Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 41

Thread: நான் படித்ததில் மிகவும் பிடித்தது ! ! !

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    நான் படித்ததில் மிகவும் பிடித்தது ! ! !

    அப்பா
    அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:
    நான்கு வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
    எழு வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
    எட்டு வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
    12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க
    அவசியமில்லை.
    14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
    21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த என்ன எதிர் பார்க்க முடியும்?
    25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
    30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
    35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட
    வேண்டும்.
    50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
    60 வயத்ல் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
    65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு
    யோசனை கேட்கலாம்.

    நன்றி : ஜெயராஜன்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    பெரும்பாலும் அனைவரும் ஒத்து கொள்வார்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அப்பாவை பற்றிய மதிப்பீட்டிலேயே ஒருவரது வயதையும் மதிப்பிட்டுவிடலாம் போலிருக்கே..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    சில விஷயங்கள் ஒத்து போகவில்லை என்றாலும் ஏற்று கொள்ள கூடிய பாய்ண்டுகளும் இருக்க தான் செய்கிறது

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    கவிஞர் கண்ணதாசன்

    கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''


    நன்றி: jeyarajanm.blogspot.in
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    கண்ணதாசன் குறித்த செய்தி மிகவும் அருமை ஜெயந்த அவர்களே...நன்றி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Dr.சுந்தரராஜ் தயாளன் View Post
    கண்ணதாசன் குறித்த செய்தி மிகவும் அருமை ஜெயந்த அவர்களே...நன்றி
    பின்னூடத்திற்கு நன்றி Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #8
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் அப்பாவைக்குறித்து சொல்லியது யாவும் அம்மாவுக்கும் பொருந்துகிறது. முகநூலில் அம்மாவைக் குறித்து இதேபோல் படித்தது நாபகம் வருகிறது.நன்றி ஜயந்த

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Dr.சுந்தரராஜ் தயாளன் View Post
    நீங்கள் அப்பாவைக்குறித்து சொல்லியது யாவும் அம்மாவுக்கும் பொருந்துகிறது. முகநூலில் அம்மாவைக் குறித்து இதேபோல் படித்தது நாபகம் வருகிறது.நன்றி ஜயந்த
    தாய்க்கு மட்டுமல்ல நாம் நெருங்கியவர்கள் என நினைக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    ஒரே ஒரு பாட்டு ! ! !

    ஒரே ஒரு பாட்டு ! ! !

    உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், “”சோறு சூடாக இருக்கிறது. விசிறு,” என்றார். “பழைய சோறு எப்படி சுடும்?’ அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

    “”நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
    பெருமை படைத்து இவ்வுலகு”

    என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் “”நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை” என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

    “”அடியிற்கினியாளே அன்புடையாளே
    படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
    பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
    என் தூங்கும் என்கண் இரவு”
    என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

    “”அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!” என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

    இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

    நன்றி – தினமலர்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. Likes ஜானகி liked this post
  12. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    ஈமு : ஏமாறச்சொன்னது யாரோ...???

    தேக்கு மரம், சந்தன மரத்தில் ஆரம்பித்து, பெனிபிட் பண்ட், பைனான்ஸ் கம்பெனி, காந்தப் படுக்கை, கோல்ட் கிரஸ்ட், அயல்நாட்டில் வேலை, தீபாவளிச் சீட்டு என பாடுபடாமல் சம்பாதிக்க ஆசைப்பட்டு, பாடுபட்டு சேர்த்த பணத்தை தொலைத்தவர்கள் ஆயிரக்கணக்கில்! இழந்த தொகையோ பல கோடிக்கணக்கில் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இல்லாததற்கு பேராசைப்பட்டு இருப்பதை இழந்து இன்றும் பனகல் பார்க்குகளிலும், பெருந்துறை ஹோட்டல்களிலும் கூடி புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.. இந்த வரிசையில் அடுத்த இதோ லேட்டஸ்ட்…“ஈமு” கோழி வளர்ப்பு.

    “ஈமு” கோழி குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்: -

    ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவை என்று சொல்லப்படும் (பறக்காத பறவை!) ஈமு கோழிகள், ’ரேட்டைட்’ இனத்தை சேர்ந்தவை. இந்த இனப் பறவைகளில் இப்போதைக்கு உயிருடன் உலவுவது தீக்கோழிக்கு அடுத்ததாக ஈமு கோழிகள். (அடுத்ததா தீக்கோழி வளர்ப்பு ஆரம்பிச்சிடப்போறாங்க!).

    ஏறத்தாழ 2 மீட்டர் உயரமும், 45 கிலோ எடை வரையும் வளரக்கூடியது. எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக் கூடிய ஈமு கோழிகள், அவற்றின் இறைச்சி, முட்டைகள், தோல், தோலிருந்து பெறப்படும் எண்ணை போன்ற விலை மதிப்புமிக்க பொருட்களுக்காக வளர்க்கப்படுகின்றன.

    நன்கு வளர்ச்சியடைந்த ஈமு கோழியானது, 45-50 கிலோ எடை இருக்கும். கொழுப்பு சத்து இல்லாதததால் ஈமுக் கோழியின் இறைச்சியை ரத்த கொதிப்பு, சர்க்கரை மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம். இக்கோழியின் தோல் சாயமிடுவதற்கும், இறகுகள் பிரஷ் தயாரிக்கவும், முட்டை ஓடுகள் அலங்கார வேலைகளுக்கும், தோலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவதுக்கும் பயன்படும் என்றும் கூறுகிறார்கள். அதாவது, ஈமு கோழிகள் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற ரீதியில் தான் நம்மூரில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

    ஈமு கோழி பண்ணை வைப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதும். இடம் இருந்தால் கூடுதல் வருமானம். ருபாய். 1.5 லட்சம் முதலீடு செய்தால், 3 மாத ஈமு கோழிக் குஞ்சுகள் (5 அல்லது 6 ஜோடி) கொடுக்கப்படும். இதை 18 மாதங்கள் நாம் வளர்க்க வேண்டும். அதற்கான உணவை நமக்கு ஈமு கோழிகள் தரும் நிறுவனங்களே, மாத மாதம் அனுப்பிவிடுவார்கள். இதை நாம் பராமரிப்பதற்காக மாதம் 6000 – 8000 வரை தரப்படும். நமது இடத்திலே அது பராமரிக்கப்பட்டால், கூடுதல் மாத வருமானமுண்டு (போனஸும் உண்டு). இதற்காக குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும். கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனால், காப்பீடு வசதியுமுண்டு. 18 மாதம் முடிந்த பிறகு அந்த ஈமு கோழிகளையும் அதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை (ஒரு முட்டை ரு. 1500 – 2000 வரை) வாங்குவதோடு, நம் முதலீட்டு பணத்தையும் திருப்பி தந்து விடுவார்கள். இப்படி நம்மிடம் வாங்கப்பட்ட வளர்ந்த ஈமு கோழிகளை ஏற்றுமதி செய்து, லாபம் அடைவோம் என்று இந்த நிறுவனங்கள் பறைசாற்றின. மேலும், நாம் வியாபாரத்தை தொடர விரும்பினால், மீண்டும் 3 மாத குஞ்சுகளிருந்து ஆரம்பிக்கப்படும். மேலும், வியாபாரத்தை விரிவாக்க விரும்பினால், வங்கி (NABARD) கடன் வசதியும் உண்டு இதனால், இந்தியாவில் ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேஷ் முதலான மாநிலங்களில் ஈமு வளர்ப்பு நிறுவனங்கள் வேருன்ற ஆரம்பித்தன. மேலும், தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, பல்லடம், புதுக்கோட்டை, வாலாஜாபாத், கொடைக்கானல், மதுரை முதலான பகுதியில், இத்தகைய ஈமு நிறுவனங்கள் விரிவடைந்தது. இதனால், மற்ற கால்நடை வளர்ப்புக்கு இணையாக ஈமு கோழி வளர்ப்பும் தங்களுக்கு நல்ல வருமானத்த ஈட்டி தரும் என்று மக்களின் எண்ண அலையாக இருந்தது.

    கிராமத்தில், விவசாயத்தை நம்பி நஷ்டமடைந்த விவசாயிகள், இத்தகைய முதலீடுகள் ஈர்த்தது ஆச்சரியமில்லை. நகர்புறவாசிகளுக்கு, நிலமும் நேரமில்லாத குறையை, இந்த நிறுவனங்களே தங்களின் இடத்தை கொடுத்து பராமரிக்கும் திட்டத்தின் மூலம் தீர்த்ததால், அவர்களும் இதில் ஐக்கியமாக காரணமாக அமைந்தது. விவசாய நிலங்களேல்லாம் பண்ணைகளாக மாறின. சேமிப்புகளும், நகைகளும், விற்கப்பட்ட நிலங்களின் மூலம் கிடைக்கப் பெற்ற பணமும், ஈமு கோழி வளர்ப்புக்கு முதலீட்டாக்கப்பட்டது. இனி, நிஜத்திற்கு வருவோம்.

    1987ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் வணிகரீதியாக ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவன்ங்களோ இல்லாத்தால், 1996ல் ஆஸ்திரேலிய பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை, 2005ல் 20000 ஆக குறைந்ததன் மூலம், உள்ளுர் சந்தையிலே ஈமு மதிப்பிழந்த பொருளாக மாறி விட்ட்தாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணைய் எடுக்கும் நிறுவனங்களோ, இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை. அதே போல், தமிழகத்திலிருந்து, ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த பொருளும் ஏற்றுமதி செய்யப்படவுமில்லை, அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கில்லை. இதையெல்லாம் விட ஈமு இறைச்சியை உள்ளூரிலும் சந்தைப் படுத்த முடியவில்லை. கோழி இறைச்சிக்கு நல்ல டிமாண்ட் இருக்கும் நம்மூரிலேயே ஈமு இறைச்சியை யாரும் சீண்டவில்லை. “சப்பு சப்புன்னு இருக்குதுங்க. அதை சாப்பிடுறதுக்கு சும்மாவே இருந்திடலாம்” என்கிறார் ‘ஈமு பிரியாணி’ என்று சொல்லப்பட்ட பிரியாணியை ஈரோட்டில் சாப்பிட்டு நொந்து போயிருக்கும் நண்பர் ஒருவர். ’காக்கா பிரியாணியே நல்லா இருக்கும்’ என்பது இன்னொரு கமெண்ட்!

    இப்படி இருக்கும் சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் எப்படி தொழில் நடத்தினார்கள் என்று பார்ப்போம்.

    இந்த ஈமு நிறுவனங்கள், முதலில் முட்டைகளை கொள்முதல் செய்து அது குஞ்சுகளான பின்னர், முதலில் ஈமு பண்ணை வைக்க வருபவரிடமிருந்து 1.5 லட்சம் வாங்கிக் கொண்டு, குஞ்சுகளை தருகின்றனர். பின்னர் அவருக்கு முதல் 2-3 மாதங்கள், பராமரிப்பு செலவுக்கு ரு. 8000 – 10000 கொடுக்கப்படுகிறது. தமக்கு முறையாக வருமானம் வருகிறது என்று நம்பி, தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்களையும் இத்திட்டத்தில் சேர வைக்கிறார் ( இதற்கு தனி கமிஷன் சேர்பவர்களுக்கு உண்டு).

    ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், திரை நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்து, முதலீடு செய்ய தூண்டுகின்றனர். ஒன்று இருபதாகி, இருபது இருநூறாக உயர்ந்து, சங்கிலி போல் தொடர்கிறது. இதனால், முன்னால் வந்தவர்க்கு பின்னால் வந்தவர்களின் முதலீட்டு பணத்திலிருந்து சுலபமாகப் பணம் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனங்கள், நிலமில்லாமல் முதலீடு செய்தவர்களுக்கு, ஒரே பண்ணையை பலருக்கும் காண்பித்து, இதுதான் உங்கள் பண்ணை அனைவரிடத்திலும் தெரிவிக்கின்றனர்.

    முட்டை கொள்முதல் – குஞ்சுகளின் உற்பத்தி – குஞ்சுகள் விநியோகம் – மீண்டும் முட்டை கொள்முதல் என்ற சுழற்சி முறை வியாபாரம்தான் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முட்டை வியாபாரத்தை தவிர வேறு எந்த வித வியாபாரமும் நடப்பதில்லை. மேலும் முட்டை கொள்முதலும் அவர்கள் விருப்பப்பட்ட விலைக்குதான் எடுத்துக் கொள்கின்றனர். ஏனென்றால், சந்தையில் முட்டைகளின் தேவைகளைப் பொறுத்தும், முட்டைகளின் வரவை பொறுத்துதான், விலை நிர்ணயிக்கபடும். ஆட்டு இறைச்சியை விட ஈமு இறைச்சி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்பட்டாலும், ஈமுவின் இறைச்சியை, சோதனை அடிப்படையில்தான் மக்கள் உண்டார்களே தவிர, ருசிக்காக உண்ணவில்லை. தற்போதய சந்தை நிலவரப்படி, வளர்ச்சியடைந்த ஈமுவை விற்பதாக இருந்தாலும் அடி(மாட்டு)ஈமு விலைக்கு போவதும் சந்தேகம் தான். இதனால், புதிய முதலீடுகள் நின்று போகும் அபாயம் உள்ளது என்பதை இந்த ஆண்டு முதலே, இதனைப் பற்றிய எச்சரிக்கை மணி, மாவட்ட கலெக்டர் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், அடிக்கப்பட்டது. புதிய முதலீடுகள் நிற்கும் பொழுது, முட்டை கொள்முதலும் மற்றும் மாத வருமானமும் நிறுத்தப்படுவதோடு, முதலீட்டு பணத்துக்கும் நாமம் போட்டு விட்டு, நிறுவனங்கள் காணாமல் போய் விடும். இதைத்தான் தற்போது “சுசி ஈமு பார்ம்ஸ்” அரங்கேற்றியுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனமே ஓடி விட்ட நிலையில், இதனைப் பின்பற்றி இன்னும் பல அக்கடா துக்கடா நிறுவனங்களும் முதலீட்டாளர்களின் தலையில் துண்டைப் போட்டு, நெற்றியில் நாமத்தைப் போட்டு ஓடப் போவது நிச்சயம். மக்களை விடுங்கள்.. இவர்களுக்கு இவ்வளவு காசை சம்பாதித்துக் கொடுத்த ஈமுக் கோழிகளையும் ‘அம்போ’வென விட்டு விட்டு ஓடுகிறார்கள். தீவனமின்றி ஈமுக் கோழிகள் ஒவ்வொன்றாக சாகின்றன. உயிருடன் இருக்கும் ஈமுக்களோ, வேறு வழியின்றி செத்துக் கிடக்கும் சக ஈமுக்களை தின்று பசியைத் தீர்க்கும் கொடுமையும் நடந்தேறுகிறது.

    புதுப்புது உத்திகள் கொண்ட மோசடிகள் தொடர்ந்து நம்மிடம் வந்த வண்ணம்தான் உள்ளன. நாமும் சளைக்காமல், இந்தத் திட்டம் ரொம்ப நல்ல திட்டம், இவர்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பி பணத்தைப் போட்டு ஏமாறுவதும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. பணத்தை முதலீடு செய்யும் போது யோசிக்காமல், பணத்தை இழந்து ஏமாறும் போது, கூப்பாடு போடுவதில் என்ன நியாயம்? இவர்களை ஏமாற சொன்னது யார்”?

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

    நன்றி: கட்டுரை.காம்
    Last edited by jayanth; 16-08-2012 at 08:30 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  13. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஒரு தொழில் பற்றிய விவரங்களையும் நுணுக்கங்களையும் சரிவரத் தெரிந்துகொள்ளாமல், நினைத்துப் பார்க்க இயலாத வகையில் அதீதமான வருமானம் வரும் என்று பரப்பப்படும் விளம்பரங்களில் மயங்கி, பேராசை மேலோங்க கடன் வாங்கியேனும் அதில் முதலீடு செய்துவிட்டு, பின் உள்ளதையும் இழந்து, குய்யோ முறையோ என்று புலம்புவது நம்மவர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே.

    ஆஸ்திரேலியாவிலேயே ஈமுப் பண்ணைகள் தங்கள் செல்வாக்கை இழந்துவரும் சூழலை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டாமா? பறவைகள் தத்தம் இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டச் சூழலில் வளர்வது மிகவும் எளிதான செயல் அல்லவே. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியப் பண்ணையாளர்களும் சளைத்தவர்கள் இல்லை. ஆப்பிரிக்கப் பறவையான தீக்கோழி (ஆஸ்டிரிச்) வளர்ப்புப் பண்ணைகளைத் துவங்கி, மோசம்போன கதைகளும் உண்டு.

    இனியேனும் மக்கள் விளம்பர நைச்சிய வார்த்தைகளை நம்பாமல், எதிலும் முதலீடு செய்யுமுன் எதையும் தீர ஆய்ந்து முடிவெடுப்பார்களா?

    பகிர்வுக்கு நன்றி ஜெயந்த் அண்ணா.
    Last edited by கீதம்; 18-08-2012 at 08:30 AM.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •