Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: எனது சிலேடை வெண்பாக்கள் - சில

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    எனது சிலேடை வெண்பாக்கள் - சில

    1.நாயும் கடலும்

    ஓங்கியே ஆர்ப்பரிக்கும் வெண்ணுரை தள்ளிடும்
    தீங்கிழைக் குஞ்சில போதினில் - ஆங்கே
    இரவிலு றங்கிடும் நன்மை பயக்கும்
    அரவந்த ருங்கடல் நாய்.


    கடல்:

    ஓங்கி ஒலிஎழுப்பி ஆர்ப்பரிக்கும்; வெண்மையான நுரை தரும்; சில போழ்து தீமை பயக்கும்; இரவு நேரத்தில் அமைதியாய் இருக்கும்; நன்மை தரும்;பாம்புகளைக் கொண்டிருக்கும்.

    நாய்:

    ஓங்கி ஊளையிட்டு ஆர்ப்பரிக்கும்; வேகமாய் ஓடி வாயில் நுரைதள்ளும்; சில ச்மயம் கடித்து தீங்கு பயக்கும்; இரவில் உறங்கிடும்;ஆனாலும் அரவம் தந்து நன்மை பயக்கும்!
    Last edited by கலைவேந்தன்; 08-04-2012 at 07:19 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    2.இரயிலும் காதலும்

    கூவிய ழைத்திடும் பக்கம்வந் தாலதிரும்
    மேவிய வண்ணமாகும் மேன்மையில் - சாவுதரும்
    சத்தமே கூடும் வெளிப்படும் போதென்றும்
    அத்தகு காதல் ரயில்.


    ரயில்:

    கூவிவரும்;பக்கம் வரும்போது நம்மையே அதிரவைக்கும்; சிறந்த அழகு தரும்; சாவைத்தரும்;
    திருப்பத்திலிருந்து வெளிப்படும்போது சத்தம் அதிகமாகும்.

    காதல்:

    எதிர்ப்பால் மனிதரைக் கூவி அழைக்கும் காதல் உணர்வு; காதலர் பக்கத்தில் வரும்போது இருவருக்குமே அதிர்வு தரும்; காதல் சிறந்த அழகான ஒன்று; காதல் தோல்வியால் சாவும் உண்டு;
    காதல் வெளிப்படும்போது அங்கே பரபரப்பான சூழ்நிலை வரும்.

    அத்தகைய சிறப்பை இரண்டுமே கொண்டுள்ளது!

  3. Likes தாமரை, ஜானகி liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    3.தமிழும் ஆதவனும்


    ஆதியோ டந்தமிலா பேர்பெற் றதினானும்
    வேதமுதல் நூல்கூறி வாழ்த்திடவும் - ஓதியே
    கூற்றுவனும் சாய்த்திடாச் சீர்பெற் றதினானும்
    போற்றுந் தமிழ்க்கதிரோன் நேர்.


    தமிழும் ஆதவனும் ஆதியும் அந்தமும் அறிய இயலாத பேர்பெற்றவை. வேதம் முதலான நூல்களால் வாழ்த்தப்பட்டு வந்துள்ளவை. அனைத்தும் அழிக்கும் ஊழியான எமனாலும் அழிக்க இயலாத புகழ் பெற்றவை.இவ்வாறான ஒற்றுமைகளால் தமிழும் ஆதவனும் ஒன்றே!

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    4.காலணியும் கண்ணாடியும்.

    பாதா ரவிந்தம் சுமந்திடும் மாற்றினால்
    சேதாரம் செய்திடும் மாறியே - மாதருக்கு
    ஆர்வமாய் சேவையில் தன்னொளி மாய்த்திடும்
    சீர்பா தணியாடி நேர்!


    செருப்பு :

    பாதம் முதல் உச்சிவரை நம்மைச்சுமந்திடும்! கால் மாற்றி அனிந்தால் இழப்பு நேரவைக்கும்!இடறிவிடும்!
    அதிகமாய் பெண்களுக்கு அலங்காரப்பொருளாய் சேவைகள் செய்து தன் பளபளப்பை இழக்கும்! தேயும்!
    சிறப்பு மிக்க காலணியும் கண்ணாடியும் ஒன்றே!

    கண்ணாடி :

    பாதம் முதல் உச்சிவரை நம்மை சுமந்து நம் பிரதிபிம்பம் காட்டிடும்! கண்ணாடியை சற்றே மாற்றினால் நம் உருவம் இழக்கவைத்து விடும்! எப்போதும் பெண்களாலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டு கண்ணாடி தன் ஒளி இழக்கும்! இவ்வாறாக சிறப்பு மிக்க காலணியும் கண்ணாடியும் ஒன்றாகும்!

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சிலேடை வெண்பாக்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ்!!! அருமை!!!

    இன்னும் கொடுங்கள்.

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி நண்பர்களே... விரைவில் இதனைத் தொடர்வேன்.

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    சிறந்த முயற்சி! பாராட்டு.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    நன்றி நண்பர்களே... விரைவில் இதனைத் தொடர்வேன்.
    கலை...எப்ப தொடரப் போறீங்க...???
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சிலேடைகள் ஒவ்வொன்றும் ரசிக்கவைத்தன. காலணியும் கண்ணாடியும் அதிகமாய் ரசிக்கவைத்தது.(பெண்களுக்குப் பிடித்தவை என்பதாலோ? )

    பாராட்டுகள் கலைவேந்தன். இன்னும் நிறைய எழுதுங்கள்.

  12. #11
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    பிரமிக்க வைக்கும் சிந்தனை. மிக சிறப்பாக இருந்தது. 'தமிழும் ஆதவனும்' கவிதையில், இறைவனும் பொருந்தியது போல் தோன்றியது. எனக்கு மிக மிக பிடித்திருந்தது. அருமை கலை வேந்தன் அவர்களே!
    எனது அன்பளிப்பாக இ பணம் 200 உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
    Last edited by முரளி; 15-11-2012 at 08:50 AM.

  13. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    ...பக்கம்வந் தாலதிரும்....காதலுக்கும் தொடருந்துக்குமுள்ள ஒருமைத்தன்மை......சிறப்பு, விவேகம், சிந்தனைக்கு விருந்தாகும் சொல் விளையாட்டு......நன்றி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •