இந்திய அணிக்கான இப்போதைய தேவை சச்சினின் ஓய்வல்ல, மாறாக பின்வருவனவாக இருக்கலாம்...
- யாதவ் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களை வளர்க்கணும், நல்ல வேகத்தில் பந்து வீசும் யாதவுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்கி ஒரு அனுவமுள்ள பந்து வீச்சாளராக மாற்ற வேண்டும்.
- சுழல் பந்து வீசாத சகலதுறை ஆட்டக் காரர்களைத் தேடிப் பிடிக்கணும் (), இலங்கையைப் பாருங்க மத்யூஸ், திரிமேனே, திசர பெரரா, மஃரூக் என வரிசையாக நின்கிறார்கள்...
- இறுதி ஓவர்களில் தோனியுடன் துணை நின்று அடித்தாட நல்ல ஃபினிசர்கள் தேவை, ஜடேஜா ஐ பி எல்லில் அடிப்பது போல அவுஸ்திரேலியாவில் அடிக்க முடியாமல் திணறுவதாகத் தெரிகிறது, யுவராஜ் இல்லாத இழப்பு இந்த இடத்தில் தெளிவாகத் தெரிகிறது.
- இறுதியாக எல்லா வீரர்களும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடினால் போதும், வெற்றி தானே வரும்.
Bookmarks