Results 1 to 5 of 5

Thread: தமிழா விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Dec 2011
    Location
    Chennai
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    10,401
    Downloads
    76
    Uploads
    0

    தமிழா விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

    முல்லை பெரியாறு
    எல்லைத் தகராறு - இனி
    இல்லை ஆறு என
    எள்ளி நகையாடி
    தொல்லை தரலாம்
    தமிழா...
    விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

    அண்டை அயலார்
    ஆவியே போனாலும்
    ஆவியாகப் போனாலும்
    யாரும் பருகிட கூடாதென
    காவிரி நீரை மறுக்கும்
    பாவிகள் ஒரு புறம்
    தமிழா...
    துடித்திடு...கொதித்திடு...கொதித்தெழு...


    பாலாறு தேனாறு
    வாயாரக் கூறியது
    பழங்கதையாய் ஆனது
    காலாற நடக்கத்தான் முடியும்
    கால் நனைக்க முடியாமல்
    தமிழா...
    ஒடுத்திடு...தடுத்திடு...நடத்திடு...

    உறங்கும் சமயம்
    மறந்தும் மரத்துவிடாதே
    உன் கோவணம் கூட
    உருவப்படலாம்...
    தமிழா...
    விரைந்திடு...வீழ்த்திடு...வென்றிடு...

    அரசியல் விளையாட
    சதுரங்கத் தளமல்ல...
    சதிகாரர் நுழையும்
    பழிவாங்கும் களமல்ல..

    அப்பாவி மக்கள்
    அன்றாடும் அல்லலுறும்
    வாழ்க்கைத் தளம்....
    அனுசரனையாய் நடந்தால்
    அனைவருக்கும் நலம்...
    நடுநிலைமை தவறினால்
    ஆலாங்கால விஷம்...

    பாரதத்தின் பெருமை
    வேற்றுமையில் ஒற்றுமை...
    தமிழனின் பெருமை
    ஒற்றுமையில் வேற்றுமை...

    தமிழா ஒன்றுபடு
    ஒற்றுமை உணர்வுடன்
    வேற்றுமையை மறப்போம்
    மாற்றத்தை ஏற்படுத்துவோம்
    ஒன்றிடுவோம்
    வென்றிடுவோம்...

    தமிழா...
    விழித்திடு விழித்திரு விழித்தெழு
    துடித்திடு கொதித்திடு கொதித்தெழு
    ஒடுத்திடு தடுத்திடு நடத்திடு
    விரைந்திடு வீழ்த்திடு வென்றிடு...
    நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அழகான வரிகள். இன்றைய சூழலுக்கு ஏற்ற வரிகள்.
    மூன்று பக்கமும் அண்டை மாநிலத்தாரின் அத்துமீறல் அவ்வப்போது நடந்து கொண்டு இருந்தாலும், கேரளத்தார் அதிகமாய் அத்துமீற நினைக்கிறார்கள்.

    உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் தமிழா தூங்காதே தூங்காதே என்று எச்சரிப்பதாய் இருக்கிறது.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by sureshteen View Post
    முல்லை பெரியாறு
    எல்லைத் தகராறு - இனி
    இல்லை ஆறு என
    எள்ளி நகையாடி
    தொல்லை தரலாம்
    தமிழா...
    விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

    அண்டை அயலார்
    ஆவியே போனாலும்
    ஆவியாகப் போனாலும்
    யாரும் பருகிட கூடாதென
    காவிரி நீரை மறுக்கும்
    பாவிகள் ஒரு புறம்
    தமிழா...
    துடித்திடு...கொதித்திடு...கொதித்தெழு...


    பாலாறு தேனாறு
    வாயாரக் கூறியது
    பழங்கதையாய் ஆனது
    காலாற நடக்கத்தான் முடியும்
    கால் நனைக்க முடியாமல்
    தமிழா...
    ஒடுத்திடு...தடுத்திடு...நடத்திடு...

    உறங்கும் சமயம்
    மறந்தும் மரத்துவிடாதே
    உன் கோவணம் கூட
    உருவப்படலாம்...
    தமிழா...
    விரைந்திடு...வீழ்த்திடு...வென்றிடு...

    அரசியல் விளையாட
    சதுரங்கத் தளமல்ல...
    சதிகாரர் நுழையும்
    பழிவாங்கும் களமல்ல..

    அப்பாவி மக்கள்
    அன்றாடும் அல்லலுறும்
    வாழ்க்கைத் தளம்....
    அனுசரனையாய் நடந்தால்
    அனைவருக்கும் நலம்...
    நடுநிலைமை தவறினால்
    ஆலாங்கால விஷம்...

    பாரதத்தின் பெருமை
    வேற்றுமையில் ஒற்றுமை...
    தமிழனின் பெருமை
    ஒற்றுமையில் வேற்றுமை...

    தமிழா ஒன்றுபடு
    ஒற்றுமை உணர்வுடன்
    வேற்றுமையை மறப்போம்
    மாற்றத்தை ஏற்படுத்துவோம்
    ஒன்றிடுவோம்
    வென்றிடுவோம்...

    தமிழா...
    விழித்திடு விழித்திரு விழித்தெழு
    துடித்திடு கொதித்திடு கொதித்தெழு
    ஒடுத்திடு தடுத்திடு நடத்திடு
    விரைந்திடு வீழ்த்திடு வென்றிடு...
    இன்னிசை சிந்தியல் வெண்பா
    வெந்தவோர் புண்ணிலே வேல்பாய்ச்சும் மூன்றுமிகச்
    சொந்தமாம் சோதரர்போல்ச் சொல்கின்ற மாநிலத்தார்
    இந்தியரா நாமிடையில் இங்கு?

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அற்புதமான கவிதை!
    காலத்திற்கேற்ற கவிதை!!
    பாராட்டுக்கள்!!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    உணர்வை தூண்டிய வரிகள் ..நன்று
    வசிகரன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •