Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6
Results 61 to 62 of 62

Thread: ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

                  
   
   
  1. #61
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    என் சிற்றறிவுக்கு எட்டியவரை கவிதை என்பது இதுதான் என்றிருந்தேன் இந்த பதிவினை காணும் போது வரையறைகளும் உண்டு கவிதைகளுக்கென விதிகளும் உண்டென்று அறிகிறேன் ..சங்க பாடல்கள் தவிர்த்து இன்றைய கவிதைகளுக்கு வரையறை கூறிய புலவன் யாரோ என்கையில் பதிவுகள் காட்டுகிறது சுட்டு விரல் நீட்டி பலரை ..மறைபொருளில் கூறும் கவிதையின் விளக்கம் போல் இன்று எங்கே காண முடிகிறது ..தொடருங்கள் ஆதன் ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #62
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    உன் பூவிதழ்
    வடித்த தேனை
    என் வண்டிதழ்
    குடித்தது

    ஒரு காதலன் காதலி முத்தமிட்டுக் கொள்வதை பற்றிய கவிதையாக பார்த்தோமில்லையா

    இதே கவிதையை
    உன் பூவிதழ்
    வடித்த தேவை
    என் மனவண்டு
    குடித்தது

    என்று ஒரு வார்த்தையை மட்டும் மாற்றினால் இக்கவிதை பல்வேறு அடுக்குகளை உள்ளடக்கியதாக மாறிவிடுகிறது

    பூவிதழ் வடித்த தேன் புன்னகையாகவும், அதனை அவன் மன வண்டு பருகுவதாகவும் மாறுகிறது

    அந்த புன்னகை காதலியால் வழங்கப்படும் போது அது அவன் மனதை காதலின் போதையில் மிகக்கவிடுகிறது

    அந்த புன்னகை ஒரு பெண்ணின் சரசபுன்னகையாக இருக்கும் போது, அது அவன் மனதை விரக ரசத்தில் தோய்கிறது

    இப்படி காதலையும், காமத்தை பேசும் ஒரு வார்த்தையாகிறது

    இத்தோடு மட்டும் இக்கவிதை இன்றுவிடவில்லை

    பூவிதழ் வடித்த தேன்

    புத்தனின், ரமணரின், ராமகிருஸ்ணரின், ஏசுவின், நபியின், கண்ணனின் உபதேசங்களாக கொள்ளப்படும்போது, மன வண்டு குடித்த தேன் ஆன்மீகமாக விடுகிறது

    சூஃபிகளின் பார்வையில் படிக்கப்படுகையில்

    இறைவனுக்கும் நமக்கும் உள்ள காதலை பற்றி பேசுவதாகிறது

    ஜெஃ பார்வையில் பார்க்கும் போது, மன வண்டு குடித்தத்தேன் ஞானமாகிறது

    ஒரு ஆசிரியன் கற்று தரும் பாடத்தை மாணவன் ருசியொடு படிப்பதாகவும் இந்த கவிதை அமைகிறது

    மாற்றப்பட்டது ஒரு வார்த்தைதான் ஆனால் அது பொதித்து வைத்திருக்கும் பொருள் மிக விசாலமானது, பல்வேறு தளங்கள் கொண்டது

    அதனால்தான் ஒரு படைப்பில் இடம் பெருகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாகிறது

    தேவையற்ற வார்த்தைகள் அழகுற இருந்தாலும் அதை படைப்பில் இருந்து நீக்கிவிடும் போது அந்த படைப்பு சிறப்பானதாக அமைகிறது

    இதைத்தான் இஸ்லாதின் சட்டங்கள் கூட சொல்கிறன போலும், உன் உடலில் உள்ள உறுப்பு பிறர்க்கு கேடுள்ளதாய் இருந்தால் அதனை நீக்கி சுத்தமானவனாக நீ வாழ்தல் நலம் என்று..

    தொடரும்..
    அன்புடன் ஆதி



Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •