Results 1 to 1 of 1

Thread: சிக்னலில் நிற்காதே!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    சிக்னலில் நிற்காதே!

    இச்சைக்கினிய என் காதலியே! சிக்னலில்
    பச்சை விளக்குகள் விழுந்த பின்னும்
    வண்டிகள் நகர மறுக்கின்றன
    நீ அங்கே நிற்பதால்.

    தாய்மார்கள் இப்போதெல்லாம்
    நிலாவைக்காட்டி சோறு ஊட்டுவதில்லை
    உன்னைக் காட்டித்தான்.

    திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும்
    கங்கையும் உமையும் உறங்கும் வேளையில்
    கடைக்கண்ணால் உன்னைக் கண்டு மகிழ்கிறான்.

    வடம் பிடிக்காமலேயே நகரும்தேர் நீ! - உன்மனதில்
    இடம் பிடிக்க காளையர்கள் காளைகளை
    அடக்க முனைகின்றனர் அலங்கா நல்லூரிலே!

    " தானே " புயலில் தப்பிப் பிழைத்தாலும்
    மானே ! உந்தன் மைவிழிப் புயலில்
    காணாமற் போனவரைக் கணக்கெடுக்க இயலாது.
    Last edited by M.Jagadeesan; 17-01-2012 at 07:17 AM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •