இனி வரும் இரவுகளை என்னவென்று நீ சொல்வாய்?
இனி இரவுப் போர்வைக்குள்,
ஒரு போர் மூளும்..
நாணம் உடைந்துவிட
பெண்மை சரணடையும்...
உதிரும் வியர்வையிலே
மிதக்கும் அந்த இரவுகள்..
நீ ரசிக்கும் கணங்கள்??
எல்லை மீறிய பார்வைகளை,
இடம் பெயர்க்க முயன்று,
தோற்றுப் போன எல்லாத் தருணஙளும்..
நீ வெறுத்த கணங்கள்...??
வீம்புக்காய் அணை கட்டி தேக்கி வைக்கும் வார்த்தைகள்,
கண்கள் வழி பாய்கையில்,
உன் கோபம் கொல்ல நினைத்தேன்..
எனைப் பிரிகையில்??
கவிதையின் ஜன்னல் திறந்து கொள்ளும்,
அதில் வார்த்தைகளாய் சொட்டிவிடும் உன் நினைவுகள்..
அப்போ வார்த்தைகள் தீர்ந்துப் போனால்,
என் நினைவுகளும் அழிந்திடுமா?
நினைவுகள் பெரும் துயரடி,
வார்த்தைகள் அதில் கண்ணீர்,
கண்ணீர் வற்றியப் பின்னும் உன் நினைவுகள் கனக்குமடி..
நாம் பேசிக் கொள்ளாத நாட்களில் நீ ரசித்தது??
விழியோரம் மைத் தீட்டி,
என்னுள்ளே தீ மூடும் ஓர விழிப் பார்வையில்
உருகி ஓடியத் தருணங்கள்..
அறிமுகம் கிடைத்தபோது?
தயங்கிப் பூக்கும்
இப்பூவிதழ்களின்
பூர்வீகம் தேடி அலைந்தேன்..
நட்பு பகிர்கையில்??
கள்ளத்தனமாய்க் காத்துக் கிடந்து,
கடிந்து கொண்டது என் காதல்..
காதல் கனிந்தவுடன்??
பனைமரக் கள்ளாய் காதலைக் குடித்தேன்..
கவிதைகள் நூறு சொல்ல நினைக்க,
மூன்றே வரிகளில் வியர்வை துடைத்தேன்..
திருமண நிச்சயம் என்றதும்??
போதை தெளிந்தது..
"நான் எங்க இருக்கேன்"..???
?!@#$%^&*(
Bookmarks