Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 13 to 24 of 62

Thread: ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நவீன இலக்கியம்.

    இந்த வார்த்தைதான் என்ன பாடுபடுத்துகிறது மனிதனை. ஆதன் இதுவரை நவீன இலக்கியத்தில் இது புதிது என்ற வாதத்தை எடுத்து வைத்தபொழுதெல்லாம் அந்த நுட்பம் சங்க இலக்கியத்தில் எங்கு இருக்கிறது என்பதை நான் உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.

    உதாரணத்திற்கு இப்போ சொன்னீங்களே மீமொழி.. இதுன்னா அதைக் குறிக்கும் அதுன்னு இதைக் குறிக்கும்னு.. அகத்திணையை நாம் பிரிச்சு அடையாளங்கள் குறித்து எழுதி இலக்கணமாக ஆக்கி வச்சமே அதானே இது..

    நவீன இலக்கியம் என்பது பரிணாம வளர்ச்சியாய் இருந்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள் இருந்திருக்காது. ஆனால் அது புலியை பார்த்து போட்டுக் கொண்ட சூடு மாதிரி ஆகிப் போவதால்தான் அது பலரோட எதிர்ப்புக்கும் ஆளாகி விடுகிறது.

    ஒரு காலம் வரப்போகிறது. யாராவது ஒருவன் ஒரு பிறமொழிப் புத்தகத்தை அது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என அறியாமலேயே இதற்கு ஈடாய் தமிழில் ஒரு புத்தகம் இருக்கிறதா என மேடையிட்டு பாடப்போகிறான். அதற்கும் ரொம்ப காலம் இல்லை. (அது நீயாக இருக்கக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்).

    "பொருள்" மயக்கம் இந்தக்காலத்தில் ரொம்பவே அதிகம்தான். பொருள் என்பதற்கு அர்த்தம் என்பது பண்டைய காலம். செல்வம் என்பது இந்தக் காலம். திருக்குறளின் பொருட்பால் - சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் இரண்டுமே ஒரே வகையைச் சார்ந்தவை.

    தர்ம - அர்த்த - காம - மோட்சம் என்பது இந்திய மதங்களில் பொதுவானது.. திருக்குறளில்

    தர்ம - அறத்துப் பால்
    அர்த்த - பொருட்பால்
    காம - காமத்துப்பால்

    இதைக் காணும் பொழுது மோட்ச என்னும் தத்துவ (தத்துவம் என்றால் உண்மைப் பொருள் என்று அர்த்தம்) விளக்கங்கள் மறைக்கப்பட்டனவா இல்லை மறைந்து விட்டனவா என்ற கேள்வி உண்டாகும்.

    திருக்குறள்

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை

    அர்த்தமுள்ள அரட்டையில் பாகவதத்தில் வரும் ஜடபரதன் கதையைச் சொல்லி இருப்பேன்.

    மானைப்பத்தி நினைச்சுகிட்டே இருக்கிறப்ப உயிர் பிரிஞ்சதால அது மேல பற்று வைச்சு இருந்ததால அடுத்து ஜன்மமும் வாய்ச்சது; மானா பிறந்தார். போன ஜன்மத்திலே அவர் செஞ்ச தவத்தால அந்த பிறப்பு சமாசாரங்கள் நினைவு இருந்தது. இப்படி ஒரு தவவலிமை இருந்தும் மோட்சம் பெறுகிற வாய்ப்பை வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டது. இந்த ஜன்மத்திலே அதே தப்பை செய்யக்கூடாதுன்னு கவனமா இருந்து இறை நினைவோடேயே இருந்து அடுத்த ஜன்மத்திலே ஒரு அந்தணருக்கு மகனா பிறந்தது. அவரே ஜட பரதர்.

    முற்பிறவி ஞாபகங்கள் இப்பிறவியிலும் வாய்க்கப் பெற்ற பரதன், எதுக்குமே எந்த ரியாக்ஷனுமே செய்யாம வாழ்ந்தார். அதனால மக்கள் அவரை ஜடம் என அழைத்தனர்.

    அப்பா பூணூல் போட்டு வேதம் சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணி பிரயோசனமின்றி செத்தார். அண்ணன்மார்கள் கைகழுவினர். யாராவது எதாவது கொடுத்தா சாப்பிடுவார். எதாவது செய்யச் சொன்னா செய்வார். எந்த முயற்சியும் இல்லாம இப்படி அவதூதனா சுத்திகிட்டு இருக்கும் பொழுது ஒரு முறை கொள்ளையர்கள் கையில் மாட்டிக் கொண்டார். அவர்கள் செய்த எந்த துன்பத்திற்கும் இவர்கிட்ட இருந்து ரியாக்ஷனே இல்லை. அம்மனே பொறுக்காம வந்து அவர்களை அழிக்க அதுக்கும் இவர் ரியாக்ஷன் காட்டலை.

    ஒருமுறை இவர் பாதையில் போய்கிட்டு இருக்கறப்போ, சௌவிய மன்னன் ரகுகுணன் . மகாமுனிவர் கபிலரைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்க பல்லாக்கில் புறப்பட்டுகிட்டு இருந்தான் பல்லாக்கு தூக்க ஆள் பத்தலைன்னு பாதையில போய்கிட்டு இருந்த பரதனை புடிச்சி இழுத்து தூக்க வச்சாங்க. பரதனுக்கு பல்லாக்கு தூக்கி பழக்கமே இல்லை. அதுவுமில்லாம அவர் தரையில் புழு பூச்சி எதாவது இருந்தா மிதிச்சிடக் கூடாது என்ற ஜாக்கிரதையின் காரணமா குனிஞ்சு கிட்டே மெதுவா போனாரு. மன்னருக்கு இது ரொம்ப அசௌகரியமா போயிருச்சி..

    பல்லாக்கு ஏன் இப்படிப் போகுது பல்லாக்குத் தூக்கிகளைக் கேட்க, பல்லாக்குத் தூக்கிகள் இவன் தான்.. ஒழுங்கா தூங்க மாட்டேங்கறான் என ஜடபரதனைக் கைகாட்டறாங்க.

    ஏண்டா, பாக்க வாட்டசாட்டமாத்தானே இருக்க, இப்பதானே தூக்க ஆரம்பிச்ச, அதுக்குள்ள என்ன களைப்பு? குசும்பா? பொளந்துருவேன் பொளந்துன்னு ராஜா கத்துறார், பரதன் ஜடமா நிக்கிறார்..

    டேய் யார்டா நீ? அப்படின்னு ராஜா கேட்க,

    பரதன் முதன் முறையா வாயைத் திறந்து பதில் சொல்றார்..

    நான் யார்? அப்படின்னுதான் தேடிகிட்டு இருக்கேன், இதோ இருக்கே இந்த உடல் இது நானல்ல. எதிரிலே நிற்கிறதே இன்னொரு உடல் அது நீயல்ல. இவை வெறும் உடல்கள்.. மாயைகள். இதிலிருக்கும் ஆன்மாக்கள் இருக்கே அதுதான் நிஜம். அந்த ஆன்மாவுக்குன்னு எந்த உணர்வும் தனியே கிடையாது, இப்போ பார்த்தியே அதே மாதிரியான உணர்வுகள் இல்லாத ஜடங்கள் அந்த ஆன்மாக்கள். ஆன்மாக்கள், உடல்கள், மாயை, ஜீவாத்மா, பரமாத்மா அப்படின்னு பெரிய லெக்சர் அடிக்க ஆரம்பிக்கிறார். அனைத்து பற்றுகளையும் துறந்து இந்த மாய உலகில் இருந்து விடுவித்துக் கொள்வதே மோடசம் பெறும் வழி என உபதேசம் செய்கிறார்.

    இதில இன்னொரு சூட்சுமம் என்னன்னா நான் வெகுநாட்களாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு தத்துவத்தை இவர் சொல்லி இருக்கிறார். (யார் சொன்னது? படிக்காம எனக்கு எப்படித் தெரிஞ்சது என்றெல்லாம் கேட்கப்படாது. அதற்கு காரண காரியங்கள் இருக்கலாம்)

    பிரம்மம் - அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு சித்து - அசித்து.

    சித்து அறிவுள்ளது. அசித்து அறிவில்லாதது.பருமனானது. சித்து பருமனில்லாதது. நுட்பமானது.

    அசித்திலிருந்து உண்டான பஞ்ச பூதங்களினால் ஜடப்பொருள்கள் உண்டாயின. சித்திலிருந்து உண்டான நுட்பமான ஆன்மாக்கள் ஜடப் பொருளை உயிருள்ளதாக்குகின்றன.

    அதாவது உடலில் உயிராக ஆன்மா.

    இதில் பிரம்மம் இரு வகையாக விரவிக் கிடக்கிறது.

    1. உடலில் உயிர் எப்படி நுட்பமாக அமைந்ததோ அப்படி ஆன்மாவில் பிரம்மம் நுட்பமாக உள்ளது (இது உள்நோக்கிய பயணம்)

    2. உயிர் எப்படி உடலில் எப்படி பரந்து விரிந்ததோ அப்படி அனைத்தும் தன்னுள் அடங்கம் பிரம்மம் மிகப் பெரிய உயிரியாக திகழ்கிறது. நம் உடல் அவருக்குள் ஒரு அணு. எப்படி மின்னோட்டம் எலக்ட்ரான் பாய்ச்சலால் உண்டாகிறதோ அப்படி ஆன்மாக்களின் பாய்ச்சலினால் படைப்புகள் தோன்றி வாழ்ந்து மடிகின்றன. (இது வெளி நோக்கிய பயணம்).

    மனத்தை பழக்க முடியும் உடல் வேறு ஆன்மா வேறு என்பதை மனம் பழகிக் கொள்ளுமானால் உடலின் உபாதைகள் துன்புறுத்தாது. மனதை உள்நோக்கித் திருப்பி உயிரில் உயிராய் கலந்திருக்கும் பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே எளிதான முக்தி வழியாகும். அதற்கு படிகள் உண்டு

    பக்தியாளருடன் கலந்திருத்தல்
    ஆன்மாவை உணர்தல்..
    ஆன்மாவிற்குள் உயிராய் இருக்கும் பிரம்மத்தை உணர்தல்
    பிரம்மத்திடம் தன்னை ஒப்படைத்தால்.

    இப்படி எல்லாம் சொல்றார்,

    ஐயோ இவர் மிகப் பெரிய ஞானி அப்படின்னு அரசன் அவரை வணங்கி தன் குருவா ஏத்துக்கிறான்.


    பல்லாக்கு ஏறியவன் அறியாமையில் இருந்தான்.
    முதலில் அரசன் என்றான், தண்டிப்பேன் என்றான். பின்னர் பயந்தான். பின்னர் பணிந்தான்.. பின்னர் தெளிந்தான்.

    பல்லாக்கு தூக்கியவனோ எப்பொழுதும் ஒரே மாதிரியே இருந்தான் ஏனென்றால் அவன் எதையும் இலட்சியம் செய்யலை,
    ஆனால் அவரோ அதே ஜடமாக வாழ்ந்து மறைகிறார். மோட்சமடைந்தார் அப்படின்னு கதையில சொல்றாங்க.

    இப்பொழுது திருக்குறளை இதனுடன் பார்க்க,,,

    பல்லாக்கில் ஏறிய அரசன் - உயர்ந்தவனும் இல்லை
    பல்லாக்கை தூக்கிய பரதன் - தாழ்ந்தவனும் இல்லை.

    அறியாமையில் இருந்ததால் அரசன் தாழ்ந்தவனும் இல்லை
    அறிந்து கொண்டிருந்ததால் பரதன் உயர்ந்தவனும் இல்லை.

    பல்லாக்கு தூக்கியதோ அல்லது பல்லாக்கில் இருந்ததுவோ அதெல்லாம் அறத்தின்பாற்பட்டது அல்ல. அது வினைபயன் அது இது என்றாலும் அதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால்

    பல்லாக்கைத் தூக்கிய பரதனும் மோட்சமடைந்தான்
    பல்லாக்கில் வந்த அரசனும் மோட்சமடைந்தான்.


    ஆகவே தர்மத்தின் வழி இன்னதுதான் என்ற ஒரு கருத்திற்கு அவசரப்பட்டு வந்து விட வேண்டியது இல்லை. ஒருவன் துன்பப்படுகிறானோ இல்லை இன்பப்படுகிறானோ அதற்கு தர்மம் காரணம் இல்லை. பல்லாக்கில் போவதும் பல்லாக்கு தூக்குவதும் இரு நிலைகள் அவ்வளவே.

    இப்போ திருக்குறளை கவனியுங்க..

    சிவிகை பொருத்தானொடு ஊர்ந்தான் இடை..

    பல்லாக்கை தூக்குபவனோடு பல்லாக்கில் செல்லுபவனும் அவரது நிலைகள் இடையில் வந்து செல்லுபவை. இவை காலத்தால் மாறலாம். அறிவால் மாறலாம்.. ஞானத்தால் மாறலாம் இன்னும் எத்தனை வழிகளிலும் மாறலாம்.


    அறத்தா றிதுவென வேண்டா

    அவை தர்மத்தின் விளைவுகள் அல்ல. தர்மம் இப்படிப்பட்ட தற்காலிக இன்ப துன்பங்களிற்கு காரணமாக அமைவதில்லை.

    தர்மம் என்பது தினசரி இன்ப துன்பங்களுக்குக் காரணமில்லை.

    பின்னர் வேறென்ன?

    தர்மத்தின் வழி என்னவென்றால் நிலைத்த பயனைத் தருவதாகும்.

    அதையெல்லாம் அப்புறம் பார்ப்போம்..

    இப்ப முக்கியப் பகுதிக்கு வருவோம்.


    ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

    நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?

    ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.



    இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

    தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்.


    இன்னொரு வேடிக்கை.. இதை விட வேடிக்கையான ஒன்று இல்லை.

    நம்முடைய கற்பனையை தூண்டி விடக்கூடிய இயல்பே இலக்கிய படைப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. இதையும் நாம் நம் அனுபவத்தில் இருந்தே உணரலாம். ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?

    ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.



    இதன்படிப் பார்த்தால் மிகச் சிறந்த இலக்கியம் ஒண்ணுமே புரியாமல் எழுதப்பட்டது ஆகும். இலக்கியம் என்பது அதி புத்திசாலிகளுக்காக எழுதப்படுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

    இன்றுவரை நீண்ட நாட்களாக இருக்கும் எல்லா இலக்கியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் எல்லோருக்கும் எதாவது இருக்கும். குழந்தைக்கு சொல்லும் தாலாட்டில் இருந்து சங்கங்களில் விவாதிப்போர் வரை அவரவர் தேவைக்கேற்ப அது விரியும். குவியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் எதாவது இருக்கும். இலக்கை இயம்புவதே இலக்கியம். இலக்கே இல்லாமல் பயணிப்பது அல்ல.

    இலக்கியம் என்பது மேதாவிகளுக்கே என்ற அந்த போலித்தனம், நவீன இலக்கியத்தின் வறட்டு கௌரவமாக இருக்கிறது. அதை வயலில் களை பறிக்கும் போது வாழ்க்கைத் துணையாய் பாட்டுக்களைக் கொண்ட தமிழன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் சரியான வாதமில்லை.

    புதிது புதிதாய் கற்று கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடன். அப்படிக் கற்றதை படிப்பாளிக்கு புடைத்துக் கொடுப்பதும் படைப்பாளியின் கடனே.

    அப்படி அல்லாமல் படிப்பவரே புடைக்கணும் என்பது படைப்புத் தொழிலல்ல. தரகு வேலை. (ஒருவர் பொருளை இன்னொருவருக்கு விற்பது)

    யாருக்காக படைக்கிறோம் என்ற கேள்வி எழும் பொழுது மக்களுக்காக என்ற பதில் உண்மையாக ஒலிக்குமானால் அதுதான் இலக்கியம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ///ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

    நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?

    ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.
    அண்ணே.. எனக்குப் புரியவில்லை. ஜெயமோகன் கூறியதன்படி நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்


    இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

    தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்.
    பின் எப்படி இலக்கியம் பற்றிய அவரது கருத்து செத்துப் போய்விடுகிறது என்கிறீர்கள்?
    ஒரு படைப்பு அது அடக்கியிருக்கும் அனுபவத்தை வாசகன் தனது அறிவின் மூலம் இன்னொரு அனுபவமாக ஆக்க முயலுகிறான். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. ஏதோ ஒன்றை எழுதிவிட்டு அதுதான் இலக்கியம் என்று சொல்லவில்லை, இலக்கியம் சிந்தனைகளை அடைய வைக்கவேண்டும்,


    ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.


    இதன்படிப் பார்த்தால் மிகச் சிறந்த இலக்கியம் ஒண்ணுமே புரியாமல் எழுதப்பட்டது ஆகும்.
    அப்படியல்ல, ஒரு இலக்கியம் நம்மை எவ்வளவு தூரம் சிந்திக்க வைக்கிறதோ அவ்வளவுதூரம் அது சிறந்ததாக இருக்கிறது. கவிதைகள் முழுவதும் இதற்கு உதாரணங்களே. சொல்லவருவதை மறைத்து குறைத்து சொல்லுவது மரபு இலக்கியங்களிலும் உண்டுதானே? அதனால்தான் ஒரு பாடல் பல அர்த்தங்களுக்கு விரிகிறது.எல்லா அர்த்த விளக்கங்களையும் சொல்லிவிட்டால் பிறகு சிந்தனை எங்கிருந்து வரும்?

    புதிது புதிதாய் கற்று கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடன். அப்படிக் கற்றதை படிப்பாளிக்கு புடைத்துக் கொடுப்பதும் படைப்பாளியின் கடனே.

    அப்படி அல்லாமல் படிப்பவரே புடைக்கணும் என்பது படைப்புத் தொழிலல்ல. தரகு வேலை. (ஒருவர் பொருளை இன்னொருவருக்கு விற்பது)
    அதாவது என்ன எழுதினாலும் எழுதினவர்களே விளக்கவேண்டுமா? படிப்பவருக்கு என்று எந்த வேலையுமில்லையா?
    வாசகத்தகுதி என்று ஒன்று உள்ளது. குமுதம் வாசிப்பவர்களை காலச்சுவடு வாசித்து புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது அர்த்தமற்றது. ஏனெனில் அவர் குமுதல் “லெவலில்”தான் இருப்பார்.. வாசகர்களுக்கும் இலக்கிய பயிற்சி வேண்டும். சொல்வதையெல்லாம் தேமேயென தெரிந்து கொண்டால் வாசகத்தகுதி என்ற ஒன்றே இருக்காது.
    உதாரணத்திற்கு
    சொற்சிலம்பத்திற்குள் நுழைய ஒரு வாசகருக்கு வாசகத்தகுதி வேண்டும். அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சி இருந்தால்தான் அங்கு விலாசப்படுவது விவரமாகப் புரியும்,

    முக்கண்ணன் என்று சொன்னால் பயிற்சி இல்லாதவர்கள் மூன்று கண்களை உடையவன் என்று புரிந்து அதோடு நின்றுவிடுவார்கள், சற்றே பயிற்சி உடையவர்கள் அது சிவனைக் குறிக்கிறது என்று பொருள் கொள்ளுவார்கள், நன்கு பயிற்சி உள்ளவர்கள், அது தேங்காயையும் குறிக்கிறது என்று புரிந்து கொள்வார்கள்,

    படிப்பாளிக்குப் புடைத்துக் கொடுப்பதற்காகத்தான் படைப்பே படைக்கப்படுகிறது... ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் படைப்புகளே வராது!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ///ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

    நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?

    ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.

    Quote Originally Posted by ஆதவா View Post
    அண்ணே.. எனக்குப் புரியவில்லை. ஜெயமோகன் கூறியதன்படி நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்
    புரியவில்லை என்று சொல்லி விட்டு அப்புறம் எப்படி நான் ஒத்துக்கொள்கிறேன் என்று முடிவு கட்டினீர்கள்?

    இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

    தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்


    Quote Originally Posted by ஆதவா View Post
    பின் எப்படி இலக்கியம் பற்றிய அவரது கருத்து செத்துப் போய்விடுகிறது என்கிறீர்கள்?
    ஒரு படைப்பு அது அடக்கியிருக்கும் அனுபவத்தை வாசகன் தனது அறிவின் மூலம் இன்னொரு அனுபவமாக ஆக்க முயலுகிறான். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. ஏதோ ஒன்றை எழுதிவிட்டு அதுதான் இலக்கியம் என்று சொல்லவில்லை, இலக்கியம் சிந்தனைகளை அடைய வைக்கவேண்டும்,
    கருத்தை முழுதாகப் படிக்கவேண்டும். ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது,

    ஜெயமோகன் வாசகனின் தகுதியைப் பற்றி பேசுகிறார். நீங்க கடைசியில் பேசி இருப்பது போல. அவரின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

    ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

    இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பது என்கூற்று. ஒரு குப்பையைப் பார்த்தால் கூட எனக்கு ஒரு சிந்தனை தோன்றும் உங்களுக்கு ஒரு சிந்தனை தோன்றும் ஆதனுக்கு ஒரு சிந்தனை தோன்றும். அங்கே காட்சி.. இங்கே சொல் அவ்வளவுதான் வித்தியாசம். அதற்காக அதை இலக்கியம் என்று கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. என் உணர்வை நீ உணரும்படி நான் சொல்வதே படைப்பின் அடையாளம். நீ என்ன வேணும்னாலும் கற்பனை செய்துகொள்ளலாம் என்பதற்கு படைப்பாளி தேவையில்லை. படைப்பாளியிடம் இருந்து படிப்பவன் எதையாவது பெறுகிறான் என்றால் அது படைப்பாளியின் நோக்கமாக இருந்தாலே அவன் படைப்பாளி.

    ஜெயமோகனின் கருத்துப்படி உனக்குத் தோன்றியதை நீ எழுது. அதுதான் இலக்கியம் என்று ஆகி விடுகிறது.

    உதாரணமாக

    சீனா தும்மி சா துமி சாச்சா தும்மி சாச்சாச்சா!!!

    இப்போ என்னைச் சிந்திக்க வைத்ததால் இந்த வரிகள் மிகச் சிறந்த இலக்கியம் என்கிறார் ஜெயமோகன். அதனால்தான் அவருடைய கருத்து அப்பவே செத்துப் போச்சு என்கிறேன். நீங்க இந்த வரிகளை இலக்கியம் என்கிறீர்களா?


    Quote Originally Posted by ஆதவா View Post
    அப்படியல்ல, ஒரு இலக்கியம் நம்மை எவ்வளவு தூரம் சிந்திக்க வைக்கிறதோ அவ்வளவுதூரம் அது சிறந்ததாக இருக்கிறது. கவிதைகள் முழுவதும் இதற்கு உதாரணங்களே. சொல்லவருவதை மறைத்து குறைத்து சொல்லுவது மரபு இலக்கியங்களிலும் உண்டுதானே? அதனால்தான் ஒரு பாடல் பல அர்த்தங்களுக்கு விரிகிறது.எல்லா அர்த்த விளக்கங்களையும் சொல்லிவிட்டால் பிறகு சிந்தனை எங்கிருந்து வரும்?

    சிந்திக்க வைக்க இலக்கியமே தேவையில்லை என்பது என் அடிப்படைக் கருத்து. எந்த ஒரு நிகழ்வும், எந்த ஒரு காட்சியும் எந்த ஒரு ஓசையும் எந்த ஒரு சுவையும் எந்த ஒரு ஸ்பரிசமும் நம்மைச் சிந்திக்க வைக்கத்தான் செய்கின்றன. எது நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது என்றால் எதையெல்லாம் நாம் அடைய முடிவதில்லையோ, புரிந்து கொள்ள இயலவில்லையோ அல்லது வெல்ல முடியவில்லையோ அவையெல்லாம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன. இது இயற்கையான மனிதனின் உள்ளுணர்வு. இதை இலக்கியம்தான் தூண்டுகிறது என்பது கட்டுக்கதை.. அவர்கள் மனித மனதையே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.


    Quote Originally Posted by ஆதவா View Post
    அதாவது என்ன எழுதினாலும் எழுதினவர்களே விளக்கவேண்டுமா? படிப்பவருக்கு என்று எந்த வேலையுமில்லையா?
    வாசகத்தகுதி என்று ஒன்று உள்ளது. குமுதம் வாசிப்பவர்களை காலச்சுவடு வாசித்து புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது அர்த்தமற்றது. ஏனெனில் அவர் குமுதல் “லெவலில்”தான் இருப்பார்.. வாசகர்களுக்கும் இலக்கிய பயிற்சி வேண்டும். சொல்வதையெல்லாம் தேமேயென தெரிந்து கொண்டால் வாசகத்தகுதி என்ற ஒன்றே இருக்காது.
    உதாரணத்திற்கு
    சொற்சிலம்பத்திற்குள் நுழைய ஒரு வாசகருக்கு வாசகத்தகுதி வேண்டும். அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சி இருந்தால்தான் அங்கு விலாசப்படுவது விவரமாகப் புரியும்,

    முக்கண்ணன் என்று சொன்னால் பயிற்சி இல்லாதவர்கள் மூன்று கண்களை உடையவன் என்று புரிந்து அதோடு நின்றுவிடுவார்கள், சற்றே பயிற்சி உடையவர்கள் அது சிவனைக் குறிக்கிறது என்று பொருள் கொள்ளுவார்கள், நன்கு பயிற்சி உள்ளவர்கள், அது தேங்காயையும் குறிக்கிறது என்று புரிந்து கொள்வார்கள்,

    படிப்பாளிக்குப் புடைத்துக் கொடுப்பதற்காகத்தான் படைப்பே படைக்கப்படுகிறது... ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் படைப்புகளே வராது!!
    வாசகர் தகுதி - இந்த வார்த்தைதான் இன்றைய நவீன இலக்கியத்தில் மிக அதிகமாக துர் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை ஆகும். நீங்கள் சொல்வதற்கு முழுதான எதிர்ப்பு சொல்லப் போவது இல்லை. காரணம் படிப்பதில் பல படிகள் உள்ளன. அதை நாம் ஒவ்வொன்றாகத் தான் கடக்கிறோம். சிறு சிறு பாட்டுகளுக்காகத்தான் நம் வாசிப்பு ஆரம்பித்தது. பின்னர் சின்னச் சின்ன கதைகள். பின்னர் சற்றே பெரிய கதைகள். நெடுங்கதைகள் என்று வளர்ந்து கடைசியாகவே இலக்கியம் என்னும் உலகிற்குள் நுழைகிறோம்.

    ஆனால் நன்கு கவனித்தால் வெகுஜனங்களில் பலர் நெடுங்கதைகளுக்கு மேலே போவதே இல்லை.

    கந்த புராணமும் சரி, கம்ப இராமாயணமும் சரி இன்னும் எந்த பெரிய படைப்பாக இருந்தாலும் சரி.. எழுதிய கம்பரோ, கச்சியப்பரோ அதை வருடக்கணக்கில் விளக்கி அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியாதிருக்கலாம்.

    தமிழ்ச் சங்கங்களிலும் அரச சபைகளிலும் தங்கள் படைப்புகளை அரங்கேற்றம் செய்தவர்கள் அவற்றை விளக்கியே சாதித்தார்கள். நமது புராணங்கள் கூட எழுதியவர்களாலே விளக்கப்பட்டதாக கதைகள் உண்டு. மிகச் சில படைப்புகளுக்கு மட்டுமே கற்றல் என்பது அவசியமானது. அவை கலை படைப்புகள் அல்ல. நுட்பங்களை அடக்கிய அறிவியல் / தொழில் / நுட்பங்கள் சம்பந்தப்பட்டவை.

    அந்தக் கடமை தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கவே செய்தது. அந்தக் கடமையில் இருந்து நழுவ வேண்டிய அவசியம் இல்லை. சொற்சிலம்பத்தில் கூட புரியவில்லை என்றால் விளக்க வேண்டிய கடமையை நாங்கள் மறுத்ததில்லை என்பதையும் நீங்களே அறிவீர்கள். வாசகர்கள் விளக்கம் கேட்க கூச்சப்பட்டாலும், கேட்டவர்களை தகுதி குறைவானவர்களாக யாரும் இந்த மன்றத்தில் கருதியதும் இல்லை.

    காரணம் இன்றைய கூகுள் ட்ரான்ஸ்லேட்டருக்கும் நம்முடைய நவீன இலக்கியவாதிக்கும் வித்தியாசம் குறைந்து கொண்டே வருகிறது, தான் படிப்பதை சரியா தவறா என்று ஆலோசிக்கக் கூடச் செய்யாமல் அப்படியே மொழிமாற்றிப் போட்டு விடுகிறார்கள். அதைப் பற்றி அவர்கள் செய்யும் விளம்பரங்களில் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளாக பல வளரும் படைப்பாளிகள் அதுதான் சரியென்று தங்களுக்குப் பட்டதையெல்லாம் அதற்குக் கற்பித்து ஒன்றை வேறுவிதமாக்கி விடுகிறார்கள். கடைசியில் மனதில் நிற்பவை சில பல உண்மையான மனக்குமுறல்களின் வெளிப்பாடாக நிற்கும் சில பல துண்டுகளான கவிதைகளும் சிற்றிலக்கியங்களும். அதற்குக் காரணம் நவீன இலக்கிய பாணி அல்ல. அந்த உணர்வுகளின் அழுத்தமான ஆழமான மனப்பதிவு.

    இலக்கியம் எப்படி நம் வாழ்க்கைக்குள் நுழைகிறது என்று சொன்னேன் அல்லவா? ஒரே இலக்கியம் சின்னக் குழந்தையின் பாடலாகவும் சிறுகதையாகவும் பல வடிவங்களில் நம்மைச் சேரக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஜெயமோகன் கூறும் இலக்கியம் அப்படிப்பட்டது அல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது மக்களின் வாழ்க்கையில் கலக்காது.

    வாசகத் தகுதி இலக்கியங்களின் தன்மையால் வளர்வதாகும். அது கொய்யா மரத்திலோ மாங்காய் மரத்திலோ காய்ப்பது அல்ல. அதை வளர்ப்பதும் இலக்கியவாதிகளின் கடமை ஆகும். ஆனால் அந்த வாசகர்களையே திட்டுபவர்களை இலக்கியவாதிகள் என்று ஏற்றுக் கொள்ள இயல்வதில்லை.
    Last edited by தாமரை; 29-03-2012 at 04:50 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஆதன்

    நீங்க திரியின் தலைப்பை தெரிஞ்சு வச்சீங்களா? தெரியாம வச்சீங்களா?

    ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    மகா ஞானசபையில் தருக்கம் நடக்கும் காட்சி கண்ணுக்குள் விரிகிறது. ஜோதிஸ்தம்பம் ஒவ்வொன்றாய் சுடர் விட்டு எரிவதும் கண்ணுக்குள் தெரிகிறது. அண்ணாந்து பார்த்தால் ஆகா கிருஷ்ண பருந்து....


    ஓம்...
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதன்....ஒரு கவிதையை...இத்தனைப் பாடுபட்டுதான் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்....அந்த நவீன இலக்கியத்தின் சமூகப் பங்கு என்ன? யாருக்காக அந்த வரிகள்....உனக்குப் புரியவில்லையா, பிடிக்கவில்லையா விலகிவிடு என்றால்...சமூகத்தைவிட்டு அந்தக் கவிதை விலகிவிடுவது தெரியவில்லையா.

    மேலிருந்து இரண்டு கோடுகள்...குறுக்கு வாட்டில் ஏழுகோடுகள் போட்டு....இது இறுதி யாத்திரை என என்னாலும் நவீன ஓவியம் வரைய முடியும். ஆனால்...விளக்கிச் சொல்லுமளவுக்கு ஒரு கவிதை இருக்கிறதென்றால்....பரிதாபம் அந்தக் கவிதைக்கும்...கவிஞனுக்கும்தான்.

    ஜெயமோகன் ஒரு அதிகப் பிரசங்கி...அரை வேக்காடு. அரைவேக்காட்டின் வார்த்தைகளை நான் கருத்தில் கொள்வதில்லை. சொல்ல வந்தக் கருத்து...நேரிடையாய் சொல்லப்பட வேண்டியவர்களிடம் சேராத வரை அது...குப்பைதான். எத்தனைதான் அலங்கரித்தாலும் குப்பை குப்பைதான். நவீன கவிதைகள் என்னைப் பொருத்தவரைக் குப்பைகளே.

    தன்னை தனிப்பட்டவராய்க் காண்பிக்க மட்டுமே உதவும் அந்த குழப்ப வரிகளால்...எந்தப் பயனும் இல்லை.

    மன்னிக்கவும்.....காலம் மாறலாம்...காட்சி மாறலாம்...ஆனால்...கருத்து மாறக்கூடாது....மாறினால்....கருத்து....கருத்தாய் இருக்காது.

    உங்கள் தமிழின்பால் எனக்கு மிகுந்த மோகமுண்டு...அதை இப்படியான வெற்றுக் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கி இல்லாமல் செய்துவிடாதீர்கள்.

    (ஜெயமோகன் என்ற இரண்டுங்கெட்டானின்(அவர் தமிழருமில்லை...மலையாளியுமில்லை.....ஒரு பச்சோந்தி) வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.....தமிழரைப் பற்றி அந்த இரண்டுங்கெட்டானுக்கு என்ன தெரியும்?)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ”இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’”

    .
    இதற்குப் பொருள் அந்தத் தமிழே தெரியாதவனின் மொழியில் இருந்துதான் அந்த இலக்கியம் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்பது.

    நவீ"ண" இலக்கியங்களில் இப்படியும் சில உண்டு.

    நமது இலக்கியம் என்பது நமது பண்பாட்டை, உயர்வை உலகிற்கு எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். நம் பண்பாட்டை பிற பண்பாட்டுக் கழிவுகள் மூலம் சிதைப்பதாக இருத்தல் கூடாது. மற்றவரின் பண்பாட்டை அவர்களின் இலக்கியம் மூலம் நாம் அறியலாம். நீ எந்த மொழியில் எழுதினாலும் யாருடைய பண்பாட்டை எழுதுகிறாயோ அந்த சமூகத்தையே அந்த இலக்கியம் சாரும்.

    கம்பர் கூட மொழிமாற்றம் செய்தார்.. வால்மீகி இராமாயணத்தை. ஆனால் அதில் இழையோடி இருப்பது தமிழ் பண்பாடு. தேவைக்குத் தகுந்தார்போல் மாற்றி இருப்பார்.

    சமூக மாற்றம் வேண்டும் என்னும் எழுத்தாளர்களும் இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களின் முதற்கடமை சமூகத்திற்கு புரியும்படி சொல்வது.

    சமூகத்தை வையும் இலக்கியம் உண்டாக்கும் தாக்கம் என்ன?

    புரிந்து கொள்ள வேண்டுமானால் பழைய பாடம்தான் மீண்டும் ஒரு முறை படிப்பதில் தப்பில்லை.

    சும்மா திட்டாதீங்க! நான் சொல்லும் படி வைக்காதீங்க!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதன் View Post
    இங்கு மன்ற உறுப்பினர்கள் அல்லாத* மற்ற பிற கவிஞர்களின் கவிதைகள் விவாதிக்கப்படும்..
    இதுவரைக்கும் ஜெயமோகனின் கட்டுரையைப் பற்றி மட்டும் கருத்து சொன்னேன்.

    பிற கவிஞர்களின் கவிதைகளை விமர்சிக்க தனித் திரி இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இந்தத் திரியில் அது சரியாக வராது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆதன்....ஒரு கவிதையை...இத்தனைப் பாடுபட்டுதான் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்....அந்த நவீன இலக்கியத்தின் சமூகப் பங்கு என்ன? யாருக்காக அந்த வரிகள்....உனக்குப் புரியவில்லையா, பிடிக்கவில்லையா விலகிவிடு என்றால்...சமூகத்தைவிட்டு அந்தக் கவிதை விலகிவிடுவது தெரியவில்லையா.

    மேலிருந்து இரண்டு கோடுகள்...குறுக்கு வாட்டில் ஏழுகோடுகள் போட்டு....இது இறுதி யாத்திரை என என்னாலும் நவீன ஓவியம் வரைய முடியும். ஆனால்...விளக்கிச் சொல்லுமளவுக்கு ஒரு கவிதை இருக்கிறதென்றால்....பரிதாபம் அந்தக் கவிதைக்கும்...கவிஞனுக்கும்தான்.

    ஜெயமோகன் ஒரு அதிகப் பிரசங்கி...அரை வேக்காடு. அரைவேக்காட்டின் வார்த்தைகளை நான் கருத்தில் கொள்வதில்லை. சொல்ல வந்தக் கருத்து...நேரிடையாய் சொல்லப்பட வேண்டியவர்களிடம் சேராத வரை அது...குப்பைதான். எத்தனைதான் அலங்கரித்தாலும் குப்பை குப்பைதான். நவீன கவிதைகள் என்னைப் பொருத்தவரைக் குப்பைகளே.

    தன்னை தனிப்பட்டவராய்க் காண்பிக்க மட்டுமே உதவும் அந்த குழப்ப வரிகளால்...எந்தப் பயனும் இல்லை.

    மன்னிக்கவும்.....காலம் மாறலாம்...காட்சி மாறலாம்...ஆனால்...கருத்து மாறக்கூடாது....மாறினால்....கருத்து....கருத்தாய் இருக்காது.

    உங்கள் தமிழின்பால் எனக்கு மிகுந்த மோகமுண்டு...அதை இப்படியான வெற்றுக் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கி இல்லாமல் செய்துவிடாதீர்கள்.

    (ஜெயமோகன் என்ற இரண்டுங்கெட்டானின்(அவர் தமிழருமில்லை...மலையாளியுமில்லை.....ஒரு பச்சோந்தி) வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.....தமிழரைப் பற்றி அந்த இரண்டுங்கெட்டானுக்கு என்ன தெரியும்?)
    சிவா அண்ணா,

    நான் யாரையும் புறக்கணிப்பதில்லை, யாரையும் சுலபத்தில் தூக்கி கொண்டாடுவததில்லை

    சிவா அண்ணா எனக்கு பிடிக்கும், சிவா அண்ணாவின் படைப்புக்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் சிவா அண்ணாவை பிடிக்கும் என்ப*தால் சிவா அண்ணாவின் படைப்புக்களை எனக்கு பிடிக்கும் என்று நான் சொல்வதில்லை. சிவா அண்ணாவின் இந்த விமர்சன கருத்தின் மீதான என் கருத்து இந்த திரியோடு முடிந்துவிடுகிறது, இதனை நான் சிவா அண்ணாவின் படைப்பு திரிகளில் நுழைப்பதில்லை, இதனை சுமந்து கொண்டு வந்து சிவா அண்ணாவின் படைப்புக்களை படித்து பின்னூட்டமில்லை. கொள்கைகள் வேறு அனுபவம் வேறு கருத்துக்கள் வேறு என இருந்தாலும் வேராய் இருப்பது ரசனையும், படைப்புத்தரும் அனுபவமும், சிந்தனையும் தான்.

    எப்படி சிவா அண்ணாவை வாசிக்கும் போது அவரின் மீதான என் தனிப்பட்ட அன்பை, நட்பை, மரியாதையை, அவரின் முந்தைய படைப்புக்களை கொண்டு வாசிப்பதில்லையோ, அப்படித்தான் ஜெயமோகனின் பின்புலத்தை கொண்டு ஜெயமோகனை வாசிப்பதில்லை.

    நம் மன்றத்தில் கீதமக்கா, யவனிக்கா, ஆதவா, அமர், செல்வா, மூர்த்தியின் சில கதைகள், நான், இன்னும் சிலர் நவீன இல*க்கிய*ங்க*ளைத்தான் எழுதி கொண்டிருக்கிறோம்

    இந்த கட்டுரை நவீன இலக்கியம் ஏன் புரியவில்லை என்பதை பற்றிய விளக்கம், நவீன இலக்கியத்தின் கூறுகள், கூருகள் பற்றியெல்லாம் இதில் விவாதிக்கப்படவில்லை, விவாதிக்கப்படும் போது உங்கள் புரிதல்கள் மேலோங்களாம்.
    அப்படிப்பட்ட விவாதங்கள் இங்கே நிகழும் எனும் ஆவலிலேயே இந்த கட்டுரையை புதிற்பதிவாக கொண்டு துவங்கினேன்.


    இந்த திரியில் தமிழ் நவீன இலக்கியத்தின் மீதான என் மனக்குறைகள், அவை மக்களிடம் சென்று சேர நிகழாத மெனக்கெடல், படிமம், குறியீடு பற்றி படைப்பாளிகளிடம் இருக்கும் தெளிவற்ற புரிதல், அதனால் நிகழும்/நிகழ்ந்த குழப்படிகளென பலவற்றையும் விவாதிக்கவே இந்த திரியை துவங்கினேன்.

    என்ன அதிஸ்டமோ தாமரையண்ணாவே பிள்ளையார் சுழி போட்டுவிட்டார், நிச்சயம் விவாதம் கலைக்கட்டும் எனும் நம்பிக்கை வந்துவிட்டது. சிவா அண்ணா, யார் என்ன சொல்றாங்கனு கேட்காமலே ஒரு தீர்மானத்துக்கு வருவது மிக பெரியத்தப்பு. விவாதிப்போம், நவீனத்தை புரிந்து கொள்ள மட்டுமல்ல அதன் கொள்கைகளையும் புரிந்து கொள்ள, எதுவுமே தப்பில்லை அண்ணா, சூழ்லைக்கு ஏற்ப நியாய தர்மங்கள் வேண்டுமானால் மாறுபடலாம்.
    அன்புடன் ஆதி



  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆதன்

    நீங்க திரியின் தலைப்பை தெரிஞ்சு வச்சீங்களா? தெரியாம வச்சீங்களா?

    ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
    எப்படி படிக்கிறோமோ அப்படி புரியும் அண்ணா
    அன்புடன் ஆதி



  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆதன்

    நீங்க திரியின் தலைப்பை தெரிஞ்சு வச்சீங்களா? தெரியாம வச்சீங்களா?

    ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
    Quote Originally Posted by ஆதன் View Post
    எப்படி படிக்கிறோமோ அப்படி புரியும் அண்ணா
    புரிவதைப் பற்றிக் கேட்கலை தம்பி. தெரியுமான்னுதான் கேட்டேன்.

    உதாரணமாக

    ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம். இதற்கு இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்று பெயர் [secondary symbolic order]. அது மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி. அதில்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.

    இது சரியான தமிழே அல்ல. படி இறங்குதல் என்றால் பணிந்து தன் நிலையிலிருந்து மாறி நெருங்கி வருதல் ஆகும். அங்கே தரம் குறைவதில்லை. தரம் குறைதல் இறங்குதல் என்ற சொல்லாலே குறிப்பிடப்படுகிறது.

    படி என்பது தளங்களையும் - மாடிகளையும் இணைக்கும் ஒன்று என்ற மயக்கமே அவரை அப்படிப் பொருள்கொள்ள வைத்தது. ஆனால் படி என்பது வீட்டையும் நாட்டையும் இணைப்பது என்பதும் உண்மைதானே.. படி இறங்கினான் என்றால் சமூகத்துடன் இணைந்தான் என்றும் பொருள்படும்.

    ஒரு கல்லை ஒருவன் தெருவில் வீசுகிறான். எவனோ ஒருவன் அதில் சிலை வடித்தால் சிலை வைத்தவன் கல்லை வீசினவன் இல்லை அல்லவா. நான் கல் வீசியதால்தான் இங்கு சிலை வந்தது என்பது சரியா?

    உங்களுக்குத் தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியம் புரியாது. இது சரியான வாதம். ஆனால் அதன் பின்னே வருகின்ற தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும் என்பது தவறான வாதம்.

    உதாரணமாக அவரே சொல்கிறார்

    ஒரு பண்பாட்டில் உள்ள இந்த மீமொழியை பொழிப்புரை அல்லது அகராதியைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்தான். தமிழ்ப்புதுக்கவிதையில் பறவை என்று சொன்னால் அது விடுதலை, வானுடன் உள்ள தொடர்பு என்ற பொருளையே அளிக்கிறது என்று சொல்லலாம்தான்.

    அந்த இரண்டாவது மொழியை உண்டாக்குவது பண்பாடு. ஒரு சொல்லிற்கு சரியான அர்த்தம் தருவது மொழியும் பண்பாடும். அது உள்ளிருந்து வருவது. வெளியிலிருந்து அல்ல. அந்தப் பண்பாடு எங்கிருந்து வருகிறது? அது சமூகத்தில் இருந்து வருகிறது.

    கழுகு என்றால் கூர்மையான பார்வை,
    புறா என்றால் அமைதி,
    சிட்டுக் குருவி என்றால் எளிமையான சுதந்திரமான
    காகம் என்றால் கூடி இருக்கிற
    வல்லூறு என்றால் பிறர் துன்பத்தில் இன்பம் காணுகிற
    குயில் என்றால் கவலையில்லாத
    மயில் என்றால் ஆர்ப்பாட்டமான அழகான

    இதெல்லாம் அவற்றின் குணங்களில் இருந்து பிறந்தவை. பண்பாட்டினால் பிறந்தவை.

    இது இரண்டாவது மொழி அல்ல. பண்பை சித்தரிப்பவை. இவை இன்றல்ல தொல்காப்பியத்திலேயே உள்ளன,

    அதாவது ஒரு குறியீடாக நிற்கும் சொல்லிற்கு நேரடிப் பொருளோ அல்லது அதன் பண்போ தான் உபயோகப்படுத்தப்படுமே தவிர புதிதாய் ஒன்றும் முளைத்து விடுவதில்லை. இது மொழி அறிந்தவனுக்கு எளிதில் புரியும்.

    ஜெயமோகன் சொல்லும் இந்தக் குறீயீட்டு மொழி நவீன இலக்கியத்திற்குச் சொந்தமானதல்ல. மறை பொருள் கூறும் சித்தர்களின் இலக்கியத்திற்குச் சொந்தமானது. மருத்துவக் குறிப்புகள் போன்ற பலருக்கும் புரியாமல் சரியான வழியில் கற்கும் தகுதி உள்ளோருக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என அக்காலத்தில் உண்டாக்கப்பட்ட குறியீட்டு மொழியைச் சேர்ந்தது.

    உதாரணம் :

    http://www.tamilmantram.com/vb/showp...7&postcount=97

    இது எங்கிருந்து புறப்பட்டு எங்கு சென்று இப்பொழுது ஏதோ மேலை நாட்டு தத்துவமாக நம்மிடம் திணிக்கப்படுகிறது.

    இப்பொழுதைய நவீன மீமொழி என்று சொல்வதைப் பற்றி ஜெயமோகன் சொல்வதென்ன?


    இங்கே என்ன நடக்கிறது என்றால் தமிழுக்குள் உள்ள இந்த இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு, அதாவது மீமொழி, உலகம்தழுவியதாக ஆகிவிடுகிறது. இலக்கியத்துக்கு உலகம் முழுக்க ஒரே குறியீட்டு மொழி ஒன்று உருவாகி வந்தது. அதனால்தான் நமக்கு பாப்லோ நெரூதாவும் மயகோவ்ஸ்கியும் புரிகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனை என்றால் இப்படி உலகம் முழுமைக்குமாக ஒரு இலக்கிய மீமொழி உருவானதேயாகும்

    பல்வேறு பண்பாடுகளுக்குமான பொதுவான மீமொழி.. இது இயலுமா என்றால் இது வெறும் போலித் தோற்றம்தான். அவரவர் பண்பாட்டை துறந்தால்தான் இதை உருவாக்க முடியும். ஆனால் பண்பாடின்றி இலக்கியம் ஏது?

    ஆக தமிழ் படித்த தமிழ் பண்பாட்டில் வாழ்கின்ற ஒருவனுக்கு புரியாத, தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்காத ஒன்றை ஏன் நவீன தமிழ் இலக்கியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்?

    இப்பொழுது உன் தலைப்பில் உள்ள கேள்விக்கு இங்கே பதில் கிடைத்திருக்கும்.


    ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?[/QUOTE]

    காரணம் அது சமூகத்தினை அதன் பண்பாட்டினை பிரதிபலிக்காமல் உலக இலக்கியம் என்று வர்ணம் பூசிக் கொண்டு இருக்கிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #24
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    சிவா அண்ணா,
    இந்த திரியில் தமிழ் நவீன இலக்கியத்தின் மீதான என் மனக்குறைகள், அவை மக்களிடம் சென்று சேர நிகழாத மெனக்கெடல், படிமம், குறியீடு பற்றி படைப்பாளிகளிடம் இருக்கும் தெளிவற்ற புரிதல், அதனால் நிகழும்/நிகழ்ந்த குழப்படிகளென பலவற்றையும் விவாதிக்கவே இந்த திரியை துவங்கினேன்.

    சிவா அண்ணா, யார் என்ன சொல்றாங்கனு கேட்காமலே ஒரு தீர்மானத்துக்கு வருவது மிக பெரியத்தப்பு. விவாதிப்போம், நவீனத்தை புரிந்து கொள்ள மட்டுமல்ல அதன் கொள்கைகளையும் புரிந்து கொள்ள, எதுவுமே தப்பில்லை அண்ணா, சூழ்லைக்கு ஏற்ப நியாய தர்மங்கள் வேண்டுமானால் மாறுபடலாம்.
    உணர்ந்துகொண்டேன் ஆதன். என் பிழை என்ன என்பது தெரிகிறது. விவாதிப்போம் தெளிவடைவோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •