சிலேடை அருமை கவிங்கரே!!
தொடருங்க.....
சிலேடை அருமை கவிங்கரே!!
தொடருங்க.....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
5. தூக்கமும் மின்சாரமும்
வாவெனில் வாராது வாய்நொந் தரற்றிடினும்
சாவினைப் போன்றே அலைக்கழிக்கும் - ராவினில்
விட்டத்தை நோக்கியே ஏங்கினும் இட்டமாய்
எட்டிடும் மின்னித் திரை.
சிலேடை நயம்:
தூக்கம் :
வா என்று அழைத்தாலும் வாய் நோக அரற்றி அழைத்தாலும் வந்திடாமல் சாவு போலவே இப்போது அப்போது என அலைக்கழித்து அயரவைக்கும். இரவு நேரத்தில் விட்டத்தை நோக்கி ஏங்கிக் காத்திருந்தாலும் தன் விருப்பமாய் ( இட்டமாய் ) வந்து சேரக்கூடிய தன்மை மிக்கது உறக்கம்.
மின்சாரம் :
பொழுதெல்லாம் எப்போது வரும் எனக் காத்திருந்து வா என்று அழைத்தாலும் வராது போக்குக் காட்டி நிற்கும். மின் தடைகளால் வாய் வலிக்கக் கத்தி அழைத்தாலும் சாவு போல எப்போது வரும் என்று அறிவித்திடாது சட்டென வரும். இரவு நேர இருளில் நாம் விட்டத்தை நோக்கிக் காத்திருந்தாலும் மின்சாரம் தன் இட்டமாய் எப்போது வருமோ அப்போது தான் வரும். அத்தகையது மின்சாரம்.
பொருத்தம் :
உறக்கமும் மின்சாரமும் நாம் எத்தனை வருந்தி அழைத்தாலும் தன் விருப்பம் போல் வருகுதலால் இரண்டும் சிலேடைப் பொருளில் ஒன்றாகப் பொருந்தியதாம்.
தலைப்புக்கு நன்றி ஜான்..!
அருமை அண்ணா
இவ்வளவு சடுதியில் .....ஒரு மணி நேரத்தில் ஒரு வெண்பாவை படைக்க முடிவது.....என்னால் நம்பவே முடியவில்லை ..பிறவித் திறமைதான்
அருமையான சிலேடை வெண்பாக்கள். நல்ல முயற்சி ஜான் அவர்களே. மேலும் நிறையக் கொடுங்கள்.
என் முயற்சி எதுவுமில்லை
வெண்பா இயற்றியவருக்கே சிறப்பு
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அற்புதம் ஐயா.. இன்னும் சில தாருங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks