கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்...!
1.இறைப் பெருமை
வாழ்வும் வளமும் தெளிமனமும் இன்னுறவும்
தாழ்வும் தரித்திரமும் நோயதுவும் - ஏழ்மையும்
யாரார்க் கெதுவென வாய்பார்த் ததனையும்
தீரா தளிப்ப திறை!!
பொருள் : நல்லோர்க்கு நல்வாழ்வும் வளமையும் தெளிவான மனமும் தீயோர்க்கு தரித்திரமும் தாழ்மையும் பிணிகளும் அவரவர் வழிப்படி(வாய்=வழி) எவர்க்கு எது தகுமென இந்த உலகத்துக்கு (குவலயம்=பூவுலகம்)தருகிற இறைவன் பெருமை மிக்கவன்!
Bookmarks