படிப்பறிவில்லாத சாமான்யரும் மெத்த படித்த மேதாவிகளும் ஒருங்கே விவாதிக்க கூடிய ஒரு தலைப்பு என்றால் அது பொருளாதார கல்வியில் மட்டுமே சாத்தியம். கற்றவர்கள் புத்தகம் படித்து மனனம் செய்து வைத்ததை கருத்து என்றும் கல்லாதவர்கள் பட்டறிவால் கண்டதை கருத்து என்றும் சளைக்காமல் விவாதிக்கலாம். ஆனால் சில தனியார் மற்றும் அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு ஆதாயம் கிட்டும் வகையில் சிலர் தங்களை பொருளாதார மேதாவி என்று கூறிக்கொண்டு கருத்து திணிப்பு நடத்தவும் செய்கின்றனர். Lobbyist எனப்படும் இம்மாதிரியான நீரா ராடியாக்களை தமிழ் கூறும் நல் உலகம் இனம் கண்டு கொள்கிறதா? துக்ளக் 'சோ', சுப்ரமணிய சுவாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி, காங்கிரஸ் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் விற்பனர்களா? இல்லை இவர்கள் கூறுவது கூறட்டும். எங்களுக்கு சரியானது எது என்று நாங்கள் சத்தமின்றி தீர்மானம் செய்வோம் என்று தமிழ் கூறும் நல் உலகம் உஷாராக உள்ளதா? விவாதிப்போமா?
Bookmarks