதான்
    ஏனிந்த இழிநிலை....
    என்னவாகும் இந்த உழவன் நிலை...???

    இந்தக் கிழ உழவனின் ஏக்கம்
    எந்த நிலவுலகம் போக்கும் ...??
    ஏர் பிடித்து வாழ்ந்தவனின் ஏற்றம்
    சீரழிந்து போனதேன்?
    வேர் பிடிக்குமா உழவன் வாழ்வு
    நேர் செய்யுமா இப் பாழும் உலகு...!!

    எந்நாளும் எல்லோருக்கும் உணவளித்த உழவன்
    வரும் நாளில் நல் உணவு உண்பானா.....
    வெறும் வாழ்வைத் தொடர்ந்தே வாழ்வானா
    வரும் காலம் சொல்லட்டும்....விருப்பான செய்தியை...!!!
    உழுதுண்டு வாழ்வோரை தொழுதுண்டு போன காலம் போன காலம் ஆகிவிட்டது..

    உழுது உண்டு எனச் சொல்ல முடியாத அவல நிலை?

    வறண்ட நிலத்தின் வெப்பத் தகிப்பு கவிதையிலும்..

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •