ஆசிரியர்: காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு.
மாணவன்: காந்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். ஆனால் ஜெயந்தி என்பவள் யார் என்று எனக்குத் தெரியாது சார்!
ஆசிரியர்: இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருபெண் ஒரு குழந்தை பெறுகிறாள்; இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
மாணவன்: அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் குழந்தை பெறுவதை நிறுத்துமாறு சொல்லவேண்டும் சார்!
லொள்ளு: நான் உன்னிடம் கோபமாகப் பேசும்போதெல்லாம் நீ திரும்ப என்னிடம் கோபம் கொள்வதில்லையே ! அது எப்படி உன்னால் முடிகிறது?
ஜொள்ளு: நான் அப்பொழுது டாய்லெட்டை சுத்தம் செய்யப் போய்விடுவேன்.
லொள்ளு: டாய்லெட்டை சுத்தம் செய்வதால் கோபம் தணிந்து விடுமா?
ஜொள்ளு: நான் டாய்லெட்டை சுத்தம் செய்வது உன்னுடைய டூத் பிரஸ்சினால்!
லொள்ளு: திருமணத்திற்கு முன்பாக மணமகனை குதிரையின் மீது ஏன் உட்கார வைக்கிறார்கள்?
ஜொள்ளு: ஓடிச்சென்று தப்புவதற்காக அவனுக்குக் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு அது.
லொள்ளு: திருமணத்தின்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொள்வதேன்?
ஜொள்ளு:குத்துச் சண்டை தொடங்குவதற்கு முன்பாக பாக்சர்கள் கை குலுக்கிக் கொள்வது நடைமுறைதானே!
ஜொள்ளு: டாக்டர்! நான் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்படுகிறேன். அதற்கு மருந்து ஏதேனும் உள்ளதா?
டாக்டர்: திருமணம் செய்து கொள்ளுங்கள்.
ஜொள்ளு: திருமணம் செய்து கொண்டால் நீண்ட நாட்கள் வாழ முடியுமா டாக்டர்?
டாக்டர்: இல்லை. நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் தங்கள் மனதைவிட்டு ஓடிவிடும்.
நன்றி: எபிக் உலாவி.
Bookmarks