1.நாயும் கடலும்
ஓங்கியே ஆர்ப்பரிக்கும் வெண்ணுரை தள்ளிடும்
தீங்கிழைக் குஞ்சில போதினில் - ஆங்கே
இரவிலு றங்கிடும் நன்மை பயக்கும்
அரவந்த ருங்கடல் நாய்.
கடல்:
ஓங்கி ஒலிஎழுப்பி ஆர்ப்பரிக்கும்; வெண்மையான நுரை தரும்; சில போழ்து தீமை பயக்கும்; இரவு நேரத்தில் அமைதியாய் இருக்கும்; நன்மை தரும்;பாம்புகளைக் கொண்டிருக்கும்.
நாய்:
ஓங்கி ஊளையிட்டு ஆர்ப்பரிக்கும்; வேகமாய் ஓடி வாயில் நுரைதள்ளும்; சில ச்மயம் கடித்து தீங்கு பயக்கும்; இரவில் உறங்கிடும்;ஆனாலும் அரவம் தந்து நன்மை பயக்கும்!
Bookmarks