பாடும் பறவைக்கெல்லாம்
உன் குரலால் வெட்கம் தந்தாய்!
எழுதிய கவிதைக்கெல்லாம்
உன் விழியால் பதில் கவி தந்தாய்! பதிலடி தந்தாய்!
அழுத்த மாற்றம் புயல் வர வைக்கும்!
குளிர்காற்று மழை வர வைக்கும்!
முகிழ் உரசல் இடி வர வைக்கும்!
உன்னைக் கண்டால் இம்மூன்றும் எனக்கும்!
அகநானூறும் புறநானூறும்
கொண்ட பாறை நீ தானடி!
பய பக்தியும் தொழில் புத்தியும்
கொண்ட சிற்பி தான் நானடி!
நிலவதும் அந்த சூரியரும்
சேர்ந்து பெற்ற பிள்ளை நீ தானடி!
குலமகள் உன்னை கொத்தோடு
கொள்ளை அடிப்பவன் இங்கு நானடி!
நீயன்றி அணுவும் இல்லை!
நீயன்றி அகிலம் இல்லை!
நீயன்றி அந்தம்(அண்டம்) இல்லை!
சிவமும் இல்லை! பார்வதியும் இல்லை!
இனி தனிமை சிறை வாழ்க்கை இல்லை!
இனிமை குறை நாழிகை இல்லை!
அவளை பார்த்த நாள் முதலாய் தூங்கவில்லை நான்!
அறியாத வள்ளுவன் சொன்னான்!
கல்லாத கண் புண் என்றான்!
உன்னைக் கண்டால் போதும் புண்கள் கண்கள் ஆகுமே!
இதுவரை கருபொருள் இன்றி எழுதாமல் இருந்தேன் நான்!
இன்றுமுதல் காதல் காப்பியங்கள் மூச்சு உள்ளவரை படைப்பேனே நான்!
தமிழே நீ ஒளிந்ததும் போதும்!
என் கவியே நீ காத்ததும் போதும்!
என் சொல்லே ஓய்வெடுத்ததும் போதும்
அவளுக்கான இந்தப் பாவில் வந்து அழகு கொள்ளும்!
அவளைப் நான் மில்லி கணம் பார்த்ததும்
விழியே நீ இமைக்க மறந்தால்
இதயம் நீ துடிக்க மறந்தால்
என் இதழே அவளை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லும்!
எல்லைகள் கடந்த தீவிரம்
நடக்கும் காஷ்மீரம் நீயடி!
தொல்லைகள் பல ஆயினும்
விடா காக்கும் இந்தியன் நானடி!
நாடுகள் பல வாகினும்
நல் தமிழகம் நம் தாயடி!
பேடுகள் பலராகினும்
என் மகிழகம் நீ தானடி!
Bookmarks