Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 36

Thread: ஓரு நிமிடக்கதை.....நல்ல...எண்ணெய்...!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஓரு நிமிடக்கதை.....நல்ல...எண்ணெய்...!!

    ”ஆச்சா....பலகாரமெல்லாம் செஞ்சு முடிச்சாச்சா?”

    கேட்டவரைப் பார்த்து....

    “ஆச்சுங்க ஐயா....ஒவ்வொரு முறையும் பலகாரம் செஞ்சு முடிக்கும்போது தவறாம இங்க வந்து நிக்கறீங்களே ஏங்கையா...எங்க மேல நம்பிக்கையில்லையா?”

    “அட பைத்தியக்காரா....என்கிட்ட வேலை செய்யறவங்கள நம்பாம வேற யாரை நம்புவேன்....எங்க என் மேல இருக்கிற விசுவாசத்துல....எனக்கு நஷ்டம் ஏற்பட்டுடக்கூடாதேன்னு தப்பு செஞ்சிடப்போறீங்களோன்னுதான் நானே வந்து நிக்கறேன்”

    “என்னய்யா சொல்றீங்க நாங்க தப்பு செய்வோமா?”

    “டே கொழந்த....அப்படி செய்யறது உன்னைப் பொருத்தவரைக்கும் தப்பில்ல....எஜமான விசுவாசம்....ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும்....தப்புதான்....அத நீங்க செஞ்சாலும் நான் செஞ்ச மாதிரிதான்....சரி...சரி....அந்த எண்ணையையெல்லாம் ஒரு டப்பாவுலக் கொட்டி...எடுத்துட்டுப் போய் முனிசிபாலிட்டிக் குப்பைக் கொட்டுற இடத்துலக் கொட்டிட்டு வந்துடுங்க”

    “ஐயா அடிக்கடி சொல்றதுதான்....தப்பா நினைச்சுக்காதீங்க....ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணையை.....இன்னொருமுறை உபயோகப்படுத்தக்கூடாதுன்னு அப்படியே குப்பையிலக் கொட்றதுக்கு....மனசு கேக்கலைங்க....இன்னும் ஒரு தடவையாவது உபயோகப்படுத்தலாமே....லாபம் கிடைக்குமில்லைய்யா?”

    “கொழந்த...எனக்கு என் பாட்டன் முப்பாட்டன் சேத்துவெச்ச சொத்தே ஏராளமா இருக்கு. ஆனா உக்காந்து திண்ணா.....உள்ளதெல்லாம் போயிடும்....அதனாலத்தான்.....லாபக் கணக்குப் பாக்காம...முதலுக்கு வியாபாரம் பண்றேன்....இதை ஏன் அண்ணதானமா செய்யக்கூடாதுன்னு கேப்ப.....ஓசியாக் கொடுத்தா....அதுக்கு மதிப்பில்லடா....அதுக்குதான் ஒரு விலை....எல்லாருக்கும் கட்டுப்படியாகிற விலை.....இந்த ஓட்டலுக்குப் போனா....ஆரோக்கியமான சாப்பாடு.....அடக்கவிலையில கிடைக்கும்ன்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு அதக் கெடுத்து நான் இன்னும் பணக்காரனா ஆக விரும்பல”

    “உங்க நல்ல மனசுய்யா....ஆனா...இதே எண்ணையை நாம உபயோகிக்காம வேற ஓட்டல்காரங்களுக்குக் கொடுத்தா.....அவங்களுக்கும் மலிவா கிடைக்கும், நமக்கும் கொஞ்சம் பணம் கிடைக்குமேய்யா?”

    “அப்ப இங்க சாப்பிடறவங்க நல்லாருக்கனும், நம்ம எண்ணையை...மறுபடி, மறுபடி உபயோகிச்சு செய்யுற பலகாரத்த வேற ஓட்டல்ல திண்ணுட்டு வியாதி வர்ட்டுன்னு சொல்றியா....அப்ப நாம நல்லது செய்யனுன்னு நினைக்கறதோட அடிப்படையே அடிபட்டுப் போயிடுதேடா....நல்லெண்ணை தயாரிச்சு விக்கறவங்களே இதயம் தயாரிப்புன்னு சொல்லும்போது....அந்த எண்ணையை உபயோகப்படுத்திப் பலகாரம் செய்யுற நாம ஏன் இதை இதயத்தோட தயாரிக்கக்கூடாது?.......மூளை ஆயிரம் சொல்லும்....ஆனா இதயம் ஒண்ணுதான் சொல்லும்......அதுலதான் நல்ல மனுஷன் இருக்கிறான்......எதுல வேணுன்னாலும் ஏமாத்தலாண்டா....ஆனா வயித்துக்கு சாப்பிடற சாப்பாட்டுல ஏமாத்துனா......அவன் மனுஷனே இல்ல.....நான் மனுஷனா இருக்க விரும்பறேன்...”

    “பசின்னு வர்றவங்களோட பாக்கெட்டப் பாக்காம...பசியைப் பாக்குற, ஆரோக்கியத்தப் பாக்குற இந்த ஓட்டலோட ஓனர் நல்லா இருக்கனும்ப்பா”

    தர்மலிங்கத்தின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகும் சிலரின் வார்த்தைகள் குழந்தைசாமியின் காதுகளில் விழுந்தது. உபயோகித்த எண்ணையைக் குப்பையில் கொட்டினான்......நிமிர்ந்துபார்த்து தர்மலிங்கத்தைக் கும்பிட்டான்.
    Last edited by சிவா.ஜி; 14-03-2012 at 11:10 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மனிதாபிமானம், தர்மசிந்தனை, விழிப்புணர்வு , அன்னதானம் என்ற பெயரில் மக்களைச் சோம்பலுக்காளாக்காத நல்லெண்ணம் என்று எல்லாத் தரப்பிலும் நியாயம் பேசும் நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் அண்ணா.

    வீட்டிலேயே சிலர் இதுபோல் செய்ய முன்வருவதில்லை. உபயோகித்த எண்ணெயையே மறுபடி மறுபடி உபயோகித்த்தால் புற்றுநோய் வரக்கூடும் என்பதை அறியாமல், சிக்கனம் பார்க்கிறேன் என்று ஆரோக்கியக் கேட்டை விளைவித்து, அதன்பின் கணக்கில்லாமல் மருத்துவத்துக்கு செலவழிக்கிறார்கள்.

    தெருவோரக்கடைகளில் வாங்கித்தின்னுமுன் யோசிக்கவேண்டிய விஷயம் ஆரோக்கியம். அவர்கள் இல்லாதவர்கள். அவர்களால் இப்படி நினைக்க முடியாது. ஆனால் பணம் இருப்பவர்கள் தாராளமாய் நல்ல தரமான ஆரோக்கியமான உணவை எளியவர்களும் உண்ணும் வண்ணம் இப்படித் தரலாமே. ஆக்கபூர்வ சிந்தனையை மறுபடியும் பாராட்டுகிறேன் அண்ணா.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைத்தான் தங்கையே....வீட்டிலும் பலர் இப்படித்தான் அறியாமையிலும், சிக்கனத்துக்காகவும் செய்கிறார்கள். அதை தவிர்ப்பதே நல்லது.

    அதேபோல பணத்தோடு பணத்தைச் சேர்க்க மிகப்பெரிய உணவகங்களும் இதைத்தான் செய்கின்றன.....அதிக லாப நோக்கில்லாமல்....இதனை சேவையாய் செய்யக்கூடிய பெரும்பணக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.

    நன்றி தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ஆஹா

    ஒரு நிமிடக் கதை என்றாலும் ஆயிரம் அர்த்தங்களும் படிப்பினையும் கொண்ட கதை. நாங்கள் எங்கள் ஹேகாஸ் கேட்டரிங்கினூடாக செய்யும் உணவுகள் சுவையாக் இருப்பதற்கு காரணமே இந்த பழைய எண்ணெய் பாவிக்காதது தான்.

    ஒரு தடவை சமையலுக்கு என பாவித்த எண்ணெய் எக்காரணம் கொண்டும் மீண்டும் பாவிப்பதில்லை அங்கேயே வீசி விடுவோம். கொஞ்சம் நஷ்டம் தான் எனிலும் சிற்றுண்டி, உணவுகளின் சுவை நிலைத்து தொடர்வதால் ஆர்டர்கள் தொடர்கிறது.

    கதையின் சொல்லபட்ட விடயமான அதிக லாபமில்லாமல் முதலுக்கும் நஷ்டமில்லாமல் விற்பனை என்பதும் நாம் பின்பற்றுவதே..

    ஓசியாகொடுத்தா அதுக்கு மதிப்பில்லடா என நச்சுன்னு தலையில் கொட்டி சும்மா கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பில்லைன்னு உணர்த்தி விட்டீர்கள்.பாராட்டுகள் சிவா அண்ணா..

    கதைக்குள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை கொடுத்தமைக்காய் நன்றி அண்ணா.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    நல்ல...எண்ணை...ஒரு நல்ல எண்ணக் கதை!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    அதனாலத்தான்.....லாபக் கணக்குப் பாக்காம...முதலுக்கு வியாபாரம் பண்றேன்....இதை ஏன் அண்ணதானமா செய்யக்கூடாதுன்னு கேப்ப.....ஓசியாக் கொடுத்தா....அதுக்கு மதிப்பில்லடா....அதுக்குதான் ஒரு விலை....எல்லாருக்கும் கட்டுப்படியாகிற விலை.....இந்த ஓட்டலுக்குப் போனா....ஆரோக்கியமான சாப்பாடு.....அடக்கவிலையில கிடைக்கும்ன்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு அதக் கெடுத்து நான் இன்னும் பணக்காரனா ஆக விரும்பல”
    ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு கதையில் ஒரு அற்புதமான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல படிப்பினை சிவாஜி!!! ஆனால் இது உண்மையில் நடக்கிறதா? கொஞ்சம் சந்தேகம்தான்.

    இன்னும் நிறைய கொடுங்கள்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    குழம்பை சுண்ட வைத்து பல நாட்களுக்குப் பயன்படுத்து கின்ற தாய்மார்கள், இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நல்ல படிப்பினை சிவாஜி!!! ஆனால் இது உண்மையில் நடக்கிறதா? கொஞ்சம் சந்தேகம்தான்.

    இன்னும் நிறைய கொடுங்கள்.


    நாங்கள் நடத்துகிறோம். எங்கள் பிசினஸ் மந்திரமே குறைந்த லாபம் நிறைந்த ஆர்டர் என்பதுதான்.

    ஐந்து பேரிடம் இரண்டு ரூபாய் லாபம் என பத்து ரூபாய் சேமிப்பை நல்ல சுவையான் தரமான உடனடி பொருட்களை பாவித்து பத்துபேரிடம் ஒரு ரூபாய் லாபம் பார்க்கிறோம்.

    இணையதள, தொலைக்காட்சி விளம்பரங்கள் இன்றியே நிலைத்து தொடர்கிறோம் ஆரோன் அவர்களே..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    கீதம் சொல்வது போல் வீட்டிலேயே பலர் இதைச் செய்வதில்லை. காய்ச்சிய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் காய்ச்சி பயன்படுத்துவது உடல் நலத்துக்குப் பெரும் கேடு விளைவிக்கும்.
    ஓசியில் கிடைக்கும் பொருளுக்கு மதிப்பில்லை, வயித்துக்குப் போடுற சாப்பாட்டுல ஏமாத்துனா அவன் மனுஷனே இல்லை, மூளை ஆயிரம் சொல்லும் ஆனா இதயம் ஒன்னு தான் சொல்லும் போன்ற நல்ல பல கருத்துக்களைச் சொல்லி ஆரோக்கியம் பற்றிய நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குட்டிக் கதை.பாராட்டுக்கள் சிவாஜி சார்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by Hega View Post
    நாங்கள் நடத்துகிறோம். எங்கள் பிசினஸ் மந்திரமே குறைந்த லாபம் நிறைந்த ஆர்டர் என்பதுதான்.

    ஐந்து பேரிடம் இரண்டு ரூபாய் லாபம் என பத்து ரூபாய் சேமிப்பை நல்ல சுவையான் தரமான உடனடி பொருட்களை பாவித்து பத்துபேரிடம் ஒரு ரூபாய் லாபம் பார்க்கிறோம்.

    இணையதள, தொலைக்காட்சி விளம்பரங்கள் இன்றியே நிலைத்து தொடர்கிறோம் ஆரோன் அவர்களே..
    பாராட்டுக்கள் ஹேகா!!! இன்னும் நிறைய செய்யுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

    நீங்கள் செய்வதைப் பார்த்தால் நிகழ்காலத்திலும் இது சாத்தியமே. அதனால் என்னுடைய எழுத்தை நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சக்கரவர்த்தித் திருமகள் திரைப்படம் என நினைக்கிறேன் அதில் ஒரு பாடல் கலைவாணரும் , சீர்காழியும் பாடியிருப்பார்கள். திரையில் கலைவாணரும் , எம்.ஜி. இராமச்சந்திரனும் நடித்திருப்பார்கள். கேள்வி பதில் வடிவிலான போட்டிப் பாடல். இடையிலே இப்படி வரும்.

    அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

    பல திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே


    பரதேசியாய் திரிவதெதனாலே
    அவன் பத்து வீட்டு சோத்து ருசி பாத்ததாலே...

    இலவசங்கள் சோம்பேறித்தனைத்தை வளர்க்கும் என்பது ஆணித்தரமான வாதம். இதை அருமையாகக் குட்டியிருக்கிறார்.

    அதோடு இப்போது பல நிறுவனங்களும் நாங்கள் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மறுமுறை உபயோகிப்பதில்லை என்று வெளியே சொல்லிவிட்டு அந்த எண்ணெயை பிற சிறு கடைகளுக்குக் கொடுத்து லாபம் பார்த்து விடுகின்றன. இதையும் கண்டறிந்து குட்டியிருப்பது. சிவா அண்ணாவின் சமூகத்தின் மீதான கூர்நோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

    காலத்திற்கேற்ற கதை...!
    வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து படையுங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •