Page 4 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 37 to 48 of 62

Thread: ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வரிசையாய் நட்டுவைத்த
    பிளாஸ்டிக் செடிகளினூடே
    எப்படி(யோ)நுழைந்துவிட்டது
    நிஜச்செடி

    என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இது, மிக எளிமையான கவிதைத்தான், ஆனால் இது பார்க்கப்படும் விதம் வாசகனுக்கு வாசகன் மாறு படும் இல்லையா

    இது இல்யூஸனை பேசுகிறது, பொய்மெயெதனத் தோன்றும் மாயத்தருணத்தை படம் பிடிக்கிறது, ஆனால் இல்யூஸனை உணர்ந்து கொள்ள வாசகனுக்கு வாசிப்பானுபவம் தேவைப்படுகிறது இல்லையா ?
    அன்புடன் ஆதி



  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இக்கவிதையை முதலாக எடுத்ததற்கு நன்றி. ஏனென்றால் இலக்கியங்களில் எழுதி வெளியிடுவது என்பது முதல் கட்டம் என்றால் விளக்குதல் என்னும் இரண்டாம் கட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு இது சரியான உதாரணமாகும்.

    இக்கவிதையை இல்யூஷன் - மாயத்தோற்றம் என்று சொல்லக் கூடாது(இயலாது முடியாது என்ற ஊகம் கலந்த வார்த்தைகளை விட, கூடாது என்பது உறுதியான மறுப்பென நினைக்கிறேன்). இது நிஜத்தின் தரிசனம்.

    வாசகனுக்கு வாசகன் கோணமும் சுவையும் மாறலாம். ஆனால் கவிஞர் சொல்ல வரும் மூலக்கருத்து சரியாகச் சென்றடைதல் மிகமிக முக்கியம். அது முதல் வரிசை ரசிகனுக்கே தடுமாறுகிறது என்பது கவிதையின் பிரச்சனை அல்ல. ஏனென்றால் கவிதை மிக எளிமையானது. மிக வெளிப்படையானது. ஒரு வேளை சரியான தலைப்பு இருந்திருந்தால் (இந்தக் கவிஞருக்கு, தன் கவிதைக்குத் தலைப்பு வைப்பதில் தடுமாற்றம் உண்டோ??) மாய வலைகளில் சிக்கித் தவிக்கும் முதல் வரிசை ரசிகருக்குப் புரிந்திருக்கலாம்.

    அல்லது கவிஞரே கூட இக்கவிதையை வேறு நோக்கில் எழுத நினைத்து மொழிவளப் பிரச்சனைகளினால் கவிதை மாறி இருக்கலாம்.

    முதலில் கவிஞனின் விளக்கமின்றி கவிதையின் பொருளாய்வதால் கவிஞனின் திறம் அறிய இயலாது. இதை நான் விளக்கினால் என் திறமைதான் வெளிப்படும். கவிஞன் உண்மையிலேயே சிறந்தவனா என்ற அவன் திறம் எப்படி வெளிப்படும்?

    எனவே கவிஞனின் - விளக்கம் முதலில். பின்னர் வாசக விமர்சனம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இக்கவிதையை முதலாக எடுத்ததற்கு நன்றி. ஏனென்றால் இலக்கியங்களில் எழுதி வெளியிடுவது என்பது முதல் கட்டம் என்றால் விளக்குதல் என்னும் இரண்டாம் கட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு இது சரியான உதாரணமாகும்.

    இக்கவிதையை இல்யூஷன் - மாயத்தோற்றம் என்று சொல்லக் கூடாது(இயலாது முடியாது என்ற ஊகம் கலந்த வார்த்தைகளை விட, கூடாது என்பது உறுதியான மறுப்பென நினைக்கிறேன்). இது நிஜத்தின் தரிசனம்.

    வாசகனுக்கு வாசகன் கோணமும் சுவையும் மாறலாம். ஆனால் கவிஞர் சொல்ல வரும் மூலக்கருத்து சரியாகச் சென்றடைதல் மிகமிக முக்கியம். அது முதல் வரிசை ரசிகனுக்கே தடுமாறுகிறது என்பது கவிதையின் பிரச்சனை அல்ல. ஏனென்றால் கவிதை மிக எளிமையானது. மிக வெளிப்படையானது. ஒரு வேளை சரியான தலைப்பு இருந்திருந்தால் (இந்தக் கவிஞருக்கு, தன் கவிதைக்குத் தலைப்பு வைப்பதில் தடுமாற்றம் உண்டோ??) மாய வலைகளில் சிக்கித் தவிக்கும் முதல் வரிசை ரசிகருக்குப் புரிந்திருக்கலாம்.

    அல்லது கவிஞரே கூட இக்கவிதையை வேறு நோக்கில் எழுத நினைத்து மொழிவளப் பிரச்சனைகளினால் கவிதை மாறி இருக்கலாம்.

    முதலில் கவிஞனின் விளக்கமின்றி கவிதையின் பொருளாய்வதால் கவிஞனின் திறம் அறிய இயலாது. இதை நான் விளக்கினால் என் திறமைதான் வெளிப்படும். கவிஞன் உண்மையிலேயே சிறந்தவனா என்ற அவன் திறம் எப்படி வெளிப்படும்?

    எனவே கவிஞனின் - விளக்கம் முதலில். பின்னர் வாசக விமர்சனம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி ஆதவா.. இத்திரியைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் நவீன இலக்கியத்தைப்பற்றிய தெளிவு ஓரளவுக்குக் கிடைக்கும் என்பதாக அறிகிறேன்.

    இது தொடர்பான வாதத்தில் நான் எழுதிய பகுதி ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளட்டுமா..?

  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    நவீன இலக்கியத்திற்கு வரையறைகளும் இலக்கணங்களும் குறியீட்டு முறைகளும் ஏன் இதுவரை எவராலும் எழுதப்படவில்லை..?

    .
    ஏனில்லாமல் ஜெயமோகனே இது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்". ஆனால் ஒரு குறை இந்த புத்தகத்துக்கு கோனார் கைடு இதுவரை வரவில்லை
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கௌதமன் View Post
    ஏனில்லாமல் ஜெயமோகனே இது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்". ஆனால் ஒரு குறை இந்த புத்தகத்துக்கு கோனார் கைடு இதுவரை வரவில்லை
    யாரும் கோணாமல் எழுதணுமே.. அதனால லேட்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி கௌதமன். அந்நூல் பெற்றிட முயல்வேன். உங்களிடம் இருப்பினும் பகிருங்கள்.

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இதுவும் உதவலாம்

    http://www.tamilmantram.com/vb/showp...&postcount=468
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #45
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வேறொரு களத்தில் நடந்த விவாதத்தில் பதிலளித்தது இங்கேயும் பொருந்தும் என்பதால் பதிக்கிறேன்

    இசங்கள் எந்த அளவுக்கு ருசியானவையோ அந்த அளவுக்கு அயர்ச்சிக்கு உள்ளாக்குபவை..

    என்றும் எனக்கொரு ஆதங்கம் உண்டு, நாம் மேலை நாட்டுத்தத்துவங்களை எடுத்துக் கையாண்டு இலக்கியம் படைக்கிறோமே ஒழிய ஏன் நம்முடைய ஒரு தத்துவங்களை கூட மேலை நாடுகளுக்கு எடுத்து செல்லும் நோக்கில் இலக்கியம் படைக்க மாட்டேன் என்கிறோம்..

    தாகூருக்கு இருந்த சாபம் என்று வரை எல்லாருக்கும் இருக்கிறது..

    தாகூர் கீதாஞ்சலியை வங்காலத்தில் எழுதிய போது ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை, பின் வருடம் கழித்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், நோபில் பரிசு கூட கிட்டியது..

    தாகூரின் கீதாஞ்சலி எந்த இசம் என்ன தத்துவத்தால் ஆனது, இப்படி ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதினால் கூட நம் தத்துவங்கள் மேலை நாட்டுவர்களுக்கு அறிமுகமாகும்...

    நம்மிடம் முன்பே இருக்கிற ஒன்றை மேலை நாட்டு தத்துவங்களின் பெயரால் இன்று எழுதி கொண்டிருக்கிறோம் என்பதே என் கருத்து..


    த்துவங்கள் மனிதனிடம் இருந்து மனிதனை பிரித்தன என்பதை என்னால் ஏற்க இயலவில்லை ?

    சர்ரியலிசம் மனசின் கோரங்களை வெளிக்காட்ட பிறந்தவையே..

    அது ஒரு மனத்தொழுநோயை வெளி காட்டும் ஒரு கருவியாக இலக்கியத்தை பயன்படுத்தியது

    நம் குரூரங்களையும் கோரங்களையும் விகாரங்களையும் அழுக்குகளையும் நாம் கண்டு கொள்ளாமல் சர்ரியலிச மொழியை ஐயரவாக பார்த்தோம் என்றே சொல்ல தோன்றுகிறது..

    நிலவு எவ்வளவு அழகானது..

    ஆனால் பாருங்கள் அதனை ஒரு ரத்தம் சொட்ட தொங்கவிடப்பட்ட மொட்டை தலையாக பார்க்கிறது மனது

    மனதுக்குள் எவ்வளவு குரூரமும் வனமும் இருந்தால் விண்மீன்கள் மின்னும் வானத்தை பல்லிளிப்பாதாக சொல்லும் மனது

    இது ஆழ்மனதில் அசிங்கங்களை அப்பட்டமாய் அம்பலப்படுத்தும் முயற்சியே, யாரையும் யாரிடமும் தாழ்த்திக் காட்டவோ, உயர்த்தி காட்டவோ செய்யப்பட்டவை அல்ல...
    அன்புடன் ஆதி



  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    இதுவும் உதவலாம்

    http://www.tamilmantram.com/vb/showp...&postcount=468
    வாசித்தேன். நன்றி தாமரை.இன்னும் தெளிவுபெற விழைகிறேன். கண்டிப்பாக முடியும் என்றே நினைக்கிறேன்.

    கற்பதற்கு வயதில்லை அல்லவா..? ( எனக்கு 50 )

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதன் View Post
    வரிசையாய் நட்டுவைத்த
    பிளாஸ்டிக் செடிகளினூடே
    எப்படி(யோ)நுழைந்துவிட்டது
    நிஜச்செடி

    என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இது, மிக எளிமையான கவிதைத்தான், ஆனால் இது பார்க்கப்படும் விதம் வாசகனுக்கு வாசகன் மாறு படும் இல்லையா

    இது இல்யூஸனை பேசுகிறது, பொய்மெயெதனத் தோன்றும் மாயத்தருணத்தை படம் பிடிக்கிறது, ஆனால் இல்யூஸனை உணர்ந்து கொள்ள வாசகனுக்கு வாசிப்பானுபவம் தேவைப்படுகிறது இல்லையா ?
    ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ..சிறியதோ பெரியதோ

    அதை முற்றிலுமாய் ஒழித்து விட முடியாது. உலகத்தில் ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய இடம் உண்டு. பல நேரங்களில் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று பல தலைமுறைகளாக நாம் எண்ணிக்கொண்டிருப்பது உலகின் எந்த மூலையிலோ தன் வடிவம் வெளிப்படாமல் போனாலும் இருக்கிறது. அதற்குரிய சமயம் வரும்பொழுது அது வெளிப்படுகிறது.

    இது சில ஆண்டுகளுக்கு முன் இதே மன்றத்தில் நான் சொன்ன கருத்து ஆகும்.

    அதே கருத்துதான் இந்த பிளாஸ்டிக் செடிகளின் மத்தியில் வெளிப்பட்ட நிஜச் செடியில் பொதிந்து உள்ளது.

    இதில் இல்யூஷன் - அதாவது மாயத் தோற்றம் தோன்ற வேண்டுமானால்..

    நுழைந்து விட்டது என்ற பிரயோகத்தை மாற்ற வேண்டும். கவிஞன் சொல்லும் வார்த்தைகளே தோற்றத்தை நம் முன் உண்டாக்குகின்றன. நுழைந்துவிட்டது என்ற வார்த்தையை நுழைந்ததோ, நுழையுமோ, இப்படி சிந்தனையாக மாற்றுவதால் நீங்கள் சொல்லும்..

    எல்லாம் பிளாஸ்டிக்தான் என்று தெரிந்தாலும் மனம் நம்ப மறுக்கிறது. அவற்றில் ஒன்று நிஜமோ என்று மனம் அடிக்கடிச் சந்தேகத்தில் விழுகிறது என்று சொல்லலாம்.

    கவிஞனின் வார்த்தைகளில் வந்திருப்பது எப்படி(யோ) நுழைந்துவிட்டது
    நிஜச்செடி என்பது.

    நிஜச்செடி நுழைந்தது செடிவரிசையில் அல்ல. மனதில் அல்லவா? அதுதானே ஆதன் நீங்கள் சொல்லும் இல்யூஷன்.

    அந்த இல்யூஷனை உண்டாக்க வேண்டுமெனில் நிஜச்செடி எங்கிருக்கிறது என்றுக் குறியிடும் வார்த்தைகளை கவிஞர் சொல்லாமல் விடலாம். அதாவது செடிகளுனூடே என்பதில் ஊடே என்பதை சொல்லாமல் விடலாம்.

    பிளாஷ்டிக் செடிகள் என்பவை மெடீரியலிஸ்டிக் வேல்யூஸ் அதாவது பொருள்சார்ந்த மதிப்புகள், நிஜச்செடி என்பதை உணர்வுசார்ந்த மதிப்புகள் என்று அதே இடத்தில் பார்க்க..

    அங்கும் இல்யூஷன் இல்லை.

    இதைத்தான் இந்துமதம் யுகம்யுகமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. எதனால் மனதை நிரப்பினாலும் மனதில் இறைவனின் வாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. இதுவும் இல்யூஷன் இல்லை.

    அறிவுக்கும் மனதிற்கும் இருப்பிற்கும் முரண்கள் வெளிப்படுவதை இல்யூஷன் எனலாம்.

    அப்படிப்பார்க்கப் போனால் இல்யூஷன் இருக்கிறது. கவிதையில் அல்ல. உங்களில்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post

    இது தொடர்பான வாதத்தில் நான் எழுதிய பகுதி ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளட்டுமா..?
    தாராளமாகத் தாருங்கள்,

    Quote Originally Posted by கௌதமன் View Post
    ஏனில்லாமல் ஜெயமோகனே இது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்". ஆனால் ஒரு குறை இந்த புத்தகத்துக்கு கோனார் கைடு இதுவரை வரவில்லை
    அந்த புத்தகத்திற்கே கோனார் கைடு கேட்கிறீர்களே? எப்படிங்க சார் இப்படி?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 4 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •